Tuesday, September 28, 2010

ஊடுருவல் நாவலின் ஆரம்ப பகுதி

மனோவுக்கு வீடு திரும்ப இன்று வழக்கத்தை விட வெகு நேரமாகிறது. சனிக்கிழமை இப்படி நடக்க வாய்ப்புண்டுதான். இப்பொது 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு நாளில் இரண்டு மருத்துவமனைகளில் வேலைப்பார்க்கும் பொருளாதார சுழலில் இது சத்தியம்தான். இன்று பாலா மருத்துவமனைக்கே வந்து கொத்திக் கொண்டு போவான் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்துதான் ஒரு காரியமும் அவன் வாழ்க்கையில் நடக்கவில்லையே. எல்லாமே எதிர்பார்க்காதவை தான்.


கோடம்பாக்கத்தில் இருந்து விஜயராகவபுரம் நோக்கி அவனது டி.வீ.எஸ் சேம்ப் சென்று கொண்டிருந்தது. சோடியம் விளக்குகளின் சுடரொலியில் சாலை கழுவி விட்டாற் போல பளபளத்தது. தேர்தல் நேரம் நெருங்குவதால் சாலையை புதிதாக போட்டிருந்தார்கள். போன வருடம் பெய்த தொடர் மழையால் இந்த சாலை அரிப்பு கண்டு ஆங்காங்கே பெயர்ந்து, குண்டு, குழியாகி, குழிகளில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அவனது டி.வீ.எஸ் சேம்ப் பள்ளத்தில் எல்லாம் எகிறிக் குதித்து எழுப்பும் சத்தத்தை பார்த்தால் முன் சக்கரம் கழண்டு உருண்டோடி விடுமோ! என்றெல்லாம் பயந்து ஒட்டிஎருக்கிறான் . பொழுதுக்கும் மெக்கானிக் ஷாப்புக்கு வண்டியை கொண்டு செல்ல வேண்டியிருந்தது உதிரியாக வந்த வருமானமெல்லாம் வண்டியே முழுங்கிவிட்டது.


மெக்கானிக்தான் எதாவது இரக்கப்படுகிறனா? அடிக்கடி கொண்டு வருகிறானே! கொஞ்சமாக பில் போடுவோம் என்று இருநூறு ஆகும் செலவிற்கு நானூறு பில் தீட்டுகிறான். சனியன் பிடித்த வண்டியை, விற்றுவிடலாமென்றால் ஓசியாய் கொடுத்தால்தான் உண்டு. கொள்முதல் செய்வார் இல்லை. அவனது மனைவிக்கும், இவனுக்கும் முதல் பிரச்சனை இந்த வண்டியால்தான் வந்தது. இருந்தாலும் பல சொந்தங்கள் அவனை விட்டு பிரிந்தாலும் இது மட்டும் உற்ற நண்பனாக ஒட்டிக்கொண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் தனக்கு உண்மையாக இருக்கும் ஒரே உடமை இந்த வண்டி மட்டும் தான் என்று நம்ப ஆரம்பித்துவிட்டான். வீடு சமீபத்து விட்டது. ஏரியா முழுவதும் "கப்சிப்" என்றிருந்தது பத்து மணிக்கே சென்னை பாதி செத்துவிடுகிறது.

இரும்பு கோட்டை திறந்து, மாடிப்படியின் ஓரத்தில் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி பூட்டினான் மூன்றாவது மாடியில் பாதி மொட்டையகவும், மீதமுள்ள இடம் வீடாகவும் இருந்தது. இரண்டு படுக்கையறைகள், ஒரு முன் ஹால், சமையலறை உள்ள வீடு அது. அப்பா மொட்டைமாடியிலேயே விரித்துப் படுத்து இருந்தார். பலகாலமாக அப்படிதான் செய்து வருகிறார். கதவு பேருக்கு பூட்டியிருந்தது லேசாக திறந்தான். அம்மாவும், தங்கையும் சமையலறை ஒட்டியுள்ள படுக்கை அறையில் தூங்கினர். எப்படியும் வரத்தாமதமாகும் என வெளி குமிழ் விளக்கை மட்டும் போட்டுவிட்டு கதவை, பூட்டாமல் படுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். அவன் அறைக்குச் சென்றான் இருவர் படுக்கும் கட்டில். புதிதான மெத்தை விரிப்புடன் இருந்தது. கதவை சாத்தி தாழிட்டான். உடைகளை கழற்றி, கைகால் கழுவி கயிலிக்கு மாறியவன், மெத்தையை மீண்டும் ஒரு முறைப்பார்தான். அவனது மனைவி ஒருக்களித்து படுத்திருப்பது போல பிரமை ஏற்பட்டது.

சற்று அளவிற்கு அதிகமாக தண்ணி அடிதிருந்ததால் ஏற்படுவதுதான் எல்லாம் விஸ்கியின் வேலை.

அவன் கடந்து வந்த பெண்கள் அனைவரும் ஒருகணம் நினைவுக்கு வந்தனர். மெத்தையில் ஏறிப்படுத்தான். பால இரண்டு நீல பட சீ.டிக்களை கொடுத்து சென்றிருந்தான். அதைப்பார்கலாம என நினைத்தான். இப்போதிருக்கும் வேட்கையை இன்னும் அதிகப்படுத்தும் "வேண்டாம்" என நினைத்தான்.


தொலைக்காட்சியை போட்டவன் ஒவ்வொரு சேனலாக மாற்றினான். அவனது மனம் போலவே அது மாற்றிக்கொண்டே இருந்தது. கடைசியில் எஸ்.எஸ்.மியுசிக்குள் வந்து நின்றது. ஒலியை முற்றிலுமாக குறைத்தான். நாடு இரவில் வெறும் காட்சியாகத்தான் தொலைக்காட்சியைப் பார்ப்பது அவனது வழக்கம். பிரிட்டினி ஸ்பியர்ஸ், வேற்று உடம்பை காட்டிக் கொண்டிருந்த ஆனழகனுடன் கட்டிப் புரண்டு கொண்டிருந்தாள்.

ஆனால் அது ஆபாசமாக தெரியவில்லை. பிரிட்டினியின் உடம்புக்கு எவ்வளவு ஆடைகளைக் குறைத்தாலும் அழகாகத்தான் தெரிகிறது. ஸ்கூல் வயதிலேயே பாப் உலகில் அடியெடுத்துப் பெயர் வாங்கியவள் என கேள்விப்பட்டிருக்கிறான். இப்போது அவருக்கும் பிள்ளை குட்டியகிவிட்டது என தினத்தந்தி ஞாயிறு மலரைப் பார்த்து தெரிந்ததும் கொஞ்சம் கவலைப்பட்டான். யாரைத்தான் திருமணம் விட்டு வைக்கிறது? ஆனால் கணவன் கூட இல்லையாம், விவாகரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறதாம். இது தெரிந்ததும் அவளைப் பழைய பிரிட்டிநியாகவே நினைத்து ரசிக்க முடிந்தது. அடுத்த பாடலில் ஜெனிபார் லோபஸ் வந்தால். "வெயிட்டிங் போர் த நைட்" என்ற புத்தாண்டை வரவேற்கும் பாடல் அது. அவளை முதன் முதலாக அந்தப்பாடலில் பார்த்தபோது அவன் சென்னைக்கும் புதிது. அவள் இடையை வெட்டி ஆடிய அழகை பார்த்து, யாரு இது செம கட்டையா இருக்கே? என நண்பர்களிடம் விசாரித்தான். அவர்கள் இவனைப் பார்த்து சிரித்த கிண்டல் சிரிப்பும் இப்போது அவனுக்கு நினைவு வந்தது.

சென்னைக்கு வழ வந்தது மில்லினியம் ஆண்டை ஒட்டித்தான். 1999 நவம்பர் முதல் வாரத்தில் இனி மாநகரில்தான் வாழ்கை என எக்ஸ்ரே டிப்ளோமா படிக்க இங்கு வந்தான். அதற்க்கு முன் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருப்பவனாக இருந்தான். அவனது குடும்பம் சென்னையில் ஆறுமாதம் மதுரையில் ஆறுமாதம் என ஊஞ்சலாடிகொண்டிருந்தது. தம்பியையும், தங்கையையும் மதுரையில் சித்தியின் வீட்டின் படிக்க போயிருந்தார்கள்.

மனோவும் மதுரையில் ஒரு வருடம் தியாகராஜா கல்லூரியில் பி.காம் படித்தான். கல்லூரியில் சில பெண்கள் நட்புடன் அவனுடன் பழகிய காலம் அது. சக மாணவர்களிடம் இருந்து தனது வசதியின்மையால் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு இருந்தான். இரண்டு வகுப்புகள் முடிந்தவுடன் மதியக்காட்சிக்கு மாப்பிள்ளை விநாயகருக்கோ அல்லது பிரியா காம்ப்ளெக்ஸ் தியேட்டருக்கே பைக்கில் பறப்பார்கள். கோனார் மெஸ் சென்று, பிரியாணி சாப்பிடுவார்கள். இவனை எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். மதியம் உணவு இடைவெளிக்குப் பிறகு வகுப்பில் உட்காரும் சில மாணவர்களில் மனோவும் ஒருவன். அதுவும், மனோவின் அமைதியும் சில பெண்களுக்கு அவன் மெது ஒரு பரிவை ஏற்படுத்தியது. நெருங்கி வந்து பேசினார். தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக கீதாவுக்கு இவனைப் பிடித்துப் போனது. அவர்கள் படம் போகும் பொது இவனையும் கூட்டிச் சென்றனர். மூன்று பெண்களுடன் சேர்ந்து படம் பார்த்ததே தியேட்டரில் உட்கார்ந்த போதும் மனோவுக்கு நம்ப முடியாமல் இருந்தது.

விஜய் மகேந்திரனின் சில கதைகள் சில பார்வைகள் - குமாரநந்தன்


இருத்தலின் விதிகள்

நகரத்து எழுத்தாளர்களின் புரிந்து கொள்ளாத மனைவியரைப் பற்றிய கதை. இந்த வகைக் கதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து இது தனித்து அனுபவம் என்பது மாதிரி எதுவும் இல்லை. ஒரு சிறுகதையை நாம் படிக்கும்போது அதில் எதிர் பார்க்கும் ஏதோ ஒரு விசயம் இதில் கிடைக்காமல் போய்விட்டதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ராமநேசன் எனது நண்பன்

ராமநேசனின் கேரக்டர் அசடு நாவலின் கணேசன் கேரக்டரை நினைவுபடுத்துகிறது. கதையாளரின் கேரக்டரும் ராமநேசனின் கேரக்டரும் ஒத்து வராமல் அவனை வெறுக்கிறார். பிரிதொரு காலத்தில் அவனைப் புரிந்து கொண்டு அவனுடைய திருமணத்துக்குச் சென்று வர முடிவு செய்கிறார். ஒரு செயலையோ அல்லது ஒரு நபரையோ புரிந்து கொள்ள மற்றவருக்கு குறிப்பிட்ட காலமும் அனுபவங்களும் அவசியமாயிருக்கிறது (என்ன காலத்திலும் என்ன அனுபவத்திலும் ஒரு சிலர் எதையும் புரிந்து கொள்ளாமல் போய்விடுவது வேறு விசயம்) என்பது இந்தக் கதையில் ஓரளவிற்கு வந்திருக்கிறது. ராமநேசன் ஒரு சாமியாரிடம் சீடராக சேருகிறான். ஆனால் அவர் போலி என்பதைத் தெரிந்து கொண்டு அங்கிருந்து திருச்சி வரை ஒரு வெங்காய லாரியில் வந்து அங்கிருந்து மதுரைக்கு நடந்தே வருகிறான். ஆனால் இது அந்த கேரக்டருக்கு ஒத்து வராத செயல். ராமநேசன் யாருடனும் எளிதாக ஒட்டிக் கொள்பவன். யாரையும் எளிதாக தன்வசப்படுத்தி தனக்குப் பிரச்சனை இல்லாமல் செய்து கொள்பவன். நிச்சயமாய் அவன் திருச்சியிலிருந்து மதுரை வரை நடந்து சென்றிருக்க மாட்டான்.



மழை புயல் சின்னம்

கதையின் ஆரம்பமும் அடுத்தடுத்த பத்திகளும் ஆழ்ந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருக்கிறது. ஜெனாலீனாவை முதன் முதலாகக் கோயிலில் சந்திக்கும் போது அவளுடைய உடைக¨ள் இவர் புகழ்கிறார். அவள் இவரைக் காதலிப்பதற்கு பிப்டி பிப்டி வாய்ப்பு இருப்பதாக சொல்லிச் செல்கிறாள். நகரத்துப் பெண்களைப் பற்றியும் நகரத்தாரின் காதல் பற்றிய புரிதல்களையும் இந்த வரிகள் சிறப்பாக உணர்த்தி விடுகின்றன. ஜெனாலீனாவை வாழ்நாள் முழுவதும் என்வசம் இருக்கச் செய்யும் எந்தச் சக்தியும் இப்போது யாரிடமும் இல்லை என்ற வரிகள் நகரத்துப் பெண்களின் மிதக்கும் மனநிலை அல்லது அவர்களின் கட்டற்ற சுதந்திர உணர்வை உணர்த்துகிறது.
அருகாமை ஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்ற வெறித்தனமான எண்ணத்தில் சுழலும் பரதேசிகள் என்ற வரிகளைக் கதாசிரியர் பயன்படுத்துகிறார். சக மனிதர்களைப் பற்றி இப்படி ஒரு பட்டவர்த்தனமான அபிப்ராயம் தேவையா என்று நெருடுகிறது. ஜெனாலீனா என்னிடம் தன்து காதலைத் துண்டித்துக் கொள்வதாகச் சொன்னாள். ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வதுபோல அவளது பேச்சு இருந்தது. காதலை இழக்கும் இடத்திலும் அதைப் பகடியாக்குவது கூட ஒரு நகரத்தின் மனநிலைதான் என்று நினைக்கிறேன். மேல் அதிகாரி போனில் கம் குவிக் என்று மிரட்டுவது கூட வாழ்க்கையின் அழுத்தத்தைத் தெரிவிக்கிறது.


கதையின் கடைசியில் சர்மிளாவின் கேரக்டர் அவசர அவசரமாக உள்ளே வந்தாலும் அவர் வந்துதான் இந்த நிகழ்வை ஒரு கதையாக மாற்றுகிறார். சர்மிளாவும் சாரதியும் காதலர்கள். சாரதியின் முன்னிலையிலேயே இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி பேசுவது சர்மிளாவின் குணமாக இருக்கிறது. இவர் ஜெனாலீனாவைக் காதலிப்பதையும் அவளின் நிராகரிப்பையும் அவளிடம்தான் சொல்கிறார். நட்பு காதல் என்று பிரித்துவைத்துக்கொண்டிருக்கும் எல்லைகளின் அடி ஆழத்தில் இருக்கும் பொய்மைகளை இந்த இடம் மிகப் பூடகமாகப் பேசுகிறது. ஒரு காதல் ஒன்றுமில்லாமல் போவதற்கும் ஒரு நட்பு காமத்தின் அழைப்பிற்கான அடையாளமாக மாறுவதற்கும் பெரிதாக ஒன்றும் நடக்கத் தேவையில்லை. ஒரு மழை பெய்தால் போதும் எல்லாமும் கரைந்து எல்லாமும் மாறிவிடுகிறது. ஒரு நகரத்தின் காதலை இந்தக் கதையின் இன்னொரு தளம் மிக அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்திவிடுகிறது. அந்த வகையில் இது விஜய மகேந்திரனின் சிறப்பான கதைகளில் ஒன்றாகச் சொல்லலாம்.
புயல் வெள்ளத்தினால் சென்னையில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளின் அவலத்தை நேரடி ஒளிபரப்பாக காட்டிக் கொண்டிருந்தனர் விளம்பரங்களுக்கிடையே என்ற வரி மீடியாக்களின் முதலைக் கண்ணீர் அபத்தத்தை எள்ளி நகையாடுகிறது. அதே சமயம் இந்த வரி கோபிகிருஷ்ணனின் கதை வரிகளை மிகக் கூர்மையாக நினைவுபடுத்துகிறது.


காலையில் குளிர் காற்று வீசுகிறது. சித்தாள்கள் வேலைக்குப் போக பஸ்ஸ¤க்குக் காத்திருக்கிறார்கள். நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல்தான் புயல் காற்றும் மழையும் ஆரம்பமாகிறது. ஏழு மணி செய்தியில் வெள்ளம் சூழந்த பகுதிகளைக் காட்டுகிறார்கள். பிறகு இவருடைய ஏரியாவிலும் வெள்ளம் வந்து விடுகிறது. அதையும் உடனடியாக டிவியில் காட்டுகிறார்கள் இதையெல்லாம் சற்று நிதானமாக கால அளவை கொஞ்சம் லாஜிக்காக அவதானித்து எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.


நகரத்துக்கு வெளியே

மழை புயல் சின்னம் நகரத்து இளம் பெண்களின் மனநிலையைப் பேசுகிறதென்றால் நகரத்துக்கு வெளியே இளைஞர்களின் காதல் வஞ்சகத்தைப் பேசுகிறது. சூரியப் பிரகாஷ் பிரியாவின் மனநிலையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவளை நீலநிறச் சுடிதார் அணிந்து வரும்படி வற்புறுத்துகிறான். அவன் கூப்பிட்ட இடத்துக்கு வர அவள் மறுத்து விடுகிறாள். என்ஜாய் பண்ண அலையுறான் என்ற ஸ்டேட்மெண்ட்டில் பெண்கள் விசயம் தெரிந்தேதான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிவிடுகிறார். பிரியா நிராகரித்தவனை அவள் அறையிலேயே தங்கியிருக்கும் பாக்கியலட்சுமி ஏற்றுக் கொள்கிறாள். (அவளுக்கு இந்த விசயம் தெரியாது. அவள் அப்பாவித்தனமாய் ஏமாந்து விடுகிறாள்.) பிரியா பாக்கியலட்சுமியை எச்சரிக்கும் முயற்சியை எடுத்திருக்கலாம். ஆனால் அவள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது.
பிரியா ஏற்கனவே காதலிக்க விருப்பம் தெரிவித்திருந்த விக்னேஷின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். பாக்கியம் கர்ப்பிணி ஆகிவிடுகிறாள். நகரத்துக்கு வெளியே இருக்கும் நர்சிங் கோமில் பாக்கியம் மீண்டும் பழைய பாக்கியமாக ஆக்கப்படுகிறாள். பிரியா அன்று அணிந்து வரவேண்டிய உடை குறித்து விக்னேஷ் போன் செய்து சொல்கிறான். நீல நிறச் சுடிதாரை ஒரு குறியீடாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால் அது முழுமையாக வெளிப்படாமல் இருக்கிறது. இந்தக் கதையும் நகரத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

அடைபடும் காற்று

கடிதங்களின் மூலமாகக் கதை சொல்லும் உத்தியை இந்தக் கதையில் பயன் படுத்துகிறார். முதியவர்கள் நகரில் தனித்திருப்பது. அவர்களின் அசுவாத் தளமான டிரைவ் இன் தியேட்டர் மூடப்பட்டு அங்கே ஒரு ரசாயணத் தொழிற்சாலை வரவிருப்பது. அமெரிக்காவில் வசிக்கும் மகன்கள் நகரத்திலிருக்கும் தங்கள் பெற்றவர்களின் வசிப்பிடங்களை தங்களுடைய வாழ்க்கைக்காக விற்கச் சொல்வது என்று இக்கதை முழுவதும் தற்கால நாகரீக சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிறது. இதை ஒரு கடித உத்தியில் எழுதாமல் வேறுமாதிரியில் எழுதியிருந்தால் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
விஜய் மகேந்திரனின் கதைகளில் நகரத்தின் உறுத்தல் எளிதாக மூச்சுவிட முடியாத இறுக்கம் பற்றித் தீவிரமாகப் பேசுகிறது. தனிப்பட்ட காதல் நட்பு பற்றிய விசயங்களைப் பேசினாலும் அதிலும் நகரம் தவிர்க்க முடியாத பங்காற்றுகிறது. இவரிடம் தென்படும் ஒரு சமூகப் பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது. சிலர் சமூகத்தைப் பாதிக்கிறார்கள். சிலரை சமூகம் பாதிக்கிறது. இவரை சமூகம் எப்படியெல்லாம் பாதித்தது என்பதுதான் கதைகளாக வெளிப்படுகிறது. நிறைய இடங்களில் கோபி கிருஷ்ணனை ஞாபகப்படுத்துகிறார். எடுத்துக் கொள்ளும் கதைகளை முடிந்தவரை மேலோட்டமாகவே சொல்ல முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. எந்தக் கதையிலும் எந்தப் பிரச்சனையும் தீவிரமாகப் பேசப்படுவதில்லை. அலங்காரமான கவித்துவமான வாக்கியங்கள் வெளிப்பாடுகளில் பெரிய நம்பிக்கை இல்லாவராகக் காண்கிறார். இந்த வகையான எழுத்து முறையை இவர் இன்னும் செம்மையாக ஆராய்ந்து
கையாண்டால் அதுவே இவருக்கு மிகப் பெரிய பலமாக அமைய வாய்ப்பிருக்கிறது.


Wednesday, September 22, 2010

மாமல்லன் கார்த்தி கவிதைகள்


அவளது தொலைப்பேசி அழைப்பின் போது
ஜன்னலைத் திறந்தேன்
மழை பெய்து கொண்டிருந்தது

*

புகை சூழ்ந்திருக்கும்
இந்த இரவில்
தனிமை
ஒற்றைத் திரியில் எரிகிறது

*

எப்போதும்
என் வீட்டு ஜன்னலின் வழியே
உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீயோ
இன்னொரு பிரதேசத்தில்
இருப்பதாய் கனவு காண்கிறாய்

*

பசுமை செழித்த
நம் சம்பாஷனைகளுக்கு அப்பால்
கனவுகளின்
ஓங்கி நிற்கும் மரங்கள்
அதன் தூரத்து கிளைகளின் இடையே தெரியும்
நிலவின் ஒளியில் துயில்வோம்

*

நரகம்
கேள்விகளோடும்
சொர்க்கம்
பதில்களோடும்
துயில்கின்றன
இடையில்
நாம்
இருக்கிறோம்
பெரும் ரணம் கொண்ட மனிதர்களாய்

*

அவன் கண்களில் விரியும் வானம்
நெஞ்சினுள் பாயும் நதி
குருதியுள் பரவும் மண்
நாவினுள் வீசும் காற்று
ஆன்மாவினுள் தகிக்கும் தணல்
இன்று அவன் ஆனான்
ஒரு மனிதப் பிறவியாக

*

என் நகர்புறத்து மஞ்சள் இரவில்
ஒரு கோவில் திருவிழாவின் தெய்வீக ஓலம்
மிரண்டோடி வந்த நாய்கள்
என்னை விநோதமாய் பார்த்தன

*

அதிக பட்ச ஒளி
என்பது
பளீர் என்ற இருள்

*


தீயின் ஒளியில் நிழலின் நடனம் -
வளைந்து , நெளிந்து ,குறைந்து ,நீண்டு ,படுத்து ,மிதந்து ,சுருண்டு -
தீயுள் உறையும் என் நிழல்

*

என் காலி அறையை
ஒரு குழந்தை நிரப்பிக் கொண்டிருகிறது
மிதக்கிறேன் மோன வெளியில்
வாழ்வை மீட்க்கும் பொருட்டு

*

கவிதை எழுதுவது
சினிமா எடுப்பது
இவர்களுக்கு வெட்டி வேலை
சோறு போடும் தொழில்
தெய்வம்
நான் கேட்கிறேன்
தெய்வமே! உனக்கு வேறு வேலை இல்லையா ?

*


மரங்கள் நிழலை தருவதில்லை
மாறாக
அவை வெயிலை வேண்டி நிற்கின்றன
நாம் குளிர் காய்கிறோம்

*

பாதி நிலா ராத்திரி
பாதிச் சொருகி விழும் விழிகள்
பாதி முடிந்த மதுக்கோப்பை
என்னைச் சுற்றி எங்கும் நிரம்பி வழிகிறது மௌனம்

*

தீராத ரணங்களையும் சற்றே ஆற்றும் ஒரு முத்தம்
கொடுக்க அவளுக்கும்
வாங்கிக் கொள்ள எனக்கும்
சம்மதம் தான்
இடையில்
கண்மூடித்தனங்கள்

*

எல்லோரும் ஓடும் அந்த நகரத்தில்
அவனும் ஓடினான் பிழைப்புக்காக
சுட்டுக் கொன்றார்கள்
கொன்ற பின்னும் சுட்டார்கள்
ஐந்து முறை!
ஏதும் இல்லாத
அவனை

*

நீயுமில்லை
நானுமில்லை
ஏதுமில்லாத வெற்று வெளியொன்றில்
கட்டிக்கிடக்க மனம் ஆவல் கொள்ளும்
சக்தி வெளிப்படும்
உயிர் கலக்கும்
அந்த நொடியில்
பிரபஞ்சத்தில் ஒரு பூ மலரும்

*

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது போல்
நடு நிசி ஊளைக் காற்றின் படபடப்பில்
எங்கோ சப்தமிடுகின்றன
ஜன்னல் கதவுகள்
சாத்திவிட யாருமில்லை வெகு நேரமாய்
மரணத்தின் பெருத்த அதிர்வுகள் பின் தொடர
முடிவற்ற இருண்ட பள்ளத்தில்
விழுந்து கொண்டிருக்கிறேன்

*

ஓசை படாமல்
சாரலாய் வந்தவன்
ஏதேதோ செய்துவிட்டிருந்தான்
உலர்ந்த பின் பார்த்தேன்
நிறைவு தரும் படி இருந்தது
உருக்குலைந்த என் கவிதைகள்
ஓவியங்களாய் மாறி இருப்பது


*

அவள் பொம்மைகளை
நேசிக்கத் துவங்கிய நாள்
எதுவென்று அறிந்திருக்கவில்லை

நினைவில் தங்காத ஏதோ ஒரு
நீண்ட தனிமையைத் தாழிட்டுக்கொள்ள
பொம்மைகளை நாடியிருந்தாள்

முதிர் கன்னியின் உடல் வாகும்
முதிராத உள் மனமும் கொண்டிருந்தாள்

பொம்மைகளோடு பேச முடிந்ததும்
முத்தமிட்டு விளையாட முடிந்ததும்
புரண்டு படுத்து அனைத்துக் கொள்ள முடிந்ததும்
இறுகிச் சிதறும் மௌனங்களில் கட்டி அழ முடிந்ததும்
அவளுக்கு பெரும் ஆசுவாசம் தந்தது

மூப்படையாத,
எதிர்த்துப் பேசாத பொம்மைகள்
மனித உறவுகளை விட மேலானதாக எண்ணினாள்

மயங்கிக் கிடந்த மாலைப் பொழுதொன்றில்
என்னையும் பொம்மைகளோடு சேர்த்துக் கொண்டாள்

சிரிக்கும் பொம்மைகளை
பார்த்துப் பழகி இருந்தவள்
கண்ணீர் விடும் பொம்மைகளை கண்டதில்லை
பரவசம் கொண்டு குதித்துக் கை தட்டினாள்

பொம்மைகளின் உலகத்தில்
நான் தான் தலைவன் என்று சொல்லி
கருணை முத்தமொன்றை அளித்தாள்


*


என் மாடி அறையின் குளிர் சாதனப் பெட்டிக்குப் பின்
புறாக்கள் கூடு கட்டியாயிற்று
சீக்கிரம் குஞ்சுகள் பொறித்துவிடும்

இரவில் தினம் சாந்து நிறப் பூனையொன்று
அறையை சுற்றி வந்து
குட்டிகளை ஈன்றிட
தோதான இடம் பார்த்த வண்ணம் திரிகிறது

வயிறு பெருத்த பல்லி ஒன்று
சுவற்றின் மீதிருந்து
அவ்வபோது பரணை நோட்டம் விடுகிறது
தன் முட்டைகளைப் பற்றிய பாதுகாப்புடன்

என் முற்றத்து மண்தொட்டிகளில்
காற்று வழங்கிச் செல்லும் விதைகளும்
முளைவிடும் காலம் தான்

வெண் இருள் படிந்த தனிமைக்குள்
உயிர் பாய்ச்சும் இத்தருணங்களில்

மனைவி முழுகாமல் இருக்கிறாள்
அவளது தாய் வீட்டில்

*




ராவணன்: கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை - மாமல்லன் கார்த்தி


ராவணன்(சிறப்புக் காட்சி ): அதிகாலை நாலரை மணி, கோவில் நடை திறப்பதற்காக காத்திருக்கும் பக்தகோடிகளை போல, மடை திரண்டு வந்திருந்தார்கள் விக்ரம் ரசிகர்கள். நடை திறந்ததும், கூச்சலும் கும்மாளமும் வானவேடிக்கைகளும் கேட்கவே வேண்டாம். படம் துவங்கியது. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு சத்தமே இல்லை, அவ்வளவு ஒன்றிப்போய் படம் பார்க்கிறார்கள் என்று நினைத்தேன், இடைவேளையில் விளக்குகள் போட்டதும் எல்லோரும் துயிலேளுந்தார்கள், பின் பாதியில் எங்களை தட்டி தட்டி எழுப்பினார்கள் மணிரத்னமும் ரஹ்மானும்..ஒரு வழியாக எங்களை பார்க்க வைத்துவிட்டார்கள்.

புராண இதிகாசங்களில் இருந்தும் இன்னபிற சர்வதேச இத்யாதிகளில் இருந்தும், கதைச்சரடைப் பின்னி.. நாட்டில் தற்போது நடக்கக்கூடிய முக்கிய பிரச்சனை ஒன்றை, பிரச்சனையே இல்லாமல் சொல்லிவிட வேண்டும் என்று, பறவையின் பார்வையில் (birds view) அந்த துக்கம் நிறைந்த காடுகளை கடந்து (escape) செல்கிறார் மணி. பழைய மாவையே வேறுவிதமாக அரைத்து மசாலா தடவ முயற்சித்திருக்கிறார், ஆனால் மாவு புளிப்பு தட்டி விட்டது. படத்தில் சித்தரிக்கப்பட்ட உலகத்தில் ஒரு நம்பகத்தன்மை இல்லாதது.. உண்மையில் இது ஹிந்தி மொழிக்காக செய்யப்பட்டதால் இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது.. சுஹாசினியின் வசனங்கள் அவ்வப்போது பெண்ணிய நிலைப்பாடுகளை பற்றி கதைக்கிறது.. இருந்தும் என்ன பிரயோஜனம்?.. ராகினி (ஐஸ்..) தன் பத்தினித்தனத்தை நிரூபிக்க வேண்டியதாக உள்ளதே..?(அதிலும் ஒரு சிண்டு முடிக்கிறார் மணி.. அதாவது வீராவை பிடிபதற்காக அவளது கணவன் போடும் நாடகமாம் அது.. பேத்தல்!). இன்னொரு கொடுமை வேறு உள்ளது, படத்தில் கடைசி வரை வீரா (விக்ரம்) ராகினியை தொடுவதே இல்லையாம்.. ஆனால் படத்தில் வரும் மற்ற குண்டர்கள் சகட்டுமேனிக்கு அவளை பிடித்திழுகிறார்கள், வீரா மட்டும் அவளை தொடாமலேயே தொட்டுவிட்டு பாதாளலோகத்தை சென்றடைகிறான். கவித்துவம்!!

படம் எனக்கு பல படங்களின்(apocalypse now, rashomon, north by north west, crouching tiger hidden dragon இன்னும் தோண்டினால் நிறைய கிடைக்கும் போல), பல கணங்களை நினைவு படுத்தியது, முக்கியமாக 'காதல் கொண்டேன்' . அந்த கிளைமாக்சை (climax) செல்வராகவன் 'உணர்வுரீதியாக' மிக சிறப்பாக செய்திருந்தார் என்று தோன்றுகிறது.

படத்தின் அடி நாதம் என்ன? ஒடுக்கப்பட்ட ஒருவனுக்கும், மேல் தட்டில் வாழும் ஒருத்திக்கும் (இந்த படத்தில் பழங்குடியினனுக்கும்-உலக மயமாக்கத்தில் இருப்பவளுக்கும்) ஏற்படும் நூல் இழையிலான அன்பும், காதலும், பரிதாபமும்..அவர்களின் உறவு தான் சூட்ச்சமம்... இந்த காரியத்தை ஒரு வகையில் செல்வராகவனின் 'காதல் கொண்டேன்' படத்தில் செய்திருக்கிறார்.. வினோத்(தனுஷ்) ஒடுக்கப்பட்ட வலியினால் மனசிக்களுக்குள் இருப்பவன்.. அவனது கதாபாத்திர வார்ப்பு நம்பகத் தன்மையுடன் இருந்தது.. வினோதிற்கும் திவ்யாவுக்கும் உள்ள உறவின் அலைகழிப்புகளை, போராட்டங்களை மிக வலிமையாக சொல்லி இருந்தார்.. மணிரத்தினம் அவர்களோ, தன் புரட்சி செய்யும் மகோன்னதமான கதாபாத்திரத்தை ஒரு பைத்தியத்தை போல் உளற வைத்து கேவலப்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன்..அழகான காட்சிகளையும், நடனங்களையும் பாடல்களையும் வைத்துக்கொண்டு எத்தனை நேரம் தான் ஓட்ட முடியும்..? 360 degree'யில் தேவையில்லாமல் காமெராவை வைத்துக்கொண்டு circus விளையாட்டை காண்பித்துக் கொண்டிருந்தார் மணி..முக்கியமான உணர்வெழுச்சி மிக்க சில காட்சிகளை, நம்மை சேர விடாமல் தடை செய்துவிட்டார்.. சந்தோஷ் சிவனை வீணடித்துவிட்டார். ' நீர்' என்பதை ஒரு குறியீடாக 'Terorist' படத்தில் சந்தோஷ் சிவன் பயன்படுத்தியிருந்தார்.. அது தன் மூல கதாபாத்திரத்தின் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த மாற்றத்தை பிரதிபலிப்பதற்கு மிக சரியாய் பொருந்தியது.. ஆனால் ராவணனில் அது ஒரு விளம்பர படத்தில் வருவது போன்று செயற்கையாக மாறிவிட்டது. அது ஒரு வித்தை என்பதைத் தவிர ஒன்றும் இல்லை.. ரஷிய திரைமேதையான் தார்கொவிஸ்கி(Tarkovsky) தனது படங்களில் 'நீரை' நம் பிரபஞ்சத்தின் குறியீட்டுத் தன்மையுடன் உள்ளார்ந்த கவித்துவத்துடன் மாற்றி இருப்பார்.. அங்கிருந்து தாக்கத்தை உள்வாங்கிக் கொண்ட சந்தோஷ் சிவன் Terorist படத்தில் புரிதலோடு செய்திருந்தார்.. இராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தனது நீர்கோர்த்த கூந்தலை அவள் முகத்தின் முன் தலைவிரி கோலமாக கொண்டுவரும் காட்சி அப்படியே தார்கொவிஸ்கியின் Mirror படத்தில் இருந்து சுட்டது. ஒரு கலைப் படைப்பில் இருந்து உருவி எப்படி ஜீவனற்ற சரக்காக மாற்றுகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம் .

மணிரத்னம் அவர்களின் வார்த்தையில் சொன்னால் 'Direction is like management' . மணிரத்னம் ஒரு தேர்ந்த வியாபாரி, சினிமா ஊடகம் சார்ந்த அழகியலை, தான் கண்டு ரசித்த உலகப் படங்களின் நுட்பங்களை, தான் இயங்குகிற தளத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் புலமை உடையவர். அந்த வகையில் அவர் ஒரு 'skilled filmmaker என்று சொல்லலாம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் இன்னும் popular cinema'வில் முன்னிலையில் உள்ளவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்த வகையில் அவருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மேலும், அவர் ஒரு தெளிவோடு இயங்கி வருகிறார், அவருக்கு எது கலை -எது வியாபாரம், -தான் எங்கு இருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது. இயக்குனர் சேரனை போன்று 'தென்னகத்தின் சத்யஜித் ரே' என்று போஸ்டர் ஒட்டும் காரியங்களில் என்றுமே அவர் ஈடுபட்டதில்லை. அதே போல் அவர் எங்கிருந்து சுடுகிறார் என்ற கேள்விக்கும் சரியான பதில் அளிப்பதில்லை. அதை தாண்டி அவர் சுடும் படங்களுக்கு அவர் பெரும்பாலும் நியாயம் செய்வதில்லை. நம் நாட்டில் லஞ்சம் வாங்குவது சகஜம் தானே! அதையெல்லாம் யாரவது சொல்லிக் கொண்டா இருகிறார்கள்? it has become legitimate. Tarantino'வை எடுத்துக்கொண்டால், அவன் தனக்குப் பிடித்த எல்லாவற்றிலிருந்தும் சுடுகிறான், அது ஒரு தந்தையிடம் மகன் எடுத்துக்கொள்ளும் உரிமையை போன்றது. அந்த உயிர்ப்போடு அது இருக்கிறது, அது தன் ரசிபபுக்குளிருந்து தனிச்சையாக மலர்வது, அது சிருஷ்டி. அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை. ஊழல் கிடையாது(No corruption).

ராவணன் படத்தின் பின் இருக்கும் நடிகர்களின், தொழில்நுடக் கலைஞர்களின் சிரத்தையை பற்றி சொல்லத் தேவையில்லை. இதற்காகத்தான் இத்தனை இம்சைகளை அனுபவித்தார்களா என்று ஆச்சர்யப்பட்டேன், மேலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது, ஐஸ்வர்யா ராய் என்ற நடிகையை கண்டாலே தலை தெறிக்க ஓடும் நான், அவரின் பங்களிப்பை சகித்துக் கொண்டேன்.. பிரபுவையும் கார்த்திக்கையும் காமெடியன்களாக ஆக்கிவிட்டார் மணி. என்ன சொல்வது, படம் பத்து நாள் நன்றாக ஓடினால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்துவிட்டார் போல!!

இணையத்தளத்தில் தற்போது வந்து கொண்டிருக்கும் இராவணன் விமர்சனங்களை படித்து வருகிறேன்.. முடியல!! சும்மா எடுத்ததற்கெலாம் 'making is superb' என்கிறார்கள்..

நான் கேட்கிறேன்: அய்யா! நம் மணிரத்தினம் அவர்கள் இருபத்தி ஐந்து வருடங்களாக சினிமாவில் இருப்பவர், அவரது செய்நேர்த்தி நாம் அறிந்ததே, அவர் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாவரும் இந்தியாவில் சிறந்தவர்கள், சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், ரஹ்மான்.. என்று நீள்கிறது... இவர்கள் கூட்டணியில் இது கூடவா வராது?..இதைத் தாண்டி படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால், கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், சீதாயணம் என்று காமெடி பண்ணுகிறார்கள்.. சரி..இதெல்லாம் வைத்துக்கொண்டு என்ன சொல்கிறீர்கள் என்றால்.. அரசியல்!! என்று ஒரு குண்டைப் போடுகிறார்கள், வீரப்பன், நக்சலைட் இயக்கம், இலங்கை பிரச்சனை, என்று சொல்லி நம்மை துன்புறுத்துகிறார்கள்.. சட்டியில் ஒன்றும் அப்படியில்லை..ஏன் வெறுங்கையில் முழம் போடுகிறார்கள்?.. மணிரத்னம் படமெடுதிருக்கும் காடுகளில் காணப்படும் குண்டுகளும் குழிகளும் போல, அவரது திரைக்கதை பல சரிவுகளோடு உள்ளது.. இதை வைத்துக்கொண்டு என்னென்னமோ அரற்றுகிறார்கள்..என்னை பொறுத்த வரையில் இராவணன் ஒரு ஜீவனற்ற சவம்.. அந்த சவத்தின் அலங்காரங்களை கொஞ்சம் ரசிக்கலாம்.. மணிரத்தினம் படங்களில் முன்பு இருந்த 'ஓட்டை அரசியல்' கூட இதில் இல்லை .. உண்மையை சொன்னால் ஒன்றுமே இல்லை.. அவர் பல விஷயங்களை சொல்ல வந்திருக்கலாம், ஆனால் எதுவுமே நம்மை சேரவில்லை, வந்தடைய வில்லை.. அதன் இல்லாத அரசியலையோ.. சோர்வூட்டும் அழகியலையோ..பற்றி பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

அய்யா! படத்தின் சூத்திரம் இது தான் : "ஒரு நல்லவன் - கெட்டவன், உண்மையில் கெட்டவனுக்கு ஒரு பெரிய நியாயம் இருக்கிறது, இவர்கள் இடையில் ஒரு பெண்- சல்லாபங்கள், சஞ்சலங்கள்,மோதல்கள்..அவள் நினைப்பது போல் அவன் கெட்டவன் அல்ல என்று புரிகிறது , கடைசியில் ஊருக்காக உழைத்த அந்த கெட்டவன் பரிதாபமாக, அனாதையை போல் சாகிறான்.." இது தானய்யா formula..!! இதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?.. location புதிதாக மாற்றலாம், சில சித்து விளையாட்டுக்களை செய்யலாம்..இதிகாச அல்லது அரசியல் சாயம் பூசலாம்.. நல்ல விலைக்குப் போகக்கூடிய சரக்கை உற்பத்தி பண்ணலாம் ..அவ்வளவு தான்.!!.

cinemams@gmail.com
Note,,
19/7/2010 இல் எழுதப்பட்ட இந்த விமர்சனம் சமகால தமிழ் சினிமாவை பற்றிய அக்கறையை கொண்டுள்ளதால் இங்கு பதிவு செய்துள்ளேன்.
-விஜய் மகேந்திரன்.

Outskirts of The CITY



Outskirts of The CITY

By Vijay Mahindran



Priya was in bath. It was clearly heard that Catherine was talking to someone. Mr. Suriyaprakash ( shortly called “ SP” hereafter) had already sent tow SMS when Priya was taking bath. Mobile phone was found ringing continuously.

“ Who is on mobile?” Priya asked Catherine.

“ S P”

“Tell him I am in bathroom”
Priya knows that this is not the time for him to call her. He used to call her only during the meals interval. But SP had asked Catherine to give the phone to the bathroom.

Priya got aversion.

“ Can you not tolerate till my bath is over” Priya scolded him.

“Why you had not replied to my SMS”

This added anger to Priya She used to see the SMS during her bus travel. The travel was convenient to her to reply and delete the unwanted SMS.

Priya is a receptionist in a star hotel located at Palace road. Her duty is 9 to 9. Sunday is the only holiday for her.

On one occasion SP had a look on her when she was returning to hostel after her work. He used to travel in the same bus route of Priya. Both their eyes met as a lightening casually. She observed that his eyes were gazing over her body only. Love started. They exchanged their love in air-conditioned cine theatres, roof top restaurants, auto travel etc., for the past 6 to 7 months. Priya in her soap foamy fingers opened the SMS and read it. It was informed in the SMS that she should come in blue color dress only on that day.

Priya in a louder voice “I will wear any color of dress of my choice. You need not dictate terms”.

But SP did not care for her telling “ Blue color Blue color” repeatedly and switched off the phone.

He was found forcing Priya with his desire even in petty matters. Priya had hated such of his actions.

Ctharine had discussed this before two days back. They are found standing on the open terrace of the hostel in transparent nighties without in skirts exposing their breasts.

“ SP is torturing me. He had taken me to a beauty parlor and and asked me to get my hair-style reduced to half length. When asked he says it is troublesome form to give kiss to her.He compelled me to come in blue color suridar. I know where he calls me? His friend’s house is at Tirunagar and it is now locked. He had taken me to that house. He wants only to enjoy me. I am thinking to drop him” Priya said. Catherine agreed this.

“ I have to go to Nandini Nursing Home. Are you having time this Sunday?”

“Necessary should go? You too got trapped”

“sss speak calm”


They got down and gone to their rooms. When they are about to lie on the bed, knocking sound was heard from the door. Catherine opened the door. Hostel warden entered into the room with a new girl. The warden introduced the girl as her name is Backialakshmi shortly called as Packiam and she has to stay with them in the room.

Catherine called her affectionately and asked to sit near her. Priya was eager to know about the new and chatting with her. Priya had completely forgotten about SP on that night. She was in dilemma from his morning phone whether to accept his desires or to drop him. Catherine left without saying anything as she had to join a job in one computer
institution on that day.

Priya got into the bus in confusion mood. She was in yellow. She adjusted her inskirt without anyone’s notice Her mind was wavering what to reply for the SP. She did not
care the romance of the couple seated in her opposite in the bus. The husband was seen to put flowers on his wife’s head and his wife prevented with her hand. Later she adjusted
to allow her husband to put the flowers on her head. Priya moved her face towards the window. Later she did not care for the couple till she got down from the bus.


She walked to the hotel along with her colleagues. She found Vignesh and Malathi at the reception. Priya went to the dressing room and dressed in the uniform. She found SP was standing as expected.

“Get leave and come with me” SP.

“Impossible” Priya.

Priya did not ask him where to go. SP also did not tell anything and left murmuring with
Vulgar words. She had forgotten about him. No contact either in person or mobile was made.

That day is last Sunday of the month. Thirty days passed forgetting the blue dress. Priya and Catherine were found keeping silence after they returned from Nandini Nursing Home. They did not observe anyone. They didn’t care for the eyes of those gazing their bodies. They went to a tank nearby. Children were found playing on the ground of waterless tank. Among, one was found whistling at Priya. She smiled. Gentle freeze, yellowish sunlight, enthusiastic children’s face made her fell brisk. She had not got
Feeling till now. They sat on the green grass of the tank . They purchased some peas and
cut mango pieces soaked with chilli powder and salt. Excess salt and chilli powder were
wiped out with paper. They began to bite . Catherine casually turned to the otherside. She tapped Priya’s hand and showed the Packiam and SP were chatting. Priya got irritated seeing this. It is known to her whether her angry is on SP or Packiam. Priya and Catherine returned to hostel.

Later Priya could not talk freely to Packiam. A silent gap prevailed between them. But
Catherine was found talking to them about his boy friends and their doings. Priya got jealous how Catherine makes her fit to mingle with all the boy friends at the same time. She came to know that the scent and color of the dress of Packiam is the compulsion of SP. She decided not to open her mouth on this. Priya felt more jealous on Catherine than Packiam. She was tempted that she should make herself to be more sexually attractive to
Gent’s eyes. She realized her cut was irregular which was too short. Mirror revealed her
half cut of hair length. She thought the punished hairstyle should be blessed with long hair style. Vignesh, her colleague, had already told her, long hair style will make her more beautiful. He had told her twice about this. When he was in reception, he used to wear off his shoes and sacs and touch Priya’s legs with his toes under the table as it was casual.. Priya knows this and did not object. She thought tat she should have selected him. He is the only son of his family and got a own flat. He was found with two credit cards. She realized of her foolishness of loving SP. Now she decided to convey her love to
Vignesh on the very next day when he is on duty. She slept calmly on that day.


Packiam stayed in the hostel for two days without going for her work. Catherine asked her
“Do you not feeling well?’ Packiam did not reply as she was in depressed mind. Her idea was how to commit suicide in the hostel premises itself. Her menses was stopped for more than 40 days. She had told this to SP. He did not care this even as a news. He observed her as a passer-by. He did not either console or comfort her. But he recommended for abortion.

Unable to bear this shock, she began to quarrel “ I will not
agree this even if I die”. She immediately left the bus stop.

Her desire was only to marry him and give birth a child. Then when she tried to contact him on mobile, it replied “Switched off”. She had searched him in all places they had met. He was not found anywhere. When she contacted the office where he said to be at work, “no such person worked here” was the reply given to her.

Packiam was in tears. She recollected her memories of the company with him in blue suridar for sexual intercourse and the imaginary life she had with him. Two days passed.
With these thoughts she decided to commit suicide.

Suspicion rose to Catherine. She confirmed with Priya that Packiam had not used Napkin for the past one month. When Catherine enquired this with Packiam she admitted her
guilty in tears.

After some days later, Priya also consoled Packiam saying “Don’t worry.
You can be changed as erstwhile Packiam without anyone’s knowledge. Catherine also shacked her head agreeing this.


Next Sunday Catherine got into an auto with Packiam for Nandini Nursing Home. Priya told
that she had already informed the matter and made arrangements to her known nurse. Before the auto started Packiam took her hand with affection and requested her to
throw away the blue color suridar to the waste Bin.Packiam told her that she should not
see the blue suridar when she returns from the hospital. Priya agreed to this.

Meanwhile Priya noticed her cell ringing. It was from Vignesh asking her to come to a particular spot with a choice of his dress.


Translation of tamil short story ''NAGARATHIRRKU VELIYE''
தமிழில் இந்த கதையை படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Friday, September 17, 2010

RAMANESAN_ My Friend


RAMANESAN_ My Friend

By Vijay Mahendran.


Ramanesan is one of my friends. It is different whether he admires Lord Rama.or not. He doesn’t love the world. It may be said he loved his own body.
However he manages to have full meals three times a day, faithfully with
absolute devotion. His appearance reveals distinctly he is from agraharam,a Bramins,dwelling area. He is known to me from my college days. He used to apply VIBHUTHI with KUMKUM on his forehead. His laughing is like a horse neighs. It will irritate me frequently. My college
girls liked to have chat with him. To me, it seemed that he neglects
the people in the world. His activities appeared that he is the only
the intellectual in the world, nobody else. Therefore, I had more dislikes against him.

He had no expenses in his college. One college mate will be available
for giving him a two-wheeler lift from his hostel to college, one for taking him to cinema, other for donating him a new shirt and another for other
expenses. Why all these are waiting in que to give favors to him. It was a great confusion to me and I could not understand. None does any favor without expecting a deal in these modern days. I determined to have a secret probe through his fans. After hard efforts, many matters came to light. They are quite interesting to readers.


Many others in my class needed his assistance and cooperation. To prepare the notes for exam, to copy the assignments in his good handwriting, to clarify the doubts then and there, his presence was essential for them in different ways. It may be fair even when he stopped with these items. At times he kneeled down to the bottom.


One Miss.M. Bama, a co-student in my college had handed over her suridar to him for getting altered as it was in big size. He managed to approach petty tailor for alteration. He had received
double charges from her against the charges demanded by the tailor.
It was a hot topic in my class at that time.

One of my friend Mr.Kumar
Informed me that Ramanesan handed over the suridar to the tailor for alteration after he had laid down on the suridar for two days.

He was such a type. There are so many hearsay stories about him.
On one occasion he approached Subbulakshmi,(Co-student) who was in saree and told her “ I am willing to marry you”. She replied” Do that if possible” and rushed to her seat.

Ramanesan told my friend Mr. Kumar “ I told her seriously. But she took it as a joke “. He used to dance in “Bachelors party” held by the students consuming abnormal alcoholic drinks even not caring for the dhoti in his waist.

To the surprise in the next early morning he used to wake up at dawn. He used to take bath in cold water, chatting” mantras” applying “VIBHUTHI” in his fore-head He looked like a sacred saint.
He was a selfish work-man. I did not like him. He used to canvas me
frequently with horse-neigh brand laugh. I used to turned down my face. I did not expect any favour from him. I did not want to be a slave
for idleness. Therefore I disliked his activities. My experience with him was more than I heard about his caliber.

Someone in my class used to smoke a cigarette in a petty-shop. He used to go there and neigh. He used to request “ one pup please”. The smoker used to give away the cigarette and leave the spot. He will smoke it till the end of cigarette sponge .Someone
used to come there for having tea. His neigh-laugh will begin automatically for tea.

“What Ramanesa? Tea” said one. “Yes strong tea” said Ramanesan. Seeing this I got irritated. How he manages to drink, to eat free without feeling shy? I murmured to myself.
I consoled myself that he has a face-luck. He will do anything without any hesitation or shyness. Whenever he feels that his hostel meals is not good, he used to go to one of his
friend’s house of his choice without any invitation. It may be daylight 3 o’clock or midnight 12 o’clock. He doesn’t care for anything. He wants to eat tastily. It may be green’s curry
vegetables or chicken Briyani. (Ramanesan used to eat chicken briyani in Non-veg item)
He used to say that he was accustomed to eat chicken briyani from his child-hood.


Once Ramanesan has gone to one of his friend’s house. No meals was available at that
time since the relatives of the friend had emptied the meals on that day. His friend was in
a dilemma what to do. Ramanesan straightaway went to the kitchen not caring for his friend. He found iced-rice (spared cooked rice poured with water) was in a round shaped
vessel(Kunda) and mango pickle in a bottle. He swallowed iced-rice with mango pickle. He demanded a Wills cigarette. It was not available at that time as it was midnight and shops remained closed. He told his friend to go and search the cigarette from the pocket of his
father. What to say about this, giving troubles to others at odd times? His glamour was not
tarnished of such of his activities. His college mates continued to support him. His
popularity grew further. However I used to look at him with my stern face frequently. But Ramanesan did not care for my irritation. As usual he continued to be a good friend to everyone. He was a versatile to the vicinity.

The climax of his madness was that he left for Thiruvannamalai to join as a saint(samiyar). He has met a bogus saint called “THULI Samiyar” in his native place
Tiruchendur. Thereafter Ramanesan did not attend college for a long time. I had grasped
from his friend’s group chat that Ramanesan joined as disciple to “Thuli Samiyar”. When the Samiyar was in a deep-happy sleep (“Ananda sayanam”), he managed to escape from
there. He got into a onion-loaded lorry and arrived Trichy. His friend told me that Ramanesan walked upto Madurai from Trichy. Sadness prevailed over his face for some time. After one or two days he turned into his normal life.

College days were over. We dispersed from the college to seek our future. Ramanesan was completely forgotten. One day I found an invitation at my house door-steps, when I returned from my office. To my surprise it was Ramanesan’s wedding invitation and my present address was correctly written on the envelope. After my college life, my residence
was shifted more than three times. The invitation was printed saying the marriage is to be held with the blessing of bride and bridegrooms’ father, mother, grandfather, grandmother etc., self-profession was noted under Ramanesan’s name. I am sure that it may not be the
profession of face-lifting job. I murmured to myself that marriage is surely a curse for such a person. My friends invited me over phone to attend the marriage. I replied “ I don’t want to see his face “. My friends compelled me again saying that marriage will be a forum to meet all of our old college friends and the choice to attend the marriage is mine. I have rolled over on my bed spending sleepless night recollecting college days’ memories.


How many stories are there in an individual in college days? One such Ramanesan will be there in thousands of students, in a college, in a class. My thinking why he is such a type will be a question to others revealing his identity. It may be a law of existents. Who knows? Among so many memories, the memory of Ramanesan frequently disturbed me. It seemed that he liked me and was nearer to me. Though I disliked him in college days due to infatuation I begin to like him so much as he had not done any harm to me. Life had not layed with him. He had played with life like a disbursed play cards. To me it seems he had
added the interesting scenes of life with him. He made others happy. As an average spectator in life, I felt that he was far above to me.

Finally, I decided to attend his marriage. I wanted to see the courage bride to marry such a type of person. I conveyed my decision to my friends over phone that “ I will attend the marriage”.

Post-Postmodernism எனப்படும் பிந்தைய பின் நவீனத்துவம் குறித்து....

Post-Postmodernism எனப்படும் பிந்தைய பின் நவீனத்துவம் குறித்து....
எம்.ஜி.சுரேஷ்


பின் நவீனத்துவம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக சிலர் தொண்ணூறுகளில் அறிவித்தார்கள். அதாவது, பின் நவீனத்துவம் அவுட்-ஆஃப் ஃபேஷன் ஆகிவிட்டது என்றும், கடந்த 50 ஆண்டுக் காலத்தில் நுகர்வோர் கலாச்சாரம் புதிய பரிமாணங்களை எட்டிவிட்டது என்றும், அதன் விளைவாக 1990ன் பிற்பகுதியில் பிந்தைய பின் நவீனத்துவம் (Post-Postmodernism) தோன்றி விட்டது என்றும் உறுதி செய்தார்கள். பின் நவீனத்துவம் நம்பிக்கையின்மையை விதைக்கிறது. எனவே, நம்பிக்கை, விசுவாசம், நம்பிக்கையூட்டும் உரையாடல், நிகழ்த்திக்காட்டுதல் ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும். அதன் மூலம் பின் நவீனத்துவ நகை முரணை (Post modern irony) கடந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து இந்தப் புதிய சிந்தனையை வடிவமைப்பதில் சிலர் முனைந்தனர். (உண்மையில் பின் நவீனத்துவம் அவ நம்பிக்கையை விதைக்கவில்லை. நம்பிக்கையின் மேல் கேள்விகளை எழுப்பியது; விசாரணை செய்தது என்பது வேறு விஷயம்.)

அமெரிக்கக் கட்டடக்கலை நிபுணரான கிறிஸ்தோபர் அலெக்ஸாண்டரின் தாவோயிஸ அடிப்படையிலான கட்டடக்கலை, ஜெர்மானிய ஜெஸ்டால்ட் உளவியல், குஸ்தாவ் யங்கின் மூலமாதிரிக் கருத்தியல் ஆகியவற்றைக் கலந்து டாம் டர்னர் என்ற கட்டடக்கலைஞர் ஒரு கொள்கையை உருவாக்கினார். அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரு புது மோஸ்தர் நகரமைப்புத் திட்டத்தை உருவாக்கினார். தனது கருத்தியலை ‘பிந்தைய பின் நவீனத்துவத் திருப்பம்’ என்ற த்லைப்பில் ஒரு சிறு நூலாக எழுதினார். அந்த நூல் 1995 ஆம் ஆண்டு வெளியானது. கவனிக்கப்படாமல் போயிற்று.

1999ம் ஆண்டு, ருஷ்ய பின் நவீனவாதியான மிகயீல் எப்ஸ்டீன் ஒரு நூல் எழுதினார். அதில், ‘நவீனத்துவத்தில் இருந்து பின் நவீனத்துவம் வெளிப்பட்ட மாதிரி பின் நவீனத்துவத்தின் நீட்சியாக அதற்கு அடுத்த கட்டம் தோன்றி விட்டது’ என்று குறிப்பிட்டார். அதை ‘அப்பாலை பின் நவீனத்துவம்’ (Trans Postmodernism) என்று அழைக்கலாம் என்பது அவர் கருத்து. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பின் நவீனத்துவம் தோன்றி, தனக்கு முன் இருந்த பல கருத்தியல்களுக்கு ‘பின்’ (Post) என்ற முன்னொட்டு சேர்த்தது. அதன் விளைவாக, நவீனத்துவம் பின் நவீனத்துவமாக மாற்றம் கொண்டது. தொடர்ந்து, பின் காலனியம், பின் மார்க்ஸிஸம், பின் முதலாளியம், பின் கருத்துமுதல்வாதம் என்று எல்லாமே ‘பின்’ என்ற முன்னொட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. இப்போது அப்பாலை பின் நவீனத்துவத்தின்படி பழைய கருத்தியல்கள் யாவும், பின் என்ற முன்னொட்டுக்குப் பதில் அப்பாலை என்ற முன்னொட்டால அடையாளப்படுத்தப்பட வேண்டும். என்பது எப்ஸ்டீனின் கருத்து.

அமெரிக்கச் சிந்தனையாளரான எரிக் கான்ஸ் (Eric Gans) என்பவர் கி.பி. 2000 க்குப்பின் வரும் ஆண்டுகளை பிந்தைய ஆயிரம் (Post Millenium) என்று அழைக்க வேண்டும் என்றார். மேலும் அவர் பின் நவீனத்தின் மீதான தனது விமர்சனத்தையும் முன் வைத்தார். அவரது கருத்தின்படி, ‘நவீனத்துவத்தின் தோல்வி மற்றும் அதனால் ஏற்பட்ட எரிச்சல், விரக்தி ஆகியவற்றின் விளைவாகவே பின் நவீனத்துவம் தோன்றியது’ அவர் ஒரு சமன்பாட்டையும் சொல்கிறார். பாதிப்புக்குப் பொறுப்பாளிகள் X பாதிக்கப்பட்டவர்கள் என்பது அந்த சமன்பாடு. கான்ஸின் வாதம் பின் நவீனத்துவத்தைக் குறுக்கிப் பார்க்கும் வாதம் என்றே சொல்லத்தோன்றுகிறது. எரிச்சலும், விரக்தியும் ஒருவனை ஒன்று பயங்கரவாதி ஆக்கும்; அல்லது துறவி ஆக்கும். பின் நவீனத்துவவாதிகள் யாருமே பயங்கரவாதிகளோ அல்லது துறவிகளோ அல்ல. அவர்கள் ஜனநாயகவாதிகள் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், கான்ஸ் தனது வாதத்தில், ‘பின் நவீன அறம் என்பது நவீனத்துவத்துக்கு எதிரான முதலாளித்துவ வெறுப்பு மற்றும் ஜனநாயக எதிர்ப்பும் ஆகும்’ என்கிறார். இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் இருக்கின்றன. முதலாளித்துவ வெறுப்பு என்பது உண்மையே; ஜனநாயக எதிர்ப்பு என்பது பொய். உரைநடையையே ஜனநாயகப்படுத்தி வாசிப்பு ஜனநாயகம் கோரும் பின் நவீனத்துவம் ஜனநாயக எதிர்ப்பைக் கொண்டிருப்பதாக கான்ஸ் சொல்வது அவரது தவறான புரிதலையே காட்டுகிறது. ‘முதலாளித்துவம் உற்பத்தித் திறன் மிக்கது; பின் நவீனத்துவம் உற்பத்தித்திறன் அற்றது’ என்பது கான்ஸின் இன்னொரு குற்றச்சாட்டு. உற்பத்தி செய்து அதன் மூலம் லாபம் ஈட்டுவது முதலாளித்துவத்தின் இலக்கு. எனவே அது உற்பத்தித் திறன் மிக்கதாகத்தானே இருக்க முடியும். அந்த உற்பத்தித் திறன் ஈட்டும் லாபம் யாருடைய பெட்டிக்குப் போய்ச்சேர்கிறது என்பதுதான் கேள்வியே.

கான்ஸின் கூற்றுப்படி, ‘பின் நவீனத்துவத்துக்கு அடுத்து வரும் யுகம் பிந்தைய புத்தாயிரம் ஆகும்.அதை அவ்விதமே அழைக்க வேண்டும். மேலும், பின் நவீனத்துவம் உருவாக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை சார்ந்து உருவாக்கப்பட்ட உரையாடலை ஒதுக்கி விட்டு அதற்கு மாற்றான மனநிலைக்குரிய உரையாடலை உருவாக்கவேண்டும். அப்போதுதான் உலகில் நிலவும் எரிச்சலும் விரக்தியும் இல்லாமல் போகும்.’ கான்ஸின் வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஆஷ்விட்ஸ் வதை முகாமில் ஒரு காரணமுமின்றி லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஸ்டாலின் கால ருஷ்யாவில் ஏராளமான அப்பாவிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதனால்தான் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையும், அவர்களைச் சார்ந்த மனநிலையும் உருவாயின. அது சார்ந்த உரையாடல்களும் தோன்றின. இன்னமும் ஃபாசிசத்தின் அபாயம் முற்றிலும் நீங்கி விடாத நிலையில் அதையெல்லாம் மறந்து வேறு ஒரு புதிய உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று கான்ஸ் ஆசைப்படுவது ஓர் ஆதிக்க சக்தி கொண்ட அதிகாரத்தின் அரசியலை ஆதரிப்பதல்லாமல் வேறென்ன?

பிந்தைய பின் நவீனத்துவத்தை வேறு மாதிரி அணுகியவர் என்று ஜெர்மானிய அமெரிக்கரான ரயோல் எஷல்மேன் என்பவரைக் குறிப்பிடலாம். அவர் ஒரு புத்தகம் எழுதினார். அதன் பெயர்: ‘நிகழ்த்திக் காட்டுதலும், பின் நவீனத்துவத்தின் முடிவும்’ (Perfomatism and end of Post modernism). அவரது கருத்தின்படி, ‘ஒருங்கிணைக்கப்பட்ட, அழகியலால் ஊடாடப்பட்ட, கடந்து செல்லும் அனுபவம்தான் நிகழ்த்திக் காட்டுதல் ஆகும்’. அது மட்டுமல்ல; ‘மூடப்பட்ட கலையை அதில் இருக்கும் எளிய ஆனால் புரிந்து கொள்ள சிரமம் தருகிற கதாபாத்திரம் அல்லது தருணம் ஆகியவற்றைக் கொண்டு பார்வையாளன் அழகு, அன்பு, நம்பிக்கை மற்றும் காலத்தை மீறிக் கடந்து செல்லும் தன்மை ஆகியவற்றை உணர்தலே’ என்றும் அவர் சொல்கிறார். இவர் ஜீன் லக் மாரியானின் ‘பின் நவீன மதவியல்’ என்கிற கோட்பாட்டை ஆதரிக்கிறார் என்பது ஆபத்தான செய்தியாகப் படுகிறது.

2006 ம் ஆண்டு பிரிட்டிஷ் சிந்தனையாளரான ஆலன் கிர்பி, ‘பின் நவீனத்துவத்தின் மரணமும், அதன் பின்பும்’ என்ற ஒரு நூல் எழுதினார். அதில் அவர் ‘பின் நவீனத்துவம் இறந்து விட்டது; அதன் இடத்தில், ஒரு புதிய அதிகாரச்சட்டகமும், அறிவும் குடி புகுந்திருக்கின்றன.’ என்று சொல்கிறார். ஆலன் கிர்பி பிந்தைய பின் நவீனத்துவத்தை போலி நவீனத்துவம் (Pseudo Modernism) என்று அழைக்கிறார். மொபைல் போன், இணையம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களின் பங்கேற்பு போன்ற நிலைமைகளை இவர் போலி நவீனத்துவம் என்கிறார். இந்த போலி நவீன யுகத்தில் ஒரு மனிதன் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் மொபைலில் எண்களை அழுத்தி போன் செய்கிறான்.கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ‘க்ளிக்’குகிறான். மௌஸை அழுத்தி நகர்த்தி திரையில் தேடுகிறான். தேர்வு செய்கிறான். வேண்டியவற்றை இறக்கம் செய்து கொள்கிறான். இதனை ‘ஒரு படித்தான அறிவு ஜீவி நிலை’ என்று கிர்பி அழைக்கிறார். அந்த நிலை ஒரு ‘அரை மயக்க நிலை’ என்றும் குறிப்பிடுகிறார். இப்படி மீடியா மூலம் பெறப்படும் உள்ளீடற்ற தன்மையானது நவீனத்துவத்தின் மனநோயையும், பின் நவீனத்துவத்தின் சுயமோகத்தையும் தாண்டிச் செல்கிறது’ என்கிறார். கிர்பி நவீனத்துவத்தின் மனநோய் என்று சொல்வது சரிதான். ஆனால், பின் நவீனத்துவத்தின் சுயமோகம் என்று குறிப்பிடுவது சரியில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனேனில், சுயமோகம் என்பதே நவீனத்துவம் சார்ந்தது. அதிகாரத்தின் சுயமோகம், ஆசிரியனின் சுயமோகம், அரசியல்வாதியின் சுயமோகம் என்று ஏகப்பட்ட சுயமோகங்களால் ஆனது. அந்த சுயமோகங்களை ரத்து செய்ய வந்தது பின் நவீனத்துவம். தலைக்குப் பின்னால் ‘ஒளிவட்டத்துடன்’ திரிந்த ஆசிரியனின் மரணத்தை அறிவித்தது பின் நவீனத்துவம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

‘பின் நவீனத்துவம் சொற்களின் அர்த்தம் பிடிபடாமை குறித்துப் பேசுகிறது. ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருப்பதாகவும், அதனால் அர்த்தங்கள் ஒத்திப்போடப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. அப்படி அர்த்தங்கள் ஒத்திபோடப்பட்டால் ஒரு பிரதியை எப்படி விமர்சனம் செய்வது?’ என்று கேள்வி எழுப்புகிறார் கிர்பி. எனவே பின் நவீன விமர்சனத்தைக் கை விட்டு அதற்குப் பதிலாக, ‘ஆய்வுபூர்வமான யதார்த்தவாதத்தை’ (Critical realism) கையில் எடுக்க வேண்டும் என்கிறார் கிர்பி.

பின் நவீனத்துவம் சொற்களின் அர்த்தம் பிடிபடாமை குறித்துப் பேசுவது எந்த அர்த்தத்தையுமே எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற பொருளில் அல்ல. எல்லா அர்த்தங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. சொல்லின் அர்த்தத்தை ஒற்றையாகக் குறுக்கி விடக்கூடாது என்பதே அதன் நோக்கம். இதில் பின் நவீன விமர்சனத்தை நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப் போனால், கிர்பி சொல்லும் கிரிட்டிகல் ரியலிஸம் பின் நவீனம் சார்ந்ததே. தத்துவத்துறையில் கிரிட்டிகல் ரியலிஸ்ம் என்பது ஜான் லாக், தெகார்த்தே போன்றவர்களால் ஏற்கெனவே துவக்கி வைக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அரிஸ்டாட்டிலின் ‘மறைமுக யதார்த்தம்’(Indirect realism) வரை நாம் பயணம் செய்ய முடியும். அரிஸ்டாட்டிலின் கருத்தை பெர்ட்ரண்ட் ரஸல், ஸ்பைனோஸா, போன்றோர் வளர்த்தெடுத்தனர். கிரிட்டிகல் ரியலிஸத்தை பின் வருமாறு சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.

என் கண் முன்னே ஒரு டேபிளின் மேல் ஒரு தம்ளர் இருக்கிறது. அதில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது.

(அ) நான் இப்போது அந்தத் தம்ளரைப் பார்க்கிறேன். நான் சொல்கிறேன். ‘இப்போது நான் தம்ளரைப் பார்க்கிறேன் என்று. ஆனால், நான் பார்ப்பது தம்ளரை அல்ல. என் விழித்திரையில் படும் அதன் பிம்பத்தை மட்டுமே. அது தம்ளரின் பிரதிநிதித்துவம். அதே போல் நாம் பார்க்கும் விஷயங்களை கலை ஆக்கங்களாக உருவாக்கும் போது அவையும் அசல் விஷயங்களின் பிரதிநிதித்துவங்களாக இருக்கின்றன.

(ஆ) நான் பார்க்கும் தம்ளரில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது என்று நான் சொன்னால் அது எனது நம்பிக்கையைக் குறிக்கும். அதுவே அந்த தம்ளரில் பாதி தம்ளர் காலியாக இருக்கிறது என்று சொன்னால் அது எனது அவநம்பிக்கையைக் காட்டும்.

தம்ளர் என்பது யதார்த்தம். அதை நான் பார்க்கும் போது பிரதிநிதித்துவம்; அதில் இருப்பதைப் பற்றிப் பேசும் போது யதார்த்தம் என்பது ஆய்வு ரீதியிலான யதார்த்தமாக ஆகிவிடுகிறது. இது பின் நவீனத்துவம் சார்ந்ததே.

இணையத்தில் உலவும் வலைப்பூக்கள் (Blogs) பற்றிக் குறிப்பிடும் கிர்பி, அந்தப் பக்கங்களுக்கு யார் ஆசிரியன் என்பது குறித்து யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை; பொருட்படுத்துவதும் இல்லை’ என்கிறார். இது உண்மையே. ஒரு காலத்தில் ஆசிரியன் என்று ஒருவன் இருந்தான். அவன் எழுதும் எழுத்துகள் அவன் பெயரிலேயே பிரசுரமாகும். அவனுக்குப் பெயரும் புகழும் கிடைக்கும். இன்றைக்கு, இணைய தளத்தில் தகவல் திரட்டும் போது நமக்கு தகவல்கள்தான் முக்கியமாக இருக்கின்றன். அந்தத் தகவல்களைத் தேடி எழுதி இணையத்தில் பதிவு செய்த ஆசிரியனைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

அதே போல்தான் பத்திரிகை ஆசிரியரும். ஒரு பத்திரிகையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் விரும்பும் விஷயங்கள் மட்டுமே வெளியாகும். அவருக்குப் பிடிக்காத எழுத்துகள் பிரசுரமாகாது. இதனால் ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து பிரசுரமாகவில்லையே என்று ஏங்கியதுண்டு. இப்போது வலைப்பூ வந்த பின் ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கென்று ஒரு வலைப்பூ தளத்தை ஏற்படுத்திக் கொண்டு சுதந்திரமாக எழுதுகிறான். ஒரு பத்திரிகைக்கான லே-அவுட் போன்ற அனைத்து வசதிகளும் வ்லைப்பூக்களில் உண்டு. ஆக, ஒரு வலைப்பூ என்பது அந்த எழுத்தாளனின் பத்திரிகை எனலாம். இந்த வலைப்பூக்கள் ஆயிரக்கணக்கானவர்களால் படிக்கப்படுகின்றன. வலைப்பூவுக்கு வரும் ஆசிரியரின் கடிதங்கள் என்று பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். இந்த வலைப்பூக்கள் ஆசிரியன் என்ற ஒற்றைத்தன்மையை உடைத்து பல ஆசிரியர்கள் என்னும் பன்மைத்தன்மையை உருவாக்குகின்றன. இதை கிர்பி பிந்தைய பின் நவீன நிலவரம் என்று குறிப்பிடுகிறார். இது உண்மையே.

பொத்ரியார் தொலைக்காட்சியைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘நமது இருண்ட அறைகளை இந்த ஊடகம் தனது குளிர்ந்த ஒளியினால் நிரப்புகிறது. தனது ஒளிக்கதிர்களினால் சதா நம்மைத் துளைத்தபடி இருக்கிறது. நாம் செயலற்றவர்களாக நம்மை முற்றிலுமாக ஒப்புக் கொடுத்திருக்கிறோம், என்றார். நிலைமை இப்போது அப்படி இல்லை என்கிறார் கிர்பி. இன்றைக்கு டிவி நம்மை செயலற்ற பார்வையாளர்களாக வைத்திருக்கவில்லை. நம்மைப் பங்கு பெறுபவர்களாகவும் ஆக்கி இருக்கிறது. இன்று ரியாலிடி ஷோ, டாக் ஷோ போன்ற நிக்ழ்ச்சிகளில் பார்வையாளர்கள் நேரடியாகப் பங்கு பெறுகிறார்கள். பணமும் சம்பாதிக்கிறார்கள். இன்றைக்கு டிவி பொழுது போக்குச் சாதனம் மட்டுமல்ல; பணம் ஈட்டும் சாதனமும் கூட. தவிரவும் பொத்ரியார் சொன்ன காலத்தில் டிவி கண் கவர் காட்சியாகவும், தன்னை மையத்தில் இருத்திக் கொண்டும், பார்வையாளனை விளிம்பிலும் வைத்திருந்தது. இந்த நிலை இப்போது மாறிவிட்டது. மையம் – விளிம்பு பாகுபாடு தகர்ந்து விட்டது. பார்வையாளன் தன்னையே டிவியில் பிம்பமாகப் பார்த்துக் கொள்ளும் போது எது மையம்? எது விளிம்பு?

சரி, பின் நவீன யுகத்துக்கும் இப்போதைய போலி நவீனத்துக்குமுள்ள வித்தியாசம் என்ன?

பின் நவீன யுகத்தில் ஒரு மனிதன் படித்தான்; பார்த்தான்; கவனித்தான். போலி நவீன யுகத்திலோ ஒரு மனிதன் க்ளிக் செய்கிறான்; மௌஸை அழுத்துகிறான்; திரையில் தேடுகிறான்; தேர்ந்தெடுக்கிறான்; தகவல் இறக்கம் செய்கிறான். இப்போது பிரதி என்று தனியே எதுவும் இல்லை. அவனே பிரதியாக இருக்கிறான். எல்லாப் பிரதிகளையும் தாண்டிச் செல்லும் பிரதியாக.

Tuesday, September 14, 2010

sakitya akademy literary reading function


Date 19 september, sunday.
venue connemara public library
time 5.30pm evening
reading by

andal priyadarshini [poem]
yugamayini cithan[story]
era.murugan[story]
vijay mahendran [story]
uma sakthi[poem]
geetanjali priyadarshini [poem]

Tuesday, September 7, 2010

பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!

எனது பாராட்டுவிழாவில் லெனின், இ.பா
பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!

பாரதி மணி

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி எனக்கு மகிழ்வான நாள். தமிழ்ஸ்டுடியோ.காம் அமைப்பினர், அருண்-குணா முயற்சியில் நண்பர் எடிட்டர் லெனினுக்கு வாழ்நாள் சாதனை விழாவும், அதையொட்டி வருடம்தோறும் அவர் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கான விருதுவிழாவும் விழாநாயகன் எடிட்டர் லெனின் வராமலே இனிது நடந்தேறியது! அவர் வராமலேயே அவருக்காக கேக் வெட்டி, ‘Happy Birthday to you….Lenin!’ என்று பாடி நாங்கள் கொண்டாடினோம்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் நள்ளிரவில் தில்லி பாராளுமன்றத்தில் பிரதமர் நேருஜி ‘Long years ago……’ என்று முழக்கமிட்ட நாளில் பீம்சிங்கின் மனைவி சோனாபாய்க்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் இவர். தன் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கு ஒரு விருது கொடுக்கப்போகிறார்களென்பதை அறிந்த லெனின், அருணைக்கூப்பிட்டு, ‘இத்துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கே இருக்கும்போது, என் பெயர் தான் உங்களுக்குக்கிடைத்ததா? எனக்குமுன்னால், எம்.எஸ். மணி – (இவர் தன் பெயரை Money என்று எழுதுவார்) – போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். சத்யஜித் ரே பெயர் உங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையா? என்னாலானதை நான் செய்துகொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்’ என்று சொல்லி விரட்டிவிட்டார். அருண் எனக்கு போன் பண்ணி, ‘சார்ட்டெ நீங்க சொல்லணும்!’ என்று கேட்டுக்கொண்டார். லெனினை ஓரளவு தெரிந்த நான் என் பேச்சு எடுபடாது என்று தெரிந்தும், ‘லெனின் சார், உங்களுடைய Sense of Values –ஐ நான் மதிக்கிறேன். ஆராதிக்கிறேன். ஆனாலும் ஒரு வயதுக்குமேல் நமக்கு ஓரளவு Sense of Proportion-ம் தேவையாக இருக்கிறது. அறுபது வயதானபின் நம் குழந்தைகள் ஆசைப்படுகிறார்களென்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு விருப்பமில்லாவிட்டாலும், திருக்கடையூர் கோவிலில் உட்கார்த்தி வைக்கப்பட்டு, குடம் குடமாக தண்ணீர் அபிஷேகம் செய்துகொள்வதில்லையா? அதிலும் ஒரு சந்தோஷமிருக்கிறது. அரசியலில் உங்கள் வயதே ஆன சுதந்திர இந்தியா எத்தனை சமரசங்களுக்கு உட்பட்டிருக்கிறது? நமக்கெல்லாம் விழாவெடுக்க யாரும் க்யூவில் காத்துக்கொண்டிருப்பதில்லை. இந்த விழா நீங்கள் சொல்லி ஏற்பாடு செய்ததல்ல. மற்றவர்கள் மகிழ்வுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!’ என்று கேட்டுக்கொண்டேன். இந்த விழாவுக்கு இருதினங்கள் முன்பு தமிழ்ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருந்த லெனின் குறும்படங்களின் திரையிடலின்போதும், அருணிடம், ‘ஞாயிற்றுக்கிழமை விழாவுக்கு லெனின் வராவிட்டால், நான் ஆச்சரியப்படமாட்டேன்’ என்று சொன்னேன்.

ஞாயிற்றுக்கிழமை விழா அரங்கில் ‘வரலாறு காணாத’ 150 பேர் கூடியிருந்தார்கள். அதில் பல ‘நாளைய இயக்குநர்’களும் அடக்கம். ஆறுமணியாகியும் ‘விழா நாயகன்’ வரவில்லை. மரியாதைக்காக தன் நண்பர் பொள்ளாச்சி சசியை அனுப்பிவைத்திருந்தார். விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு அரங்கிற்குள் வராமல் தன் ஏ.சி. காரிலேயே காத்திருந்துவிட்டு, இனி லெனின் வரமாட்டாரென்று தெரிந்ததும் போய்விட்டார். அவர் வராததில் கொஞ்சமும் ஏமாற்றமடையாத அந்த ‘நல்ல மானுடனின்’ நண்பர்கள், வந்திருந்த சசியை ‘உத்சவ மூர்த்தி’யாக ஆவாகனம் செய்து, பாராட்டுப்பத்திரம் வாசித்து, கேக் வெட்டி விழாவை கோலாகலமாகக்கொண்டாடினோம்.

இந்த விழாவில் திரு. லெனினுக்கு ஒரு பாராட்டுப்பத்திரம் வாசித்து அளிக்கவேண்டுமென்று அருண் சொன்னார். உடனே எனக்குத்தெரிந்த ஒரே கவிஞர் கோவையிலிருந்த என் நண்பர் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவிடம் ஒரு கவிதை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து, ஒரு மசால்தோசை ஆர்டர் பண்ணி அது நம் மேசைக்கு வரும் நேரத்துக்குள் மரபின் மைந்தன் கீழ்வரும் அருமையான கவிதையை மின்னஞ்சலில் சூடாக எனக்கு அனுப்பி வைத்தார்:

நிரந்தர மனிதன் லெனின்!

சிற்பியின் உளியாய் கத்திரிக்கோலில்
அற்புதம் செய்கிற வித்தகக் கலைஞன்!
சித்தம் போக்கு சிவன் போக்கெனவே
நித்தம் வாழ்கிற நிரந்தர மனிதன்!
இயக்குநர் பீம்சிங்கின் இணையிலா வார்ப்பு!
தனக்கென வாழாத் தனித்துவத் தீர்ப்பு!
உச்சம் தொட்டும் உலகியல் மகிழ்வுகள்
துச்சம் என்றே தள்ளிடும் துறவி!
தனியொரு மனிதனாய் தரைவலிக்காமல்
தனிவழி நடந்து தன்தடம் கடந்து
இனி இவர்போல எவரென வாழும் லெனின்
எனும் மனிதர் லயம்மிகு கலைஞர்
வாழ்கிற விதமே வாழ்வியல் அதிசயம்
தானெனும் முனைப்பைத் துறந்ததே ரகசியம்!
முன்முடிவென்னும் மூட்டை தூக்காமல்
தன்வழி போகும் தனித்துவப் பயணி!
வாழைப்பழங்கள் தேங்காய் மூடியில்
வாழ்வைக் கழிக்கும் கோயில் யானை!
இன்ன விதமென எழுதிட முடியா
மின்னல் ஜாதகம்! மகத்துவ ஒவியம்!

சுதந்திரத் தேதியில் ஜனித்ததாலோ
சுதந்திரப் பறவையாய் சுற்றும் மேதை!
கறைகள் தொடாத காவிய வானம்
முறைதிறம்பாத முத்திரை ஞானம்
நிறைவாழ்நாளும் நீளும் களிப்புமாய்
சிறப்புடன் வாழந்திட சிலிர்ப்புடன் வாழ்த்தினோம்!
கணக்கில்லாத மகிழ்வுகள் உம்மிடம்
தணிக்கையில்லாமல் தினம்வந்து சேர்க!
வாழ்வெனில் யாதென விளங்கிய நீங்கள்
வாழ்வின் பொருளாய் வாழ்வாங்கு வாழ்க!

****** **** **** ******

விழாவில் ’எடிட்டர் லெனின்’ எனும் பெரிய கான்வாஸில் நான் என்னைப்பற்றியும் பெரிதாக வரைந்துகொண்டேன். அந்தக்கூட்டத்தில் நான் பேசியதன் விவரம் கீழே:

எனக்கு எடிட்டர்/இயக்குநர் பீம்சிங் லெனின் அவர்களை பத்துவருடங்களாகத்தான் தெரியும். 2000-ம் ஆண்டில், பாரதி படத்தில் சாயாஜி ஷிண்டேக்கு தமிழ் வசனங்கள் சொல்லிக்கொடுக்கும் உதவி இயக்குநராகவும், பாரதியின் தந்தையாகவும் பணியாற்றிவிட்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் தில்லி திரும்பிவிட்டேன். டப்பிங்கின் போது, படத்தில் பாரதியின் தந்தை பாத்திரத்தின் வசனங்களைப்பேசுவதற்கு, என்னை தில்லியிலிருந்து வரவழைத்தால், செலவு அதிகமாகுமென்று கருதி, சென்னை டப்பிங் கலைஞரைக்கொண்டே பேசச்செய்துவிடலாம் என்று இயக்குநர் விரும்பினார். பத்துக்கும் மேலான கலைஞர்களை பேசச்சொல்லியும் திருப்தியடையாத எடிட்டர் லெனின், ‘இவருக்கு மற்றவர்கள் டப்பிங் பேசுவது சிரமம். சங்கீத பாஷையில் சொன்னால், இவர் ஆரம்பிக்கும்போது, ஒரு இடம் தள்ளி எடுத்துவிட்டு, முடிக்கும்போது, சரியாக சமத்தில் முடிக்கிறார். தேர்ந்த கலைஞர்களுக்குத்தான் இது சாத்தியம். அதனால் அவரையே தில்லியிலிருந்து வரச்சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார். இதைக்கேள்விப்பட்ட எனக்கு ஆச்சரியம். இந்த நுணுக்கமான விஷயத்தை தில்லியில் தேசிய நாடகப்பள்ளி இயக்குநரான திரு. இப்ராஹிம் அல்காஸியும், எங்கள் தில்லி DBNS குழு டைரக்டர் ராமநாதனும் தான் கவனித்திருக்கிறார்கள். படத்தில் சின்னசாமி அய்யராக எட்டயபுரம் அரண்மனையில் ராஜாவைப்பார்த்தவுடன் ஒரு சின்ன வணக்கம் சொல்வேன். அதைப்பார்த்துவிட்டு, ‘எந்த தமிழ் நடிகனுக்கும் இது வராது. திலகன் போன்ற மலையாள நடிகர்களுக்கே உரிய நடிப்பு இது. அவர்களுக்கான Body Language’ என்று பாராட்டியிருக்கிறார். சினிமா பற்றிய இவரது கூரிய, சூட்சுமப்பார்வை என்னை ஆச்சரியப்படுத்தும்.

பாரதி படத்தில் முக்கியமில்லாத செல்லம்மா பாத்திரத்தை எடிட்டிங் மேசையில் பூரணமாக செதுக்கியவர் லெனின். படத்தின் பிரிவ்யூவுக்கு வந்திருந்த நடிகை தேவயானி பிறகு என்னிடம், ‘அங்க்கிள், என் பாத்திரம் நடிக்கும்போது இருந்ததை விட இப்போ நல்லாவே வந்திருக்கு’ என்றார். நான் சொன்னேன்: ‘அம்மா, அதற்கு நீங்கள் இரண்டு நபர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். முதலில் எடிட்டர் லெனினுக்கு. உங்கள் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர் அவர். இரண்டாவது நன்றி நடிகை சுவலட்சுமிக்கு. ஆரம்பத்தில் செல்லம்மாவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் நடிக்கமுடியாததால் தான் உங்களுக்கு இந்த சான்ஸ்!’

என்னைப்பொறுத்தவரையில் பாரதி படத்தின் மூலம் எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள் இரண்டு. முதலில் நண்பர் லெனினின் நட்பு. இரண்டாவது என் நண்பன் நாமக்கல் கண்ணன். ’இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்?’ ஆம், இவ்விருவராலும், என் சென்னை வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நான் சென்னை வந்ததும், நல்ல நண்பர்களுக்கான தேடலைத்தொடங்கினேன். அதில் சிக்கியவர் தான் திரு. லெனின். எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போனது. அவருக்கு என்னையும்! ஓரிரு வருடங்களில் நான் லெனின் குடும்பத்தில் ஓர் அங்கமாகிவிட்டேன். அவர் தாய் சோனா பாய் இருந்ததுவரை என் தயிர் சாதத்துக்கு நார்த்தங்காய் கொடுத்தனுப்பியது அவர் தான். ‘உப்பிட்ட’ நார்த்தங்காய் அளித்தவரை நான் உள்ளளவும் மறக்கமாட்டேன். இவரது மனைவி தன் பெயருக்கேற்ற மாதிரி அன்னபூரணி மட்டுமல்ல…. பூமாதேவியும் தான்.

நான் ஓர் ஊறுகாய்ப்பிரியன் என்பது என் நண்பர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஒரு தடவை லெனின் திருப்புணித்துறையிலிருந்து இரண்டு பெரிய பாட்டில்கள் நிறைய வடுமாங்காய் – இவர் மாமியார் போட்டது – இரு கைகளில் சுமந்துகொண்டு, இரவில் ரிஸர்வேஷனில்லாமல் ரயிலேறியிருக்கிறார். இவரை அடையாளம் கண்டுகொண்ட T,T.E. , ‘ஸாறே! நிங்ஙளாராணெந்நு எனிக்கறியாம். ஸாறுடெ கொறே சித்ரங்ஙள் ஞான் கண்டிற்றொண்டு. பக்ஷெ இந்நு ஒரு ரக்ஷயுமில்லா. வண்டி ஃபுள் டைற்றாணு’ என்று சொல்லி இவரை பாத்ரூம் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டார். இரவு முழுவதும் தூங்காமல், விடியற்காலம் சென்னை வந்திறங்கிய திரு. லெனின் வீட்டுக்குக்கூட போகாமல், நேராக என் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதிகாலையில் கதவைத்திறந்த சமையல்கார அம்மாவிடம் இரு ஊறுகாய் பாட்டில்களையும் கொடுத்துவிட்டு போய்விட்டார். தூங்கியெழுந்த நான் டைனிங் டேபிள் மேல் இருந்த பாட்டில்களைப்பார்த்ததும், ’யாரும்மா கொண்டுவந்தாங்க?’ என்று கேட்டேன். அதற்கு ’விடியக்காலம் ஒரு ஊறுகாய்க்காரர் குடுத்துட்டுப்போனார்’ என்றாள். சந்தேகப்பட்ட நான் ‘எப்படி இருந்தார்?’ என்று கேட்டதற்கு, ‘தாடியோடெ மடிச்சுக்கட்டின வேட்டி’ என்று பதில் வந்தது. விஷயமறிந்ததும், அந்த அம்மா ‘ஐயோ! அவரா? மலையாள படங்கள்ளே Editing: B. லெனின் V.T. விஜயன்னு வருமே….அவரா?.......ஓ…பீம்சிங் பையன்!……உள்ளே கூப்பிட்டு ஒரு வாய் காப்பி குடுக்காமெப்போனேனே!’ என்று பதறினார். ஐந்தாறு முறை தில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர்களிடம் எடிட்டிங், டைரக்‌ஷனுக்கு விருதுகள் வாங்கிய இவரது கைகள் என் ஊறுகாய் ஜாடிகளையும் சுமந்திருக்கின்றன! இந்த மாமனிதனால் மட்டுமே தன்னை வருத்திக்கொண்டு, எதிர்பார்ப்பில்லாமல் பிறருக்கு உதவி செய்யமுடியும்! பல சமயங்களில் He goes out of the way to help others! போனமாதம் நடந்த திரு. கக்கன் நூற்றாண்டுவிழாவையொட்டி, அவரது வாழ்க்கையில் சில சம்பவங்களைக்கொண்ட ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டது. அதில் நான் கக்கனாக நடித்தேன். ஏனென்றால் திரு. கக்கனைப்போல் வாழமுடியாது…….நடிக்கத்தான் முடியும்! இதைக்கேள்விப்பட்ட திரு.லெனின், ‘மணிசார்! அதை நான் எடிட் பண்ணித்தரேன்!’ என்று அவராகவே சொன்னார். பணம் வாங்கமாட்டார் என்பதனால், நான் மறுத்துவிட்டேன். சில சமயங்களில் நான் நினைத்ததுண்டு: ‘அவருக்கிருக்கும் பரந்த ஆளுமைக்கு, இந்தக்காலத்தில் இப்படி வாழத்தெரியாத மனிதராக இருக்கிறாரே! ஒரு மனிதனுக்கு இத்தனை நேர்மை தேவை தானா?’ என்று. இந்த வியாபார உலகில் -- பணப்புழக்கம் நிறைந்த சினிம உலகில் -- எப்படி தன்னை விற்பனை செய்துகொள்வதென்பது அவருக்குத்தெரியாத கலை. But he leads his contented life very happily on his own terms! அவருக்கு இது தான் பிடித்திருக்கிறது! எனக்கும் அவரிடம் இது தான் பிடித்திருக்கிறது!

இன்னொரு உதாரணம்: இந்தியாவிலேயே இரண்டாவது முறையாக ஒரு தமிழனுக்கு சிறந்த இயக்குநருக்கான தங்கத்தாமரை விருது 2003-ல் என் நண்பர் லெனினுக்கு கிடைத்தது, ஊருக்கு நூறுபேர் படத்துக்காக. அந்தச்செய்தி அன்று நம் தமிழ்ச்சானல்களுக்கு முக்கியமாகப்படவேயில்லை. ’மானாட மயிலாடுவதில்’ தான் அவர்களுக்கு அக்கறை. மலையாள ஏஷியாநெட் மூலம் தான் நான் செய்தியறிந்தேன். (படத்தில் நானும் தலையைக்காட்டியிருக்கிறேன்!) அதற்கான ரொக்கப்பரிசு ரூ. 25,000-த்தை, படவிழாவுக்காக நாங்கள் கோவை போயிருந்தபோது, தொண்டாமுத்தூர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு தானமாகக்கொடுத்துவிட்டார். சரி, போனால் போகட்டும் என்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்த விஷயம் அவர் தனக்கு ஜனாதிபதி கழுத்தில் போட்ட தங்கப்பதக்கத்தையும் கழட்டி அந்த மாணவன் கழுத்தில் போட்டது தான்! அந்தப்பதக்கம் இப்போது சேட் கடைக்குப்போகாமல், அந்தப்பையன் வீட்டில் தான் இருக்குமென்று நம்புவோம். விழா முடிந்து சென்னை வந்ததும், கைச்செலவுக்காக, தன் நெருங்கிய நண்பரிடம் கைமாற்றாக ரூ. 10,000 வாங்கியதும் எனக்குத்தெரியும். இவருக்கென்ன தமிழ்த்திரையுலகம் கோடிக்கோடியாக கொட்டிக் கொடுத்திருக்கிறதா? இல்லை…. அப்படி கிடைத்தவர் தான் கொடுக்கிறாரா? இதற்கும் ஒரு கனிந்த நிறைவான மனது வேண்டும்! அது இவரிடமிருக்கிறது!

பார்வைக்கு பசுவாக இருக்கும் இவர் சினிமாத்துறைக்கு ஏதேனும் பிரச்னைகள் வந்தால் புலியாக போர்க்கொடி உயர்த்துவார். He is always anti-Establishment and politically incorrect. அரசுக்கெதிராக இவர் விமர்சனங்கள் நியாயமானவை…….கூரானவை. மற்றவர்களைப்போல தன் சொந்த நலனுக்காக யாரிடமும் எந்த சமரசமும் செய்துகொள்ளத் தெரியாதவர். அதனால் தான் அவரால் இத்தனை எளிமையாக வாழமுடிகிறது! தன்னை ‘சினிமாவால் கவரப்பட்டு, உருப்பட்டு, அதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஒரு தொழிலாளி’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மாமனிதர் கனவுத்தொழிற்சாலையின் பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கி, சினிமா….நிஜமா? என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். ’நக்கீரனில்’ வெளியான 32 கட்டுரைகளின் தொகுப்பு. சினிமாத்துறையிலிருக்கும், அதில் ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகமது. டெலிபோனில் பேசும்போது இவருக்கு ‘ஹலோ’ என்ற வார்த்தை வராது. பதிலாக ‘வாழ்க வளமுடன்” என்ற கம்பீரமான குரலில் தான் பேச்சை தொடங்குவார். அதனால் தான் இவரும் வளமுடனே வாழ்கிறார்!

இவர் தன்னைப்பற்றி என்ன சொல்லிக்கொள்கிறார்? “என் மொழி சினிமா. இது மொழியை மீறிய கலை. என் தாத்தா அகர்சிங் ராஜஸ்தானைச்சேர்ந்த ரஜபுத்திரர். அவர் மனைவி ஆந்திராவைச்சேர்ந்த ஆதியம்மா. அவர் மகன் பீம்சிங். தாத்தாவின் வழியிலே, மகனுக்கும் ‘சிங்’ ஒட்டிக்கொண்டது. என் தாய், அதாவது பீம்சிங்கின் மனைவி சோனாபாய் காவிரி வளம் கொழித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சோனாபாயின் தந்தையோ ராகவாச்சாரி என்கிற தமிழ் ஐயங்கார். தாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். எனது மனைவி கேரளத்தைச்சார்ந்தவர். மொழிகளும், இனங்களும், எல்லைகளும், நிறங்களும், கலாச்சாரங்களும் சங்கமித்ததின் ‘கரு’ நான். இப்போதைக்கு நான் தமிழன்……ஒரு இந்தியன்…….எல்லாவற்றுக்கும் மேலாக நான் மானுடன்” இந்திய ஒருமைப்பாட்டுக்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்கமுடியுமா? இத்தனை விசாலமான விசிட்டிங் கார்டு கொண்டவர் கையில், விசிட்டிங் கார்டே வைத்துக்கொள்ளாதவர்! எங்கள் தொந்தரவு பொறுக்கமுடியாமல் தான் அவரிடம் இப்போது செல்போன் இருக்கிறது!

சமீபகாலம் வரை, தேசிய விருதுகள் பெற்ற எல்லா மலையாளபடங்களுக்கும், தமிழ்ப்படங்களுக்கும் எடிட்டிங் திரு லெனினாகத்தானிருக்கும். படத்தில் வரும் கிரெடிட் கார்டுகளைப்பார்க்கவேண்டிய அவசியமேயிருந்ததில்லை. எத்தனை படங்களில் எடிட்டிங்: B . லெனின் - V.T. விஜயன் என்று இந்த கத்தரிக்கோல் இரட்டையர்கள் பெயரைப்பார்த்திருப்போம்! தன் கத்தரிக்கோலால் பல சிறந்த படங்களை மெருகிட்டு நமக்களித்தவர். அகில இந்திய அளவில், ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில், ஐந்துமுறை இந்திய ஜனாதிபதிகளிடம் எடிட்டிங் கலைக்காக விருது வாங்கியவர். இருந்தும் எப்படி இத்தனை எளிமையாக இருக்கிறாரென்ற ரகசியத்தை இவர் யாருக்கும் கற்றுக்கொடுக்கவில்லை……. ஏனென்றால் எளிமை கற்றுக்கொடுத்து வருவதில்லை!

தன் தந்தையார் பீம்சிங் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், மரியாதையுடன், ‘டைரக்டர்’ என்றே குறிப்பிடுவார். அந்த ‘டைரக்டர்’ தனக்குத்தெரிந்ததையெல்லாம் தனயனுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு, இந்த இளைஞரை சில வருடங்கள் பம்பாய்க்கு அனுப்பினார். அங்கே ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற மேதைகளுடன் பணிபுரியும் வாய்ப்புக்கிட்டியது. இவரது பம்பாய் அனுபவங்கள் மிக சுவாரசியமானவை. சாம்பிளுக்கு ஒன்று: பழம்பெரும் ஹிந்தி நடிகர் ப்ரேம்நாத் டப்பிங் பேசவந்தால், படத்தில் என்ன உடையுடன் பேசியிருந்தாரோ அதே உடையை டப்பிங் போதும் போட்டுக்கொண்டு தான் பேசுவேன் என்று அடம் பிடிப்பாராம்! படத்தில் ஹீரோவால் தரையில் தள்ளப்பட்டு பேசும் வசனங்களை, டப்பிங் ஸ்டுடியோவில் தரையில் படுத்துக்கொண்டேதான் பேசுவாராம்.

பாரதி படத்துக்குப்பிறகு வந்த எல்லா ’புத்தா பிக்சர்ஸ்’ தயாரிப்புகளிலும் நான் ஆஸ்தான நடிகனாகிவிட்டேன். லெனின் இயக்கிய மொட்டுக்கா, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறுபேர், றெக்கை போன்ற படங்களிலும் இனி இவர் இயக்கப்போகும் எல்லாப்படங்களிலும் தவறாமல் நான் வருவேன்,…….. நான் இருக்கும் வரை! படத்தில் எனக்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்குவார். படப்பிடிப்பின்போது, நடிகர்களிடமிருந்து தனக்குத்தேவையானதை பிடுங்கி எடுத்துக்கொள்ளும் பக்குவம் இவருக்குண்டு. இரண்டே மானிட்டர்……ஒரே டேக். அதனால் தான் ஒரு இயக்குநராக, 2002-ல் வெறும் பதிமூன்று லட்சம் ரூபாயில், ஊருக்கு நூறுபேர் என்ற தரம் வாய்ந்த படத்தை எடுக்கத் தெரிந்திருந்தது. இவரால் தான் நான் ‘One Take Actor’ என்ற பட்டத்தை உதவி இயக்குநர்களிடமிருந்து பெற்றேன். இந்த நல்ல மனிதர் சொன்னார்: ‘மணிசார் ஒரு ஃப்ரேமில் வந்தாலும், அந்தப்படத்துக்கு அவார்டு நிச்சயம்!’ என்று. நினைத்துப்பார்த்தால், அதில் கொஞ்சம் உண்மையிருப்பதுபோல் தோன்றுகிறது. என் முதல் படம் ஆங்கிலத்தில் BBC Channel-4, London தயாரித்து அருந்ததி ராய் கதைவசனமெழுதிய ‘The Electric Moon’. இதற்கு 1992-ல் இந்தியாவில் தயாரித்த சிறந்த ஆங்கிலப்படத்துக்கான விருது கிடைத்தது. என் முதல் தமிழ்ப்படமான பாரதி, லெனின் இயக்கிய ஊருக்கு நூறுபேர், மொட்டுக்கா, ஜெயபாரதியின் நண்பா….நண்பா, அம்ஷன்குமாரின் ஒருத்தி, ஷங்கரின் அன்னியன் சேரனின் ஆட்டோகிராப் – இந்தப்படத்தில்இதில் ஒரே ஒரு ப்ரேமில் தான் தலைகாட்டியிருக்கிறேன் – இப்படி நான் தலையைக்காட்டிய பல படங்கள் தேசிய விருது பெற்றிருக்கின்றன. ஆனாலும் மற்ற நல்ல டைரக்டர்கள் என்னை கண்டுகொள்வதேயில்லை!

நமது பிறந்தநாளை நாம் வீட்டில் கொண்டாடுவோம். இவர் பிறந்தநாளை நாடே கொண்டாடுகிறது! ஆம், எல்லோரும் கொடியேற்றிக் கொண்டாடுகிறோம். ஆகஸ்ட் 15-ம் தேதி பிறந்தவர். நண்பர்களுக்கு அவர் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொள்ளும் சிரமத்தைக்கூட அவர் கொடுக்கவில்லை.

நடைக்கு அஞ்சாத மனிதர். அதில் எனக்கு நேர் எதிர். ஆழ்வார்பேட்டையிலிருந்து விருகம்பாக்கம் வரை நடந்தே வந்து, ‘மணிசார், காலையிலே உங்களோடு சேர்ந்து ஒரு பில்டர் காபி சாப்பிட வந்துட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே நுழைவார். அவர் வீட்டிலிருந்து குன்றத்தூருக்கு நடந்தே போய்விடுவார். இவருடன் சுற்றுப்பயணம் போவது ஒரு சுகமான அனுபவம். ஆனால் ஒன்று…….. என்னையும் நடக்கச்சொல்லி பிராணனை வாங்குவார்! றெக்கை படப்பிடிப்பின்போது, முப்பது நாட்கள் மதியம் ஒரே நேரம் அரைமூடித்தேங்காயும் ஐந்து வாழைப்பழங்களும் மட்டும் சாப்பிட்டுவிட்டு, நாளெல்லாம் புத்துணர்ச்சியோடிருப்பார். இதைத்தான் மரபின் மைந்தன் ‘கோவில் யானை’ என்று பொருத்தமாக வர்ணித்திருந்தார்! ஒருவேளைப்பசி கூடப்பொறுக்கமுடியாத இடும்பை கூர் வயிற்றைக்கொண்டிருக்கும் நான், புரொடக்‌ஷன் முத்தையாவிடம், இவர் வேறு ஏதாவது சாப்பிடுகிறாரா என்று ரகசியமாக விசாரிப்பேன்.

சூட்டிகையான இரு பெண்கள். திருப்புணித்துறையில் நடந்த இருவர் திருமணங்களுக்கும், மணப்பத்திரிகைகளில் அச்சிடுவது போல், ‘நான்கு நாட்கள் முன்னதாகவே போயிருந்து, தம்பதிகளை ஆசீர்வதித்து, அவரையும் கெளரவித்துவிட்டு’ வந்திருக்கிறேன்! இப்போது இவருக்கு மிக நெருக்கமான தோழி இவர் பேத்தி தான்!

உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட என் புத்தகத்தில், என்னைப்பற்றி இப்படி எழுதியிருந்தார்: ‘ஒருவகையில் பாரதி மணி எனக்கு ’பைய்யா’ (Bhaiyaa) . ஹிந்தியில் பைய்யா என்றால் சகோதரர் என்று பொருள். ஆனால் பையன்களைப்போல் தான் சிரிப்பார், அழுவார், சந்தோஷப்படுவார். அவர் கண்களில் எப்போதும் மகிழ்ச்சியிருக்கும். முறையாக சங்கீதம் பயிலாத இந்த மனிதருக்கு இத்தனை சங்கீத ஞானம் எங்கிருந்து வந்ததோ? தில்லியில் எவ்வளவு பெரிய உத்யோகங்களில் எல்லாம் இருந்தவர், இங்கே இந்த தமிழ் சினிமாவிலா வந்து மாட்டிக்கொள்வார்? யார் கூப்பிட்டாலும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளைப்போல, ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம், ஷார்ட் பிலிம், டாகுமெண்டரி, டி.வி. சீரியல்கள், விளம்பரப்படம், F.M. ரேடியோ என்று தன் தலையைத் தானே நுழைத்துக்கொள்வார். கூப்பிடுபவர்களும், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல இவருக்கு கடுக்காய் கொடுத்து விடுவார்கள். கடுக்காயைச் சாப்பிட்டாலும், கசப்பு என்பது இவரது முகத்தில் தெரியாத அளவுக்கு குழந்தையைப்போல் ஒரு கள்ளம் கபடமற்ற சிரிப்பையே உதிர்ப்பார்.’………… இவர் வீட்டுக்குப்போனால், அப்போது காபிக்கொட்டை அரைத்துபோட்ட வாய் மணக்கும் டிகிரி பில்டர் காப்பி கிடைக்கும்! ……… ‘ரெளத்ரம் பழகு’ என்று சொன்ன பாரதியின் கோபத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் பாரதி மணி கோபத்திலும் ஒரு குழந்தையைப்போல் தான் இருப்பார்……..Bharati Mani is a Warrior, who will fight till the end …. For me he is …..A Friend, Philosopher and Guide. Sir, I salute you!......இப்படி தன் கட்டுரையை முடித்திருந்தார் என் நண்பர்!

இவையெல்லாம் பொய் கலந்த புகழாரங்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவருக்கும் தெரியும். யோசித்துப்பார்க்கும்போது, இந்தப்புகழெல்லாம் ஓரளவுக்கு அவருக்குத்தான் பொருந்தும். நிரந்தர வருவாய் வரும் எடிட்டிங் வேலையை உதறித்தள்ளிவிட்டு, தமிழகத்தில் கைப்பணத்தைச்செலவழித்து ஊரூராகச்சென்று, குறும்படங்களைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இளைஞர்கள் தயாரித்துக் கொண்டுவரும் குறும்படங்களுக்கு இலவசமாக எடிட்டிங் செய்து கொடுக்கிறார். யாராவது தனக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்தால், அதை வேண்டுமென்றே தவிர்க்கிறார். பாராட்டுகளுக்கு விழைந்து நிற்கும் எனக்கு, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியம் தான் மேலிடுகிறது!

இந்த நல்ல மானுடனை நண்பனாகப்பெற்ற நான் சொல்கிறேன்: …..Mr. Lenin is my Best Friend, Philosopher and Guide. ………..Sir, I salute you!

******* **** **** **** *******