Wednesday, February 26, 2014

அலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கிறது

அதிகாலையில் வரும் காதலியின் அலைபேசி அழைப்பு 
மெல்லிய சிணுங்கலுடன் கொஞ்சுகிறது சிலசமயம் கெஞ்சுகிறது 

 அகாலத்தில் வரும் மனம் கலங்கிய நண்பனின்  அழைப்பு 
துயர்  கொள்ள வைக்கிறது ஒரு முழு பொழுதையும் 
  
கடன் கொடுத்த நண்பனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பண்பலை வானொலி போல் ஒரே பாடலை திரும்ப திரும்ப போடுகிறது.

தற்கொலைக்கு முயல்பவனின் கடைசி அழைப்பு யாராலும் 
நீண்ட நேரத்திற்கு எடுக்கப்படுவதில்லை .

முன்னாள் காதலனின் அழைப்பை  நிராகரிக்கும்  காதலி 
ஒரு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுகிறேன் என்கிறாள் .

தொடர்ந்து அடிக்கும் அழைப்புகள் உங்கள் மீதும் என் மீதும் 
வீண் அதிகாரத்தையே கட்டமைகின்றன .

மிரட்டல் அழைப்புக்கள் பெரும்பாலும் ஒரு ரூபாய் 
போன் பூத்துகளில் இருந்தே வருகின்றன 

அரிதாக வேலை பற்றிய அழைப்புகள் மதிய நேர 
தூக்கத்திலேயே வருகிறது .

எப்போதாவது இனிய செய்தியை கொண்டுவரும் 
மாலைநேர அழைப்புகள் சூழலை ரம்மியமாக்குகின்றன .

இரவு நேர மனைவியின் அழைப்புக்கு , கோடம்பாக்கம் மேம்பாலம் 
தாண்டிவிட்டேன் என  கே கே  நகரிலேயே நிற்கிறேன் 

 ஆகவே அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது 




Saturday, February 22, 2014

என் பெயர்.' நாவல். அறிமுகக் கூட்டம்.


என் பெயர்.' நாவல். அறிமுகக் கூட்டம்.

மார்ச் 2, 2014, ஞாயிறு மாலை 6 மணிக்கு.

டிஸ்கவரி புக் பேலஸ்
மகாவீர் வளாகம், முதல் மாடி
எண் 6, முனுசாமி சாலை
கேகே நகர் மேற்கு
சென்னை 600 078
(புதுச்சேரி விருந்தினர் இல்லம் அருகில்)
தொலைபேசி: 044-65157525

அறிமுக உரை
'காவ்யா' சண்முகசுந்தரம்

மதிப்புரை
விஜய மகேந்திரன்
அமிர்தம் சூர்யா
உமா சக்தி
புருஷோத்தமன்
 ஏற்புரை
நிஜந்தன்

நிறைவுரை
வேடியப்பன்

Friday, February 21, 2014

மணிரத்னத்தின் திரை அழகியல்

மணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும் முக்கிய புத்தகமாக இது இருக்கும்...மணிரத்னத்தின் திரை அழகியல் நூலின் பெயர்.....எழுதியவர் கோவை எழுத்தாளர் செந்தமிழ் தேனீ ...புத்தகத்தை முதல் பிரதி படித்தவன் என்ற முறையில் இதை சொல்லுகிறேன்....பாலு மகேந்திரா குறித்தும் இவ்வகை புத்தகம் எழுத வேண்டி உள்ளது....செந்தமிழ் தேனீ  அவர்களிடம் கூறி இருக்கிறேன்...கண்டிப்பாக எழுத முயல்வதாய்  கூறினார்..

Wednesday, February 19, 2014

நிஜந்தனின் ''என் பெயர் ''நாவல்

'அப்போதெல்லாம் அரசு டிவி மட்டும் தான் அதில் செய்தி வாசிப்பாளர்கள் நட்சத்திர அந்தஸ்துடன் இருந்தனர்.ஒரு நாள் டிவி யில் செய்தி வாசித்து விட்டு மறுநாள் ரோடில் நடக்க முடியாது''....என் பெயர் நாவலில் நிஜந்தன் ....இந்த ஒரு வரி என்னை எண்பதுகளின் இறுதிக்கு நினைவுகளில் அழைத்து சென்றது...ஷோபனாரவி ,பாத்திமா பாபு ,சந்தியா ராஜகோபால் ,இனியன் சம்பத் ,ஈரோடு தமிழன்பன் ,நிஜந்தன் என்று எத்தனை  முகங்கள்!!!!....அவர்களில் நிஜந்தன் மட்டுமே இதை இன்று பதிவு செய்து இருக்கிறார் ....அது ஒரு பொற்காலம் !!!!

நிஜந்தனின் ''என் பெயர் ''நாவல் படித்துவிட்டேன்...பல சர்ச்சைக்குரிய கருத்துகள் ,உறவுகள் நாவலில் உள்ளன.இந்நாவல் குறித்த விமர்சன கருத்துகளை டிஸ்கவரி புத்தக கடையில் மார்ச் 2 நடக்கும் விமர்சனகூட்டத்தில் பேச இருக்கிறேன்

Saturday, February 15, 2014

சிவக்குமார் முத்தையாவின் குறுநாவல் தொகுப்பு “ஆத்தோர கிராமம்”.

சிவக்குமார் முத்தையாவின் குறுநாவல் தொகுப்பு “ஆத்தோர கிராமம்”. அவரது சொந்த முயற்சியால் புத்தகமாக கொண்டுவரப்பட்டு சரியாக விநியோகப்படாமல் முடங்கி இருந்தது. இதன் சில பிரதிகளை சிவக்குமார் எனக்கு அனுப்பி இருந்தார் . முழுமையாக படித்துமுடித்தேன். கிராமம் சார்ந்த அற்புதமான பதிவுகளைக்கொண்ட குறுநாவல்கள் அடங்கிய நல்ல புத்தகமான, இதுபோன்ற புத்தகங்கள் வாசகர்களை சென்றடையாமல் இருக்கிறதே என்று நண்பர் வேடியப்பனிடம் Vediyappan Discovery Book Palace கவலைப்பட்டேன். உடனே அந்த கவலையை என்னிடம் விடுங்கள் என்று அவர் புத்தகத்தை அதிகமான பிரதிகள் வாங்கிக் கொண்டதோடு , அவற்றை விற்பனை செய்துகொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதுபோன்ற கவனிக்காமல் கிடக்கும், சிறிய பதிப்பகங்களின் நல்ல புத்தகங்களை கண்டுபிடித்துக் கொண்டுவந்தால் அவற்றை டிஸ்கவரி புக் பேலஸ் விற்பனை செய்துகொடுக்க தேவையான உதவியை செய்யுமென்று சொன்னார். நண்பர்கள் இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொள்ளவும். குறிப்பு : நல்ல புத்தகங்கள் மட்டும்

“ஆற்றோர கிராமம்” புத்தகத்தை ஆன்லைனில் வாங்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

http://discoverybookpalace.com/products.php?product=ஆற்றோர-கிராமம்

Tuesday, February 11, 2014

எனக்கு பிடித்த நூறு புத்தகங்கள்

நன்றி தோழர் !!!
விநாயக முருகன்
இரண்டாயிரத்துக்கு பிறகு தமிழில் பல்வேறு பிரிவுகளில் வெளிவந்த எனக்கு பிடித்த நூறு புத்தகங்கள். இவை எல்லாம் இரண்டாயிரத்துக்கு பிறகு முதல் பதிப்பில் எழுதப்பட்டவை அல்லது தொகுக்கப்பட்டவை.. (சே.பிருந்தாவின் மழை பற்றிய பகிர்தல் தவிர) இந்த வருட புத்தக கண்காட்சிக்காக தனிப்பட்ட ரசனையில் தேர்வு செய்த பரிந்துரை. 

1. காடு (நாவல்) - ஜெயமோகன் 
2. ராஸ லீலா (நாவல்) - சாரு நிவேதிதா
3. ஆழி சூழ் உலகு (நாவல்) - ஜோடி குரூஸ்
4. வெட்டுப்புலி (நாவல்) - தமிழ்மகன் 
5. காவல் கோட்டம் (நாவல்) - சு.வெங்கடேசன்
6. சோளகர் தொட்டி (நாவல்) - ச.பாலமுருகன் 
7. கால்கள் (நாவல்) - ஆர்.அபிலாஷ் 
8. யாமம் (நாவல்) - எஸ்.ரா 
9. உப்பு நாய்கள் (நாவல்) - லட்சுமி சரவணக்குமார்
10. களவு காமம் காதல் (குறுநாவல்) - சாம் நாதன்
11. அழிக்க பிறந்தவன் (குறுநாவல்) - யுவகிருஷ்ணா 
12. 6174 (நாவல்) - க.சுதாகர் 
13. கொரில்லா (நாவல்) - (ஷோபா சக்தி) 
14. இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல்) - சல்மா 
15. தூப்புக்காரி (நாவல்) - மலர்வதி 
16. மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு 

17. பட்சியின் சரிதம் (கவிதை) - இளங்கோ கிருஷ்ணன்
18. மீன்கள் துள்ளும் நிசி (கவிதை) - நிலா ரசிகன் 
19. என்னைக் கடவுளாக்கியத் தவிட்டுக் குருவி 
(கவிதை) - வா. மணிகண்டன் 
20. உறுமீன்களற்ற நதி (கவிதை) - இசை 
21. சிவாஜி கணேசனின் முத்தங்கள் (கவிதை) - இசை 
22. உப்பு நீர் முதலை (கவிதை) - நரன் 
23. ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை (கவிதை) - 
அகநாழிகை பொன்.வாசுதேவன் 
24. மயிரு (கவிதை) - யாத்ரா
25. பரத்தையருள் ராணி (கவிதை) - லீனாமணிமேகலை
26. நீர்க்கோல வாழ்வை நச்சி - (கவிதை) - 
லாவண்யா சுந்தரராஜன் 
27. கருவேல நிழல் (கவிதை) - பா.ராஜாராம் 
28. அகி (கவிதை) - முகுந்த் நாகராஜன் 
29. ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது 
(கவிதை) - முகுந்த் நாகராஜன்
30. சூரியன் தனித்தலையும் பகல் (கவிதை) - தமிழ்நதி 
31. காந்தியை கொன்றது தவறுதான் (கவிதை) - 
ரமேஷ் பிரேதன் 
32. வனப்பேச்சி (கவிதை) - தமிழச்சி தங்கபாண்டியன் 
33. மஞ்சணத்தி (கவிதை) - தமிழச்சி தங்கபாண்டியன்
34. அதீதத்தின் ருசி (கவிதை) - மனுஷ்யபுத்திரன் 
35. பசித்த பொழுது (கவிதை) - மனுஷ்யபுத்திரன் 
36. கடைசி டைனோசர் (கவிதை) - தேவதச்சன் 
37. அந்தரங்கம் (கவிதை) - செல்வராஜ் ஜெகதீசன் 
38. இரவு மிருகம் (கவிதை) - சுகிர்தராணி 
39. அவளை மொழிபெயர்த்தல் (கவிதை) - சுகிர்தராணி 
40. பரத்தையர் கூற்று - சி. சரவண கார்த்திகேயன் 
41. ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதை) - செல்வராஜ் ஜெகதீசன் 
42. பூமியை வாசிக்கும் சிறுமி (கவிதை) - சுகுமாரன் 
43. நகுலன் கவிதைகள் (கவிதை) - நகுலன்
44. விருட்சம் கவிதைகள் (முழுக்கவிதைகள் கவிதை) - (தொகுப்பு நவீன விருட்சம் அழகிய சிங்கர்)
45. கல்யாண்ஜி கவிதைகள் (கவிதை) - (கல்யாண்ஜி)
46. ஞானக்கூத்தன் கவிதைகள் (கவிதை) - (ஞானக்கூத்தன்)
47. ஆத்மாநாம் படைப்புகள் (கவிதை) - ஆத்மாநாம் 
48. வேட்கையின் நிறம் (கவிதை) - உமாஷக்தி 
49. முலைகள் (கவிதை) - குட்டிரேவதி 
50. வீடு முழுக்க வானம் (கவிதை) - சே. பிருந்தா 
51. மழை பற்றிய பகிர்தல் (கவிதை) - சே. பிருந்தா 
52. நீரில் அலையும் முகம் (கவிதை) - அ.வெண்ணிலா 
53. பச்சை தேவதை (கவிதை) - சல்மா 
54. காதலியர் மேன்மை (கவிதை) - தபசி 

55. நகரத்திற்கு வெளியே (சிறுகதைத்தொகுப்பு) - 
விஜய மகேந்திரன் 
56. காட்டின் பெருங்கனவு (சிறுகதைத்தொகுப்பு) - 
சந்திரா
57. பூனைகள் இல்லாத வீடு (சிறுகதைத்தொகுப்பு) - 
சந்திரா
58. கடவுளைக்கண்டுபிடிப்பவன் (சிறுகதைத்தொகுப்பு) - 
அமிர்தம் சூர்யா 
59. என் வீட்டின் வரைபடம் (சிறுகதைத்தொகுப்பு) - ஜே.பி.சாணக்யா 
60. கனவு புத்தகம் (சிறுகதைத்தொகுப்பு) - ஜே.பி.சாணக்யா
61. அய்யனார் கம்மா (சிறுகதைத்தொகுப்பு) - நர்சிம்
62. பதினெட்டாம் நூற்றாண்டு மழை (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.ரா 
63. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.ரா
64. சுஜாதா தேர்ந்தெடுத்த கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - சுஜாதா 
65. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் (சிறுகதைத்தொகுப்பு) - நிலா ரசிகன் 
66. வெய்யில் உலர்த்திய வீடு (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.செந்தில்குமார் 
67. ஊமைசெந்நாய் (சிறுகதைத்தொகுப்பு) - (ஜெயமோகன்)
68. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - (சாரு நிவேதிதா) 
69. ஒளிவிலகல் (சிறுகதைத்தொகுப்பு) - (யுவன் சந்திரசேகர்) 
70. ஜி.நாகராஜன் ஆக்கங்கள் (சிறுகதைத்தொகுப்பு+இரண்டு குறுநாவல்கள்+கட்டுரை) - ஜி.நாகராஜன் 
71. நீர் விளையாட்டு (சிறுகதைத்தொகுப்பு) - (பெருமாள் முருகன்) 
72. இருள் விலகும் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - (வா.மு.கோமு, சுதேசமித்ரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ். செந்தில்குமார், பாலை நிலவன், லட்சுமி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய மகேந்திரன், புகழ், என். ஸ்ரீராம்) தொகுத்தவர் விஜய மகேந்திரன்
73. தவளைகள் குதிக்கும் வயிறு (சிறுகதைத்தொகுப்பு) - (வா.மு.கோமு)
74. மகாராஜாவின் ரயில் வண்டி (சிறுகதைத்தொகுப்பு) - அ.முத்துலிங்கம்
75. அமெரிக்காகாரி (சிறுகதைத்தொகுப்பு) - அ.முத்துலிங்கம்
76. வீடியோ மாரியம்மன் (சிறுகதைத்தொகுப்பு) - இமையம் 
77. லிபரல் பாளையத்து கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - ஆதவன் தீட்சண்யா 
78. ஐந்நூறு கோப்பை தட்டுகள் (சிறுகதைத்தொகுப்பு) - அசோகமித்திரன் 
79. இரவுக்காட்சி (சிறுகதைத்தொகுப்பு) - கே.என்.செந்தில்

80. என் பெயர் சிவப்பு (மொழிபெயர்ப்பு-நாவல்) - ஜி. குப்புசாமி (தமிழில்)
81. ஓநாய் குலச்சின்னம் (மொழிபெயர்ப்பு-நாவல்) - சி. மோகன் (தமிழில்)
82. பனி (மொழிபெயர்ப்பு-நாவல்) - ஜி. குப்புசாமி (தமிழில்) 
83. ஆடு ஜீவிதம் (மொழிபெயர்ப்பு-நாவல்) -எஸ்.ராமன் (தமிழில்)
84. தனிமையின் நூறு ஆண்டுகள் - சுகுமாரன் (தமிழில்)
85. ஹாருகி முரகாமி (மொழிபெயர்ப்பு- சிறுகதைகள்) ஜி. குப்புசாமி (தமிழில்)
86.நான் மடிந்து போவதை காணவே அவர்கள் விரும்புவர் (மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்) யமுனா ராஜேந்திரன் (தமிழில்) 
87.சம்ஸ்காரா (மொழிபெயர்ப்பு-நாவல்) சதாசிவம் (தமிழில்)
88.க ராபர்ட்டோ கலாஸ்ஸோ (மொழிபெயர்ப்பு-நாவல்) ஆனந்த் (தமிழில்)

89. நினைவின் தாழ்வாரங்கள் (கட்டுரைத்தொகுப்பு) - கலாப்ரியா 
90.ஓடும் நதி (கட்டுரைத்தொகுப்பு) - கலாப்ரியா
91.கிராமத்து தெருக்களின் வழியே (கட்டுரைத்தொகுப்பு) - ந.முருகேசன் பாண்டியன்
92. கோணல் பக்கங்கள் (கட்டுரைத்தொகுப்பு) - சாரு நிவேதிதா 
93. கலகம் காதல் இசை (கட்டுரைத்தொகுப்பு) - சாரு நிவேதிதா 
94. நிழல்கள் நடந்த பாதை (கட்டுரைத்தொகுப்பு) - மனுஷ்யபுத்திரன்
95. பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரைத்தொகுப்பு) - பாரதி மணி 
96. அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன் 

97. பென்சில்களின் அட்டகாசம் (குழந்தை இலக்கியம்) - விழியன் 
98. டாலும் ழீயும் (குழந்தை இலக்கியம்) - விழியன்
99. காசுக் கள்ளன் (குழந்தை இலக்கியம்) - எஸ்.ரா 
100. நீளநாக்கு (குழந்தை இலக்கியம்) - எஸ்.ரா

Monday, February 10, 2014

செறவிகளின் வருகை

சிவகுமார் முத்தையா இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர்...சில வருடங்களுக்கு முன்பு தோழமை வெளியீடாக நான் கொண்டு வந்த இருள் விலகும் கதைகள் தொகுப்பில் அவரது செறவிகளின் வருகை கதையை வாங்கி சேர்த்தேன்...அந்த கதைக்கு பரவலான கவனத்தை பெற்றார் ...அவரது 17 கதைகளின் தொகுப்பு
செறவிகளின் வருகை என்ற தலைப்பில் தோழமை வெளியீடாக வருகிறது....நண்பர்கள் ஆதரிக்கவும்...சிவக்குமார் முத்தையா எழுதியிருக்கும் இந்தக்கதையின் களம் புதிது.செறவி எனும் பறவைகளால் ஒரு மலையடிவார கிராமம் அல்லல்படுகிறது.கூட்டமாக வரும் அப்பறவைகள் விளைந்திருக்கும் நெல்மணிகளை தின்று மொத்த வயலையும் அழித்துவிட்டு போகின்றன. அந்த பறவைகளிடமிருந்து தங்கள் வயலை பாதுக்காக்க போராடும் கிராம மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது.கதையின் நாயகன் கலியனின் வாழ்க்கையை

செறவிகள் எப்படி கலைத்துப்போடுகின்றன என்பதை கதையின் முடிவு அற்புதமாய் எடுத்துரைக்கிறது.செறவிகளின் வருகை குறித்த விவரணைகள் அருமை. இந்த தொகுப்பிலிருக்கும் மிகச்சிறந்த கதை இது.
.அவர் கதை பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியவை .....

சிவக்குமார்முத்தையா தீராநதி, புதிய பார்வை இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். செறவிகளின் வருகை என்ற இவரது கதை இந்த தொகுப்பில் உள்ள கதைகளின் தொனியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மிக அற்புதமாக எழுதப்பட்ட சிறுகதையிது. நெல் முற்றிய வயலில் வந்திறங்கி நெல்மணியை தின்று போகும் செறவி எனும்பறவைகளின் வருகையை பற்றி விரியும் இக்கதை இயற்கையின் விசித்திரத்தையும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தையும் விவரிக்கிறது. இது போன்ற சம்பவம் ஒன்றை நானே நேரில் கண்டிருக்கிறேன். பறவைகளின் கூட்டம் மொத்தமாக வயலை அழிப்பதும் அதை தாளமுடியாமல் மனிதர்கள் உக்கிரம் கொள்வதும் சிறப்பாக கதையாக்கபட்டிருக்கிறது.