லைலா புயல் மையம்கொண்டிருந்த காலையில் மின்சாரம் தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சுறுத்தலுடன் இந்தக் கட்டுரையை மனதுக்குள் மழை நிரம்ப எழுதத் தலைப்படுகிறேன். சேலத்தில் கடைசிப்பொழுதில் தொக்கி நின்றபோது வாமுகோமுவின் காமக்கதை குறித்தும் தமிழ்மகனின் வெட்டுப்புலி குறித்தும் பேசும் முறை வந்தது. இவ்விசயங்களை பேசுபவர்களின் பட்டியலை நான் நடந்ததுமாதிரியாய்ப் பதிவுசெய்யவில்லை. அவர்கள் பேசியது அனைத்தையும் எழுதவுமில்லை. என்ன காதில் விழுந்ததோ அதை மட்டுமே எழுதியுள்ளேன். அதற்குக் காரணம் சிலர் எழுதிவந்து சுதியில்லாமல் கடகடவென்று எவ்வித உணர்ச்சி பெருக்குமற்று கடமையைச் வெகு சிறப்பாக செய்ததுதான் என்று சொல்லவேண்டும். ஒரு படைப்பைப் படித்து அது மோசமானது சிறப்பானதோ அதை உண்மையான உள் உணர்ச்சிகளிலிருந்து பேசியிருக்க வேண்டும். கவிஞர் நேசன் அவ்வாறு பேசினாரென்றால் அது மிகையாகாது.
மூளைப்பதிவுகள் அவ்வளவு நேர்த்தியானதாக அமையவில்லை என நினைக்கிறேன். பேசியவர்களின் வரிசைமுறையை கலைத்துப்போட்டிருக்கிறேன்.
வாமுகோமுவின் காமமும் காதலும் ஊற்றெடுத்த நீண்ட கதையைக் கடைசியாய் எழுதவேண்டுமென்று தோன்றியது. கோமு நல்ல சிறுகதைகளும் நல்லாயில்லாத சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ....... மையில் வந்த சிறுகதையொன்றைத்தான் நீண்ட கதையாகத் திரித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது சிறுகதையாக இருந்தபோது நன்றாக இருந்ததாகவும் நீண்ட கதையாக மாற்றப்பட்டபோது வெறும் காமச்சரக்காய் மட்டுமே மாறிவிட்டதாயும் ஒரு நண்பன் சொல்லக் கேள்விப்பட்டேன். அந்தப் பதிப்பகத்தாரும் எழுத்தாளரும் ஒன்று கூடி அமர்ந்து சின்னக்கதையைப் பேசிப் பேசி பெரிதாக ஊதினார்களென்றும் கூறுகிறார்கள். அமோக விற்பனையை மட்டுமே ஒரு சில பதிப்பாளர்கள் மனதில் ஆழப்பதித்துக்கொண்டு ஆபாசங்களை நூல்களின் வாயிலாய் அள்ளி இறைக்கின்றார்கள். ஆபாசம் மட்டுமே இலக்கியமாகிவிடாதென்று தெரிந்திருந்தும் இலக்கியமென்ற பெயரில் பொறுப்பற்ற நெறியற்ற செயல்களை செய்வதில் அவர்களுக்கு அளப்பரிய ஆனந்தம் கிடைக்கின்றதுபோலும். சந்தோச வானில் நீந்திக் களிக்கட்டும்.
தக்கையின் ஆசிரியர் சாகிப் கிரான் வாமுகோமுவின் நாவலைப் பற்றி சத்தமற்ற குரலில் படித்தார். அவர் பேசியதைவிட கவிஞர் தமிழ்நதியும் எழுத்தாளர் சந்திராவும் வாமுவின் பெண்களை விகாரப்படுத்தும் அந்த நாவலை நாவலே இல்லையெனவும் பெண்கள் மட்டுமே காமத்திற்காய் அலைவதாய்ச் சித்தரித்து பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டாரெனவும் அதிக சூட்டில் கொத்திதெழுந்த நீராவியின் மூடியைப் போல ஆகி அமைதியடைந்தார்கள் குளிர்ந்த காற்று பட்டதும். வாமு முன்வரிசையில் பாக்கைப் போட்டபடி நிதானமாய் உள்ளுக்குள் புகைந்தவராய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியெல்லாம் புகைந்தாரோ இல்லை புகைவில்லையோ தெரியாது. சின்ன கலக்கமிருந்திருக்கலாமில்லையா
தமிழ்நதி மேடையின் முன் நின்று நாவலின் ஊடாய் வரும் கதாபாத்திரங்களை விவரித்து அப்படி எப்படி ஒரு பெண்ணிருப்பாளென்று கேட்டார். இதெல்லாம் அதிகப்படியானதென்றார். சந்திராவும் இது வெற்று போர்னோ இலக்கியமென்று அடித்துக் கத்திக் கூறினார். இப்படியே வாமுகோமு சொற்களில் பந்தாடப்பட்டார். இந்தப் பேச்சுக்கு என்ன மறுமொழி பேசுவாரென்று ஆவல் எழுந்தது. இந்தச் சத்தங்கள் ஒருவழியாய் ஒழிந்தபின் வாமு மேடைக்கு வந்து நாவலை இப்படி எழுதிக்கொண்டுவருவோமென்று அவரும் பதிப்பாளரும் முடிவுசெய்து திட்டமிட்டுக் கொண்டுவந்ததாக உண்மையைச் சொன்னார். இந்த உண்மையைச் சொல்வதில் வாமு எந்தத் தடையையும் கொண்டிருக்கவில்லையென்பது புரிந்தது.
வாமுகோமு 15 நாட்களில் ஒரு நாவலை எழுதிவிடுவதாக ஒரு இலக்கிய நண்பர் சொல்லி பொறாமைப் பட்டுக்கொண்டார் அல்லது அவரால் எழுத முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னாராவென்று தெரியவில்லை. ஏன் இவ்வளவு அடிதடியாய் வாமு எழுதவேண்டுமென்று தெரியவில்லை. அதற்கான சிறப்புக்காரணங்கள் எதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. வாமுவிடமிருந்து இன்னும் நல்ல நாவல்களையும் சிறுகதைகளையும் நிறுத்தி நிதானமாக எதிர்பார்க்கலாம்.
படைப்பாளியை இப்படி எழுது அப்படி எழுது என்று யாரும் சொல்வதற்கில்லை. எழுதுவது எதுவாகினும் அது கலையாய் மாறவேண்டுமென்பதுதான் முக்கியமேதவிர எழுத்தாளரை கட்டளையிடும் வேளை நம்முடையதல்ல என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. எழுதி வெளியிடுவது இலக்கியமாகவில்லையெனில் அதை விமர்சித்தோ விமர்சிக்காமலோ குப்பையில் எறிந்துவிடலாம்தான். அந்த உரிமை வாசகனுக்கு உள்ளதென்பதை ஆணித்தரமாய்ச் சொல்வேன். அதைப்பற்றி எழுத்தாளன் என்ன செய்யவியலும். இலக்கியம் வரவில்லையெனில் வேறு எதாவது பணி செய்து காலத்தை கடந்து மரணத்தை அடையலாம்.
வாமு நாவலின் பெயர் கனகாம்பரமும் இன்ன பிற காதல் கதைகளும் என்று நினைக்கிறேன். சரியாய்ச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் பற்றி சிவராமன் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதை தக்கைபாபு வாசிக்க கூட்டம் அத்துடன் முடிந்ததென்று நினைக்கிறேன். நாட்கள் ஆகிவிட்டதால் நினைவிலிந்ததை இதுவரை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
சேலத்திலிருந்து கிளம்பும் நேரம் வாய்க்கப்பெற்று தக்கைபாபுவை நச்சரித்து இரண்டு பயண இருக்கைகளை கே.பி.என் பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டேன். சிவா வாடகை அறையில் அங்கங்கு இலக்கியவாதிகள் கூடி கூடி உரையாற்றிக்கொண்டிருந்தனர். நானும் பால்நிலவனும் நேசனும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானோம். பேருந்திற்குள் ஏறுவதற்கு முன் நன்றாக சாப்பிட்டோம் சாலையோர வண்டிக்கடையில். வண்டிக்கடைக்காரன் இலக்கியம் தெரியாதவன். இட்லிகளை தோசைகளைச் சுட்டு சுட்டு ஒழுங்காய் குடும்பதை ஓட்டிக்கொண்டிருக்கிறான்போலும். இலக்கியம் இந்த ஊரில் சின்ன சின்ன உதவிகள் செய்யுமே ஒழிய வாழ்வின் ஆதாரங்களை ஒரு போதும் தந்துவிடப் போவதில்லை என்பதை அறிந்தவனாகவும் இருக்கிறேன். ஆனால் அவற்றின் போதைக்குள் குதித்துவிட்ட நான் மீள்வதற்கெல்லாம் வழியொன்றமில்லையென்றே தோன்றிவிட்டது. வாழ்வோ சாவோ எழுத்தாளனாய் மரித்துவிடுவோமென்றாகிவிட்டது.
Showing posts with label அய்யப்ப மாதவன். Show all posts
Showing posts with label அய்யப்ப மாதவன். Show all posts
Wednesday, May 19, 2010
Monday, May 17, 2010
சொற்கப்பல் – தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனக் கூட்டதிற்கு
ஏற்காடு மலை ஒருவழியாய் எங்களை மேலிருந்து உருட்டிவிட்டபோது இரவு இமைகளைத் திறக்கத் தொடங்கியிருந்தது. மலைக்குன்றுகள் மேலிருந்து சேலம் நகரம் ஒளிப்புள்ளிகளாய்த் தெரிந்தன. மனிதர்களும் அந்தப் புள்ளிகளுக்குள்தான் இருக்கிறார்கள். புள்ளியைப் போன்ற மானுடர்கள் நிலத்தில் போடும் ஆட்டம்தான் பூமியின் உருண்டையைவிடப் பெரிதானது. சொல்லித் திருந்துவதில்லை மானுடம். அவனவன் அவனுக்கு பிடித்தமான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறான். நான் எழுத்தாளனாய் ஆடிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் சேலம் என்னை அழைத்திருக்கிறது. ஆம் சொற்கப்பல் அஜயன்பாலா தக்கைபாபு இலக்கிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் இன்னும் நிறையப்பேர் பங்கெடுத்துள்ளார்கள். அகநாழிகை வாசுதேவன் தடாகம் இணைய இதழின் ஆசிரியர் முகுந்த் ஆகியோர்தான். சேலத்திலும் அந்த மாதிரி ஒரு நிகழ்வொன்று நடக்கவிருந்தது. தமிழில் ஆறு நீண்ட கதைகள் பற்றிய விமர்சனக்கூட்டம் அது. அந்தக் கூட்டத்தின் விளைவுதான் இவ்வளவு எழுத்துகளும் என்னிலிருந்து கிளம்பியுள்ளதற்கு காரணமென்றால் மிகையாகாது.
சேலம் எங்களுக்கு இரவானது. புதுப்புது நண்பர்கள் யார் யாரோ வந்திருந்தார்கள். தக்கைபாபு எங்கள் தேவைக்கேற்ப வசதிகளை உருவாக்கிக்கொண்டிருந்தார் சத்தமில்லாமல். அவர் சத்தமின்மையை வேறு எவரிடத்திலும் நான் கண்டதில்லை என்று சொன்னால் தற்பெருமையாகாது. அவ்வளவு மெல்லிய மனமுள்ள மனிதர். அவர் இதயம் துளிர்க்கும் இலையைவிட மீன்களின் தவிட்டுக்குஞ்சுகளைவிட மிருதுவானதென்று சொன்னால் அதுவும் தற்பெருமையாகாது.
நான் பேசபேச அவர் வார்த்தைகளை உள்ளுக்குள்ளேயே பூட்டியிருந்தார். இப்படியே போக நான் ஒரு மூலையில் படுத்துறங்கள் அவர் ஒரு மூலையில் படுத்துறங்க சேலத்தில் விடியல் கண்களைக் கசக்கியபடி எழுந்து நடமாட ஆரம்பித்திருந்தது. நானும் தக்கைபாபுவும் நித்திரையின் படிக்கட்டுகளில் கால் வைத்தபோது எதிர்பார்த்திருந்த கவிஞர் கண்டராதித்தனும் கவிஞர் பொன். வாசுதேவனும் முகுந்தும் வந்திருங்கினார்கள். சிறிது உரையாடலுக்குப்பின் சேலத்தில் ஞாயிற்றின் ஒளி காட்டு வெள்ளமெனக் கிளம்பி நகரெங்கும் பிரவகித்துக்கொண்டிருந்தது.
மூன்றாவது மாடி நீண்ட அறை மாறி மாறி நீராபிஷேகம் செய்து ஆடைகள் உடுத்தி கூட்டம் கூட்டமாய்ப் படியிறங்கி காலை உணவு உண்டு வெறுத்து கூட்டம் நடக்கும் பள்ளிக்கூடவளாகத்திற்குள் நுழைந்தோம்.
நிறைய மரங்கள் தாழ்வரங்களாயிருந்தன. அதற்கு கீழ் இருக்கைகள் போட பார்த்த நண்பர்கள் இதுவரை பார்த்திராத நண்பர்கள் பழகிய நண்பர்களென கூடி அமர்ந்திருந்தனர். பழகியவருக்கு பழகியவர் அந்நியோன்யத்தைக் காட்டிக்கொண்டிருந்தனர். புதிது புதிதானவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகங்களில் மூழ்கிக்கொண்டிருந்தனர். எனக்கும் நெருங்கிய நண்பர்களும் நெருங்கமுடியாத நண்பர்களும் அறிமுகமேயில்லாத பெண்களும் வந்திருந்தனர்.
அஜயன் பாலா விழாவைத் தொடங்கினார். சுப்ரபாரதி மணியன் விழாவிற்கு தலைமையெனப் போட்டிருந்தனர். அவரும் முன்னிருக்கையில் சத்தமின்றி அமர்ந்திருந்தார். கையில் கிடைத்த புத்தகங்களைப் புரட்டியபடியே இருந்தார்.
கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலைப் பற்றி ச.முத்துவேல் பேசினார். அவர் விமர்சித்ததைவிட நாவலசிரியர் தன் நாவல் அனுபவம் பற்றிப் பேசியவிதம் மனிதமூளைகளை மயக்கும்விதமாக இருந்தது. அரசு போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றி அவர் அப்படி அழகாக நகைச்சுவையாக வலியாக எழுதியிருப்பாரென்று அவர் பேச்சின் சுவராஸ்யத்திலிருந்தே தெரிந்தது. அந்தக் கிராமத்துக்காரரின் மொழி கேட்பதற்கு தேனாகவும் ரசித்து மகிழ்வதாகவும் இருந்தது.
ஜாகிர்ராஜாவின் துருக்கித் தொப்பியைப் பற்றி இளங்கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அக்கறையோடு எழுதி வந்து நிறுத்தி நிதானமாக வாசித்தார். அவர் வாசித்தது பற்றி எல்லோரும் வியந்தார்கள். நல்ல கட்டுரை என்றார்கள். அகடமிக்காக இருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கும் அதை ஆமோதிக்க வேண்டும்போல்தானிருந்தது. ஜாகிர்ராஜா எழுதி வருபவர்களில் முக்கியமானவர் என்பதைச் சபையின் பேச்சுக்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் இன்னும் அவர் தோப்பி முகமது மீரான் அளவிற்கு எழுதவில்லையென்றார்கள். எப்படியோ தமிழில் உரைநடை எழுத்தாளர்கள் அருகிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜாகிர்ராஜா இன்னும் நல்ல நீண்ட கதைகளைப் படைப்பாராகுக.
கவிஞர் கரிகாலனின் நிலாவை வரைபவன் பற்றி கவிஞர் அசதா எழுதி வந்து படித்தார். சுருக்கமாக நிதானமாக தன் வசீகரிக்கும் குரலால் வாசித்தார். நிலாவை வரைபவன் கவிஞர் கரிகாலனின் கவிதைகளின் நீட்சியாக இருப்பதாகச் சொன்னார். உதாரணமாய் சில வாக்கியங்களை அந்த படைப்பிலிருந்து வாசித்துக்காட்டினார். கரிகாலனை நல்ல கவிஞராக இவ்வுலகம் அறிந்திருக்கிறது.
கவிஞர் நேசன் ஆழி வெளியீடான தாண்டவராயன் கதை பற்றி மெய்மறந்து பேசினார். அவர் அந்த கதைகளைப் படித்து அவர் எவ்வாறு அதில் மூழ்கிப்போனார் என்பது பற்றி அதில் வரும் காட்சிகளின் ஊடாய்ச் சொல்லி சொல்லி வியந்துகொண்டே போனார். மொத்தத்தில் இந்த நூற்றாண்டின் மகத்தான நாவலெனச் சொல்லி தன் உண்மையான நெகிழ்த்தும் உணர்வுகளைப் பதிவு செய்தார். அதற்கு தூரன் குணா கவிஞர் நேசன் சொல்வதுபோல அது மகத்தான நாவலில்லை. பிரமாதமான நாவலென்று சொல்லலாமென்றார். உம்பர்டோ ஈகோவின் த நேம் ஆஃப் த ரோஸ் என்ற நீண்ட கதையின் பாதிப்புகளுடன் சில பகுதிகள் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் அந்த நாவலையும் படிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதற்கு அதைப் படிக்கவேண்டும். அதைப் படிக்கும் காலத்தை இந்தக் காலம் கருணையுடன் வழங்கவேண்டும்.
சேலம் எங்களுக்கு இரவானது. புதுப்புது நண்பர்கள் யார் யாரோ வந்திருந்தார்கள். தக்கைபாபு எங்கள் தேவைக்கேற்ப வசதிகளை உருவாக்கிக்கொண்டிருந்தார் சத்தமில்லாமல். அவர் சத்தமின்மையை வேறு எவரிடத்திலும் நான் கண்டதில்லை என்று சொன்னால் தற்பெருமையாகாது. அவ்வளவு மெல்லிய மனமுள்ள மனிதர். அவர் இதயம் துளிர்க்கும் இலையைவிட மீன்களின் தவிட்டுக்குஞ்சுகளைவிட மிருதுவானதென்று சொன்னால் அதுவும் தற்பெருமையாகாது.
நான் பேசபேச அவர் வார்த்தைகளை உள்ளுக்குள்ளேயே பூட்டியிருந்தார். இப்படியே போக நான் ஒரு மூலையில் படுத்துறங்கள் அவர் ஒரு மூலையில் படுத்துறங்க சேலத்தில் விடியல் கண்களைக் கசக்கியபடி எழுந்து நடமாட ஆரம்பித்திருந்தது. நானும் தக்கைபாபுவும் நித்திரையின் படிக்கட்டுகளில் கால் வைத்தபோது எதிர்பார்த்திருந்த கவிஞர் கண்டராதித்தனும் கவிஞர் பொன். வாசுதேவனும் முகுந்தும் வந்திருங்கினார்கள். சிறிது உரையாடலுக்குப்பின் சேலத்தில் ஞாயிற்றின் ஒளி காட்டு வெள்ளமெனக் கிளம்பி நகரெங்கும் பிரவகித்துக்கொண்டிருந்தது.
மூன்றாவது மாடி நீண்ட அறை மாறி மாறி நீராபிஷேகம் செய்து ஆடைகள் உடுத்தி கூட்டம் கூட்டமாய்ப் படியிறங்கி காலை உணவு உண்டு வெறுத்து கூட்டம் நடக்கும் பள்ளிக்கூடவளாகத்திற்குள் நுழைந்தோம்.
நிறைய மரங்கள் தாழ்வரங்களாயிருந்தன. அதற்கு கீழ் இருக்கைகள் போட பார்த்த நண்பர்கள் இதுவரை பார்த்திராத நண்பர்கள் பழகிய நண்பர்களென கூடி அமர்ந்திருந்தனர். பழகியவருக்கு பழகியவர் அந்நியோன்யத்தைக் காட்டிக்கொண்டிருந்தனர். புதிது புதிதானவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகங்களில் மூழ்கிக்கொண்டிருந்தனர். எனக்கும் நெருங்கிய நண்பர்களும் நெருங்கமுடியாத நண்பர்களும் அறிமுகமேயில்லாத பெண்களும் வந்திருந்தனர்.
அஜயன் பாலா விழாவைத் தொடங்கினார். சுப்ரபாரதி மணியன் விழாவிற்கு தலைமையெனப் போட்டிருந்தனர். அவரும் முன்னிருக்கையில் சத்தமின்றி அமர்ந்திருந்தார். கையில் கிடைத்த புத்தகங்களைப் புரட்டியபடியே இருந்தார்.
கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலைப் பற்றி ச.முத்துவேல் பேசினார். அவர் விமர்சித்ததைவிட நாவலசிரியர் தன் நாவல் அனுபவம் பற்றிப் பேசியவிதம் மனிதமூளைகளை மயக்கும்விதமாக இருந்தது. அரசு போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றி அவர் அப்படி அழகாக நகைச்சுவையாக வலியாக எழுதியிருப்பாரென்று அவர் பேச்சின் சுவராஸ்யத்திலிருந்தே தெரிந்தது. அந்தக் கிராமத்துக்காரரின் மொழி கேட்பதற்கு தேனாகவும் ரசித்து மகிழ்வதாகவும் இருந்தது.
ஜாகிர்ராஜாவின் துருக்கித் தொப்பியைப் பற்றி இளங்கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அக்கறையோடு எழுதி வந்து நிறுத்தி நிதானமாக வாசித்தார். அவர் வாசித்தது பற்றி எல்லோரும் வியந்தார்கள். நல்ல கட்டுரை என்றார்கள். அகடமிக்காக இருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கும் அதை ஆமோதிக்க வேண்டும்போல்தானிருந்தது. ஜாகிர்ராஜா எழுதி வருபவர்களில் முக்கியமானவர் என்பதைச் சபையின் பேச்சுக்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் இன்னும் அவர் தோப்பி முகமது மீரான் அளவிற்கு எழுதவில்லையென்றார்கள். எப்படியோ தமிழில் உரைநடை எழுத்தாளர்கள் அருகிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜாகிர்ராஜா இன்னும் நல்ல நீண்ட கதைகளைப் படைப்பாராகுக.
கவிஞர் கரிகாலனின் நிலாவை வரைபவன் பற்றி கவிஞர் அசதா எழுதி வந்து படித்தார். சுருக்கமாக நிதானமாக தன் வசீகரிக்கும் குரலால் வாசித்தார். நிலாவை வரைபவன் கவிஞர் கரிகாலனின் கவிதைகளின் நீட்சியாக இருப்பதாகச் சொன்னார். உதாரணமாய் சில வாக்கியங்களை அந்த படைப்பிலிருந்து வாசித்துக்காட்டினார். கரிகாலனை நல்ல கவிஞராக இவ்வுலகம் அறிந்திருக்கிறது.
கவிஞர் நேசன் ஆழி வெளியீடான தாண்டவராயன் கதை பற்றி மெய்மறந்து பேசினார். அவர் அந்த கதைகளைப் படித்து அவர் எவ்வாறு அதில் மூழ்கிப்போனார் என்பது பற்றி அதில் வரும் காட்சிகளின் ஊடாய்ச் சொல்லி சொல்லி வியந்துகொண்டே போனார். மொத்தத்தில் இந்த நூற்றாண்டின் மகத்தான நாவலெனச் சொல்லி தன் உண்மையான நெகிழ்த்தும் உணர்வுகளைப் பதிவு செய்தார். அதற்கு தூரன் குணா கவிஞர் நேசன் சொல்வதுபோல அது மகத்தான நாவலில்லை. பிரமாதமான நாவலென்று சொல்லலாமென்றார். உம்பர்டோ ஈகோவின் த நேம் ஆஃப் த ரோஸ் என்ற நீண்ட கதையின் பாதிப்புகளுடன் சில பகுதிகள் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் அந்த நாவலையும் படிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதற்கு அதைப் படிக்கவேண்டும். அதைப் படிக்கும் காலத்தை இந்தக் காலம் கருணையுடன் வழங்கவேண்டும்.
அய்யப்ப மாதவன்.- சொற்கப்பல்-தக்கை இணைந்து நடத்திய நீண்ட கதைகள் விமர்சனம் ஒரு பதிவு 4
படகுகள் மிதக்கும் நீர் பரப்பின் முன் பாபு எங்களை நிறுத்திவைத்தார். இதுதான் படகுச் சவாரி செய்யுமிடம். சிறு இயந்திரப் படகுகளுமுண்டு. கால்களால் மிதித்தோட்டும் படகுகளுமுண்டெனச் சொன்னார். என் விழிகளில் நீரில் மொய்க்கும் படகுகள் பற்பல திசைகளில் ஊரியவண்ணமிருந்தன. கணவன் மனைவி குழந்தை மற்றும் மாமியாவென ஒரே படகில் உட்கார்ந்திருந்தனர். மனைவி ஒரு புறம் மாமியா எதிர்ப்புறம் போன்ற காட்சிகளைக் கண்டதும் மனதுக்குள் சிரிப்பு ஊற்றெடுத்தது. திரைப்படத்தில் மாமியாவோ மருமகளோ யாரையாவது ஒருத்தரை நீருக்குள் தள்ளி கொன்றுவிட்டால் எப்படியிருக்குமென நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். நண்பனின் உதடுகளில் யோசித்த சிரிப்பு கசிந்து என்முன் மறைந்தது.
பாபுவின் பையன் எதோ விளையாட்டுப்பொருளைக் காட்டி அதைவாங்கித் தருமாறு அடம்பிடித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவரும் அதற்குப் பதில் இனிக்கும் பனிக்கட்டிகளை வாங்கிக்கொடுத்து கெட்டிக்கார அப்பாவாகயிருந்தார். அப்புறம் எங்களையும் எதாவது சாப்பிடுவோமா என்று சொல்லி பஜ்ஜிக்கடைக்கு கூட்டிப்போனார். மிளகாய் வெங்காயம் உருளையென பஜ்ஜிகளை கொஞ்ச நேரம் புகுந்து விளையாடிவிட்டு ஏற்காட்டைச் சுற்றிப் பார்க்க உருளியைக் கிளப்பினோம்.
பச்சைபச்சையாய் மரங்கள் நீர்நிலையினைச் சுற்றியிருந்தன. அந்த மரங்கள் எப்போதும் உலகை அழகுபடுத்துகின்றன. அதற்குத்தான் எவ்வளவு ஈடுபாடு இந்த உலகை அவ்வளவு அழகாய் வைத்துக்கொள்வதில். நாமும்தான் இருக்கிறமே தெண்டமாய் தேமே என்று இவ்வுலகில் என்று மனதுக்குள் மலையில் ஏறிக்கொண்டிருக்கும் உருளியின் சக்கரங்கள் போல நல்ல நல்ல விசயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
சமதளத்தின் மீதான மலையின் மேலோட்டில் சிறு சிறு சாலைகளின் குறுகிய வளைவுகளில் போய்ச் சேருமிடம் மரணப்பள்ளத்தாக்கு என்று சொன்னார் பாபு. அவ்விடத்திற்குப் பெயர் லேடீஸ் சீட்டென்று சொன்னார். ஏன் அப்படி வைத்தார்கள் முன்பிருந்த ஆங்கிலேயர்கள் என யோசிக்க முடியவில்லை. எப்படியோ வைத்துவிட்டார்கள் என சிந்தித்த போது பால்நிலவன் லேடீஸ் சீட் போல மலையின் எதாவது ஒரு பகுதி அந்த வடிவிலிருக்குமோ என்று சந்தேகித்து கடகடவென்ற சிரிப்புடன் சொன்னார். நானும் கற்பனை செய்து அவருடன் கலந்து சிரித்தேன்.
மரணப்பள்ளத்தாக்கைப் பார்ப்பதற்கென்று காசு வசூலிக்கிறார்கள். பெரிதாக காட்டும் பெரிய பைனாகுழல்களை வைத்திருக்கின்றன சிறிய உயரக் கூண்டில். இரண்டு பெண்கள் நின்று கொண்டு அவற்றைச் சுழற்றி சுழற்றி ஒரு பெரிய நிறுவனத்தின் பொட்டல் ஒன்றைக் காட்டி அங்கு கனிமம் எடுப்பதாகக் கூறினார்கள். வளைவு வளைவு கோடுகளாய்த் தெரிந்தது அவ்விடம். மொத்தத்தில் விமானத்திலிருந்து பார்ப்பதுபோல் பூமி தெரிந்ததென்று சொல்லவேண்டும்.
நிறையப்பேர் குதித்து தற்கொலை செய்திருந்ததாக பாபு கூறினார். தற்கொலை செய்துகொள்ளாமலிருக்க அவ்விடத்தைச் சுற்றி இரும்புக்கூரையால் வேய்ந்திருந்தார்கள். என்னதான் இறுக்கமாய் வேய்ந்திருந்தாலும் இவ்வாழ்வை வெறுத்து சாக முடிவெடுத்தவன் பாதுகாப்பு வளையத்தை உடைத்தாவது குதித்து செத்துப்போவான். சாகாமலிருக்கத்தான் முடிவெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். நாம் ஏன் வந்திருக்கிறோமென்று தெரியவில்லை. ஆனால் வந்திருக்கிறோம். வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே என்று வாழ்வோடு இயந்து மரணத்தை அது வரும்போது ஏற்றுக்கொள்ளலாம். இது மாதிரியான மலைக்குன்றுகளுக்கு வரும்போது இயற்கையின் மீதான தீராத காதல் மேலும் மேலும் அதிகரித்துவிடுகிறது. இவற்றின் எல்லையில்லா அழகில்தான் வாழ்வின் அர்த்தம் புதைந்திருக்கிறது. இதைப் பார்த்தே பார்த்த நினைவுகளிலேயே வாழ்வது அளப்பரியது.
இந்தப் பள்ளத்தாக்குகளில் குரங்கள் சூழ்ந்திருந்தன. அவை கர்ணம் தப்பினால் மரணம் போன்ற இடங்களில் சர்வசாதாரணமாய் அமர்ந்துகொண்டு வருவோரிடம் உணவுகளை சாகவாசமாய் வாங்கிச் சாப்பிட்டபடியிருந்தது. அதற்கு குடும்பப் பிரச்னை காதல் பிரச்னை எதுவும் இருக்காது போலிருக்கும். அதற்கு மரணப்பள்ளத்தாக்குதான் வாழுமிடமாகயிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
அப்புறம் அங்கிருந்து சேதுவராயன் மலைக்குச் செல்ல முடிவெடுத்து அங்கு போய்விட்டோம். சேலத்தின் வெயில் அங்கு ஒரு துளியளவுகூட இல்லாமலிருந்தது. ஆனால் பனிக்கட்டிகள் காற்றில் கரைந்துவிட்டதுபோல் ஜில்லென்ற காற்று எங்கள் உடலுக்குள் புகுந்து எங்களை குதூகலப்படுத்தியது. அதீத உற்சாக மனநிலைக்குச் சென்றோம். வெண்சுருட்டை குளிருக்கு புகைப்பதுபோல் நானும் பாவும் மாறி மாறிப் புகைத்தோம். அப்புறம் ஒரு சுரங்கப்பாதைக்கு கூட்டிபோனார் பாபு. அதற்குள் கூனல் மனிதனைபோலத்தான் செல்ல முடிகிறது. ஒரு பூசாரி அந்த இருட்டுக் குகைக்குள் இரு சாமி சிலைகளின் முன் நின்றுகொண்டிருக்கிறார். சிலைகளின் பெயர் ஆண் பெருமாளென்றும் பெண் காவேரியென்றும் கூறினார் பூசாரி. பெருமாளுக்கும் காவிரிக்கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை. முன்பொரு காலத்தில் தலைக்காவிரி பாய்ந்து இந்தக் குகை பிறந்ததாகவும் இன்னமும் தலைக்காவிரி நீர் குகையினடியில் வருவதாகவும் என்ற தகவலையும் சொன்னார். அவர் சொன்னதுபோல் குகையின் தரைகளில் அப்படியொரு சீதளத்தை உணரமுடிந்தது. இன்னமும்கூட அதை நினைத்துவிட்டால் பாதங்கள் ஜில்லிடுகின்றன.
மனைவி ஞாயிற்றுக்கிழமையும் எழுத வேண்டுமா என்கிறாள். எழுத்தாளரென்றால் எழுதத்தான் வேண்டுமென்றேன்.ஞாயிறாயிருதாலென்ன திங்களாயிருந்தாலென்ன நாளை மற்றொருமொரு நாளே என்பது அவளுக்கு எங்கு தெரியப்போகிறது.சீக்கிரம் முடியுங்களென்றாள். மின்விசிறியின் சுழற்சியில் வெப்பக்காற்றை அனுபவிக்க முடியவில்லையென்கிறாள்.
பாபுவின் பையன் எதோ விளையாட்டுப்பொருளைக் காட்டி அதைவாங்கித் தருமாறு அடம்பிடித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவரும் அதற்குப் பதில் இனிக்கும் பனிக்கட்டிகளை வாங்கிக்கொடுத்து கெட்டிக்கார அப்பாவாகயிருந்தார். அப்புறம் எங்களையும் எதாவது சாப்பிடுவோமா என்று சொல்லி பஜ்ஜிக்கடைக்கு கூட்டிப்போனார். மிளகாய் வெங்காயம் உருளையென பஜ்ஜிகளை கொஞ்ச நேரம் புகுந்து விளையாடிவிட்டு ஏற்காட்டைச் சுற்றிப் பார்க்க உருளியைக் கிளப்பினோம்.
பச்சைபச்சையாய் மரங்கள் நீர்நிலையினைச் சுற்றியிருந்தன. அந்த மரங்கள் எப்போதும் உலகை அழகுபடுத்துகின்றன. அதற்குத்தான் எவ்வளவு ஈடுபாடு இந்த உலகை அவ்வளவு அழகாய் வைத்துக்கொள்வதில். நாமும்தான் இருக்கிறமே தெண்டமாய் தேமே என்று இவ்வுலகில் என்று மனதுக்குள் மலையில் ஏறிக்கொண்டிருக்கும் உருளியின் சக்கரங்கள் போல நல்ல நல்ல விசயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
சமதளத்தின் மீதான மலையின் மேலோட்டில் சிறு சிறு சாலைகளின் குறுகிய வளைவுகளில் போய்ச் சேருமிடம் மரணப்பள்ளத்தாக்கு என்று சொன்னார் பாபு. அவ்விடத்திற்குப் பெயர் லேடீஸ் சீட்டென்று சொன்னார். ஏன் அப்படி வைத்தார்கள் முன்பிருந்த ஆங்கிலேயர்கள் என யோசிக்க முடியவில்லை. எப்படியோ வைத்துவிட்டார்கள் என சிந்தித்த போது பால்நிலவன் லேடீஸ் சீட் போல மலையின் எதாவது ஒரு பகுதி அந்த வடிவிலிருக்குமோ என்று சந்தேகித்து கடகடவென்ற சிரிப்புடன் சொன்னார். நானும் கற்பனை செய்து அவருடன் கலந்து சிரித்தேன்.
மரணப்பள்ளத்தாக்கைப் பார்ப்பதற்கென்று காசு வசூலிக்கிறார்கள். பெரிதாக காட்டும் பெரிய பைனாகுழல்களை வைத்திருக்கின்றன சிறிய உயரக் கூண்டில். இரண்டு பெண்கள் நின்று கொண்டு அவற்றைச் சுழற்றி சுழற்றி ஒரு பெரிய நிறுவனத்தின் பொட்டல் ஒன்றைக் காட்டி அங்கு கனிமம் எடுப்பதாகக் கூறினார்கள். வளைவு வளைவு கோடுகளாய்த் தெரிந்தது அவ்விடம். மொத்தத்தில் விமானத்திலிருந்து பார்ப்பதுபோல் பூமி தெரிந்ததென்று சொல்லவேண்டும்.
நிறையப்பேர் குதித்து தற்கொலை செய்திருந்ததாக பாபு கூறினார். தற்கொலை செய்துகொள்ளாமலிருக்க அவ்விடத்தைச் சுற்றி இரும்புக்கூரையால் வேய்ந்திருந்தார்கள். என்னதான் இறுக்கமாய் வேய்ந்திருந்தாலும் இவ்வாழ்வை வெறுத்து சாக முடிவெடுத்தவன் பாதுகாப்பு வளையத்தை உடைத்தாவது குதித்து செத்துப்போவான். சாகாமலிருக்கத்தான் முடிவெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். நாம் ஏன் வந்திருக்கிறோமென்று தெரியவில்லை. ஆனால் வந்திருக்கிறோம். வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே என்று வாழ்வோடு இயந்து மரணத்தை அது வரும்போது ஏற்றுக்கொள்ளலாம். இது மாதிரியான மலைக்குன்றுகளுக்கு வரும்போது இயற்கையின் மீதான தீராத காதல் மேலும் மேலும் அதிகரித்துவிடுகிறது. இவற்றின் எல்லையில்லா அழகில்தான் வாழ்வின் அர்த்தம் புதைந்திருக்கிறது. இதைப் பார்த்தே பார்த்த நினைவுகளிலேயே வாழ்வது அளப்பரியது.
இந்தப் பள்ளத்தாக்குகளில் குரங்கள் சூழ்ந்திருந்தன. அவை கர்ணம் தப்பினால் மரணம் போன்ற இடங்களில் சர்வசாதாரணமாய் அமர்ந்துகொண்டு வருவோரிடம் உணவுகளை சாகவாசமாய் வாங்கிச் சாப்பிட்டபடியிருந்தது. அதற்கு குடும்பப் பிரச்னை காதல் பிரச்னை எதுவும் இருக்காது போலிருக்கும். அதற்கு மரணப்பள்ளத்தாக்குதான் வாழுமிடமாகயிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
அப்புறம் அங்கிருந்து சேதுவராயன் மலைக்குச் செல்ல முடிவெடுத்து அங்கு போய்விட்டோம். சேலத்தின் வெயில் அங்கு ஒரு துளியளவுகூட இல்லாமலிருந்தது. ஆனால் பனிக்கட்டிகள் காற்றில் கரைந்துவிட்டதுபோல் ஜில்லென்ற காற்று எங்கள் உடலுக்குள் புகுந்து எங்களை குதூகலப்படுத்தியது. அதீத உற்சாக மனநிலைக்குச் சென்றோம். வெண்சுருட்டை குளிருக்கு புகைப்பதுபோல் நானும் பாவும் மாறி மாறிப் புகைத்தோம். அப்புறம் ஒரு சுரங்கப்பாதைக்கு கூட்டிபோனார் பாபு. அதற்குள் கூனல் மனிதனைபோலத்தான் செல்ல முடிகிறது. ஒரு பூசாரி அந்த இருட்டுக் குகைக்குள் இரு சாமி சிலைகளின் முன் நின்றுகொண்டிருக்கிறார். சிலைகளின் பெயர் ஆண் பெருமாளென்றும் பெண் காவேரியென்றும் கூறினார் பூசாரி. பெருமாளுக்கும் காவிரிக்கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை. முன்பொரு காலத்தில் தலைக்காவிரி பாய்ந்து இந்தக் குகை பிறந்ததாகவும் இன்னமும் தலைக்காவிரி நீர் குகையினடியில் வருவதாகவும் என்ற தகவலையும் சொன்னார். அவர் சொன்னதுபோல் குகையின் தரைகளில் அப்படியொரு சீதளத்தை உணரமுடிந்தது. இன்னமும்கூட அதை நினைத்துவிட்டால் பாதங்கள் ஜில்லிடுகின்றன.
மனைவி ஞாயிற்றுக்கிழமையும் எழுத வேண்டுமா என்கிறாள். எழுத்தாளரென்றால் எழுதத்தான் வேண்டுமென்றேன்.ஞாயிறாயிருதாலென்ன திங்களாயிருந்தாலென்ன நாளை மற்றொருமொரு நாளே என்பது அவளுக்கு எங்கு தெரியப்போகிறது.சீக்கிரம் முடியுங்களென்றாள். மின்விசிறியின் சுழற்சியில் வெப்பக்காற்றை அனுபவிக்க முடியவில்லையென்கிறாள்.
Saturday, May 15, 2010
அய்யப்ப மாதவன் : சொற்கப்பல்- தக்கை தமிழ் நீண்ட கதைகள் விமர்சனம் பதிவு 3
நிரம்பிச் சூழ்ந்திருந்த வெயிலின் ஊடாய் வளைந்து நெளிந்து முபாரக் தன் கை வித்தைகளால் ஒரு பழையவீட்டின் முன்பு நிறுத்தினார். உள்ளே கூட்டிபோனார். அமரச்சொன்னார். அந்த வீட்டினுள் தங்கப்போகிறோமென ஆவல் மிகுதியிலிருந்தேன். வீட்டைச் சுற்றிலும் நோட்டமிட்டேன். மேற்கூரை மூங்கில்களால் அடைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் என்னவோ வெயிலில் காய்ந்த வீடும் குளிர்ந்திருந்தது. மூங்கில்கள் அரக்குநிறத்தில் தெரிந்ததினால் கண்கள் பரவசத்தில் ஆழ்ந்தன. அந்த நிறம் என்னவோ என்னை அவ்வளவு வசீகரித்தது. நண்பனுக்கு எப்படியோ தெரியவில்லை. அவனும் அறிமுகமில்லாத புதிய வீட்டினுள் மனம் ஒவ்வாத நிலையில் உட்கார்ந்திருந்தான். புதிய வீடு புதிய நட்பு புதிய தொடர்பென்றாலே இவ்வாறான் ஒவ்வாமை வருவது சகஜம்தான்.
எனை நோக்கி ஒரு மனிதர் ஐந்து அடிக்கு சற்று கூடுதலான சற்றே குண்டான உருவில் வந்தார். அவர் வரும்பொழுதே கணித்துவிட்டேன் அவர்தான் தக்கைபாபுவாக இருக்கவேண்டுமென. தன்னை பாபுவென அறிமுகம் செய்துகொண்டார். நான் அய்யப்பமாதவன் என்றேன். அவனை பால்நிலவன் என அறிமுகம் செய்தேன். நீங்கள் எந்தப் பால்நிலவன் என்று ஆழ்ந்த வியப்பில் கேட்டார். அவனும் எழுத்தாளர் பால்நிலவன் எனச் சொன்னார். உங்கள் பெயரில் ஒருவர் எழுத்தாளர் எனச் சொல்லி ஒரு பெண்ணிடம் பழகியதாகவும் அதனால் அந்தப் பெண்ணிற்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். அந்தப் பெண் பாவுவைத் தொடர்புகொண்டு பால்நிலவனின் கைபேசி எண்ணைக் கேட்டபோது பாபுவும் என்னுடன் வந்திருக்கும் நண்பன் பால்நிலவனின் எண்ணைக் கொடுத்திருக்கிறார் விவரம் அறிந்திராமல்.
அந்தப் பெண்ணும் உண்மையான பால்நிலவனும் பேசி முடித்ததும் அந்தப் பெண் இந்தப் பால்நிலவன் வேறு என்றும் பால்நிலவன் என்ற எழுத்தாளர் பெயரை மட்டும் பயன்படுத்தி அந்தப் பெண்ணை வசியப்படுத்த முயன்றவனின் கீழ்த்தரமான எண்ணங்களையும் புரிந்துகொண்டாள். ஒருவரின் பெயரை அந்தப் பெயரின் புகழை இன்னொருவர் பயன்படுத்தி பலனைடையும் கொச்சையான செயல்களை என்னவென்று சொல்வது. அவனைப் போன்ற கேவலமான மனிதர்களால் நல்ல உள்ளம்கொண்ட பால்நிலவன் போன்ற எழுத்தாளர்கள் பாதிக்கப்படுவது சகித்துக்கொள்ளமுடியாததாகத்தானிருக்கிறது.
இந்தக் கதையாடல் முடிந்து சாப்பிட கூப்பிட்டுபோனார். சிக்கனா மட்டனா என்றார். சிக்கன் என்றோம். பசியாறிவிட்டு மலையேறும் திட்டத்தை பாவுவிடம் சொல்ல பாபுவும் அதற்கான முன் ஏற்பாடுகளை எவ்வித தடங்களுமில்லாமல் சத்தமின்றி செய்தார். சிவா என்கிற தங்கும் விடுதிக்கு அழைத்துப்போய் சற்று ஓய்வெடுங்கள் எனச் சொல்லிவிட்டு அவர் போய் ஒரு நண்பரை ஏற்காடு மலைக்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
நானும் படுத்தவுடன் தூங்கிப்போனேன். ஏற்காடு மலைபோகும் ஆசையிருந்தும் தூக்கத்தின் முன் அது தவிடுபொடியாகிவிட்டது. நன்றாக தூங்கிக்கொண்டிருந்த சமயம் நண்பன் எழுப்பினான். அவன் மலைக்குப் போவதில் திண்ணமாக இருந்திருக்கிறான். அவன் எழுப்பியிருக்காவிட்டால் நானும் ஏற்காடை தவறவிட்டிருப்பேன்.
பாபு அனுப்பிய இன்னொரு பாபு வந்திருந்தார். கூடவே அவருடைய பையன் வந்திருந்தான். அவனும் மொழுமொழுவென்று துருதுருவென்றிருந்தான். நால்வரும் ஓட்டுநரும் ஊர்தியில் ஏறி பயணமானோம். அடங்காத அபிலாஷையில் எப்போது மலையின் தொடக்கம் ஆரம்பிக்குமென்று பாவுவை கேட்டேன். இன்னும் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் என்றார். போகின்ற வழியில் இளநீர் வேண்டுமென்றேன். அப்புறம் நொங்கு வேண்டுமென்றேன். கேட்டதெல்லாம் வாங்கித் தரும் நல் மனிதராக இருந்தார் பாபு. இப்படியெல்லாம்கூட மனிதர்கள் இருக்கிறார்களென்றால் என்னால் புளகாங்கிதமடையாமல் இருக்கமுடியாது. ஆனால் ஊர்தியிலிருந்து எரிவாய் திடீரென காலியாக ஊர்தியை எரிவாயு நிலையத்திற்கு ஓட்டினார்கள்.
ஊர்தியின் சாளரத்தின் வழியே பற்பல வாகனங்கள் ஓடிச் செல்வதைப் பார்த்தேன். எதிரே இருந்த சிறுவன் அப்பாவின் கைபேசியை வாங்கி அதை நோண்டிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனிடம் நானும் பால்நிலவனும் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தோம். அந்தச் சிறுவனும் எங்களுக்கு சிறுகச் சிறுக நண்பனாகிக்கொண்டிருந்தான்.
எரிசக்தி நிரப்பபட்டு நீண்ட பெருமூச்சுடன் ஊர்தி மலைகளின் அடிவாரத்தை சீறித் தொட்டது. மலை தொடங்கியதுமே மலை என் கண்களில் வளர ஆரம்பித்தது. வானை நோக்கி சீறிப் பாயும் மரங்களை வியப்பில் தத்தளித்து கண்ணுற்றேன். மலைக்காடுகளைப் பார்த்து பல வருடங்களாயிற்று. மலைகளில் நுழைவதே ஒரு சாகசம்தான் மற்றும் மலைக்குள்ளிருப்பது உலக சுகதுக்கங்களிலிருந்து மறைந்துபோவதாகவும் உணர்வேன். வளைந்து வளைந்து மலையின் ஆகிருதியின் உடலுக்குள் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மலையின் உள்ளீடான தரிசனத்தில் அமைதியின் சலனமற்ற இதயத்தைக் காண்கிறேன். மலையின் தியானத்தில் பிறந்த அமைதியினிடையே என் மனம் மட்டும் என்னைவிட்டு பறந்திருந்தது. உள்ளிருப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எதை எதையோ. நான் மலைக் கனவிலிருந்து மீள உள் உரையாடலுக்குள் வந்தேன். சேலம் பாபு ஏற்காடின் பெருமைகளை விவரித்துக்கொண்டு வந்தார். ஏழைகளின் ஊட்டி இதுதானென உலகம் சொல்வதைச் சொல்லிவந்தார். எங்களுடைய கோடை வாசஸ்தலமென்றார். வாரமொருமுறை மலை ஏறிவிடுவோமென்றார். இங்குவருவதுதான் அவர்களுடைய தீர்ந்துவிடாத ஆவலென்றார். இப்படியே பேசி பேசி ஏற்காடின் சமதளத்தை அடைந்துவிட்டோம்
எனை நோக்கி ஒரு மனிதர் ஐந்து அடிக்கு சற்று கூடுதலான சற்றே குண்டான உருவில் வந்தார். அவர் வரும்பொழுதே கணித்துவிட்டேன் அவர்தான் தக்கைபாபுவாக இருக்கவேண்டுமென. தன்னை பாபுவென அறிமுகம் செய்துகொண்டார். நான் அய்யப்பமாதவன் என்றேன். அவனை பால்நிலவன் என அறிமுகம் செய்தேன். நீங்கள் எந்தப் பால்நிலவன் என்று ஆழ்ந்த வியப்பில் கேட்டார். அவனும் எழுத்தாளர் பால்நிலவன் எனச் சொன்னார். உங்கள் பெயரில் ஒருவர் எழுத்தாளர் எனச் சொல்லி ஒரு பெண்ணிடம் பழகியதாகவும் அதனால் அந்தப் பெண்ணிற்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். அந்தப் பெண் பாவுவைத் தொடர்புகொண்டு பால்நிலவனின் கைபேசி எண்ணைக் கேட்டபோது பாபுவும் என்னுடன் வந்திருக்கும் நண்பன் பால்நிலவனின் எண்ணைக் கொடுத்திருக்கிறார் விவரம் அறிந்திராமல்.
அந்தப் பெண்ணும் உண்மையான பால்நிலவனும் பேசி முடித்ததும் அந்தப் பெண் இந்தப் பால்நிலவன் வேறு என்றும் பால்நிலவன் என்ற எழுத்தாளர் பெயரை மட்டும் பயன்படுத்தி அந்தப் பெண்ணை வசியப்படுத்த முயன்றவனின் கீழ்த்தரமான எண்ணங்களையும் புரிந்துகொண்டாள். ஒருவரின் பெயரை அந்தப் பெயரின் புகழை இன்னொருவர் பயன்படுத்தி பலனைடையும் கொச்சையான செயல்களை என்னவென்று சொல்வது. அவனைப் போன்ற கேவலமான மனிதர்களால் நல்ல உள்ளம்கொண்ட பால்நிலவன் போன்ற எழுத்தாளர்கள் பாதிக்கப்படுவது சகித்துக்கொள்ளமுடியாததாகத்தானிருக்கிறது.
இந்தக் கதையாடல் முடிந்து சாப்பிட கூப்பிட்டுபோனார். சிக்கனா மட்டனா என்றார். சிக்கன் என்றோம். பசியாறிவிட்டு மலையேறும் திட்டத்தை பாவுவிடம் சொல்ல பாபுவும் அதற்கான முன் ஏற்பாடுகளை எவ்வித தடங்களுமில்லாமல் சத்தமின்றி செய்தார். சிவா என்கிற தங்கும் விடுதிக்கு அழைத்துப்போய் சற்று ஓய்வெடுங்கள் எனச் சொல்லிவிட்டு அவர் போய் ஒரு நண்பரை ஏற்காடு மலைக்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
நானும் படுத்தவுடன் தூங்கிப்போனேன். ஏற்காடு மலைபோகும் ஆசையிருந்தும் தூக்கத்தின் முன் அது தவிடுபொடியாகிவிட்டது. நன்றாக தூங்கிக்கொண்டிருந்த சமயம் நண்பன் எழுப்பினான். அவன் மலைக்குப் போவதில் திண்ணமாக இருந்திருக்கிறான். அவன் எழுப்பியிருக்காவிட்டால் நானும் ஏற்காடை தவறவிட்டிருப்பேன்.
பாபு அனுப்பிய இன்னொரு பாபு வந்திருந்தார். கூடவே அவருடைய பையன் வந்திருந்தான். அவனும் மொழுமொழுவென்று துருதுருவென்றிருந்தான். நால்வரும் ஓட்டுநரும் ஊர்தியில் ஏறி பயணமானோம். அடங்காத அபிலாஷையில் எப்போது மலையின் தொடக்கம் ஆரம்பிக்குமென்று பாவுவை கேட்டேன். இன்னும் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் என்றார். போகின்ற வழியில் இளநீர் வேண்டுமென்றேன். அப்புறம் நொங்கு வேண்டுமென்றேன். கேட்டதெல்லாம் வாங்கித் தரும் நல் மனிதராக இருந்தார் பாபு. இப்படியெல்லாம்கூட மனிதர்கள் இருக்கிறார்களென்றால் என்னால் புளகாங்கிதமடையாமல் இருக்கமுடியாது. ஆனால் ஊர்தியிலிருந்து எரிவாய் திடீரென காலியாக ஊர்தியை எரிவாயு நிலையத்திற்கு ஓட்டினார்கள்.
ஊர்தியின் சாளரத்தின் வழியே பற்பல வாகனங்கள் ஓடிச் செல்வதைப் பார்த்தேன். எதிரே இருந்த சிறுவன் அப்பாவின் கைபேசியை வாங்கி அதை நோண்டிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனிடம் நானும் பால்நிலவனும் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தோம். அந்தச் சிறுவனும் எங்களுக்கு சிறுகச் சிறுக நண்பனாகிக்கொண்டிருந்தான்.
எரிசக்தி நிரப்பபட்டு நீண்ட பெருமூச்சுடன் ஊர்தி மலைகளின் அடிவாரத்தை சீறித் தொட்டது. மலை தொடங்கியதுமே மலை என் கண்களில் வளர ஆரம்பித்தது. வானை நோக்கி சீறிப் பாயும் மரங்களை வியப்பில் தத்தளித்து கண்ணுற்றேன். மலைக்காடுகளைப் பார்த்து பல வருடங்களாயிற்று. மலைகளில் நுழைவதே ஒரு சாகசம்தான் மற்றும் மலைக்குள்ளிருப்பது உலக சுகதுக்கங்களிலிருந்து மறைந்துபோவதாகவும் உணர்வேன். வளைந்து வளைந்து மலையின் ஆகிருதியின் உடலுக்குள் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மலையின் உள்ளீடான தரிசனத்தில் அமைதியின் சலனமற்ற இதயத்தைக் காண்கிறேன். மலையின் தியானத்தில் பிறந்த அமைதியினிடையே என் மனம் மட்டும் என்னைவிட்டு பறந்திருந்தது. உள்ளிருப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எதை எதையோ. நான் மலைக் கனவிலிருந்து மீள உள் உரையாடலுக்குள் வந்தேன். சேலம் பாபு ஏற்காடின் பெருமைகளை விவரித்துக்கொண்டு வந்தார். ஏழைகளின் ஊட்டி இதுதானென உலகம் சொல்வதைச் சொல்லிவந்தார். எங்களுடைய கோடை வாசஸ்தலமென்றார். வாரமொருமுறை மலை ஏறிவிடுவோமென்றார். இங்குவருவதுதான் அவர்களுடைய தீர்ந்துவிடாத ஆவலென்றார். இப்படியே பேசி பேசி ஏற்காடின் சமதளத்தை அடைந்துவிட்டோம்
Thursday, May 13, 2010
சொற்கப்பல் - தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனம் ஒரு பதிவு- பகுதி 2

அய்யப்ப மாதவன்
.கிளம்புவதற்கு முன்பே சுட்டெரிக்கும் சூரியனைச் சமாளிக்க நெகிழிக் குவளையில் அடைக்கப்பட்ட ஐம்பூதங்களில் ஒன்றான நீரினை இரண்டு லிட்டர் அளவில் வாங்கிக்கொண்டோம். நான் மூவுருளிக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டதால் நண்பன் தண்ணீருக்கு செலவு செய்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றாக உள்ளுக்குள்ளேயே புரிந்திருந்தோம். அதனால்தான் எவ்வித சச்சரவுகளில்லாமல் பயணத்தை நிம்மதியாகத் தொடர முடிந்தது.
இருவரின் இருக்கை எண்களும் தாறுமாறாயிருந்ததால் 104 இருக்கை எண்ணுக்கு சொந்தக் காரரை தாறுமாறாய் மாறியிருந்த இருக்கையில் அமரச் சொல்லி தயவு கூர்ந்து கேட்டுக்கொண்டோம். அவரும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவ்விருக்கையில் செவ்வனே உட்கார்ந்து கொண்டு எங்கள் தொடர்வண்டி பேச்சுக்கு வழிவகுத்தார்.
எதிரே ஒரு வயதான கிழவி மற்றும் ஒரு பெண் அவளின் குழந்தை அவள் கணவனென உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தமிழ்மொழி பேசத் தெரியாதவர்கள் என்பதை அவர்கள் முகங்களிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் தெரிந்துகொண்டோம். அந்தக் கிழவியும் அந்தக் குழந்தையும் தூங்கிக்கொண்டிருந்தனர். குழந்தையும் கிழவியும் ஒன்று போலவேயிருந்தார்கள். கிழவிக்கு பல்லுப்போன குழந்தை வாய். குழந்தைக்கு பல்லில்லாத கிழவி வாய். வயதானவர்கள் மீண்டுமொருமுறை குழந்தையாய் மாறுவார்கள் என்பதற்கு இந்தக் காட்சியை எடுத்துக்காட்டாய் இயம்பலாம். நண்பன் குழந்தையை ஒரு பிரபஞ்சமென்று இயம்பினான். நானும் ஆழ்ந்து சிந்திக்காமல் ஆமோதித்தேன். குழந்தையைப் பற்றிய நானெழுதிய கவிதையொன்றை சொல்லிக் காண்பித்தேன். அவரும் அருமையாய் ரசித்து மகிழ்ந்தார்.
அந்தக் கவிதை
**
யாருடைய கைகளிலோ
ஒரு குழந்தை துளிர்க்கிறது
அதன் துள்ளலில் ஒரு மொட்டின் இதழ்கள்
எந்த மாயமுமில்லாது எளிமையில்
இயல்பில் விரிந்து மலர்கினறன.
**
அவன் கையில் தொகுப்பாய் வரக்கூடிய கவிதைகளைப் படிக்கக் கொடுத்தேன். அவனும் ஆர்வம் கொப்பளிக்க வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கினான். அவன் பதிலுக்கு படிக்க அவனுடை நேர்காணலைப் படிக்கத் தந்தான். அதில் அவனின் புகைப்படம் போட்டு வந்திருந்ததைப் பார்த்து உள்ளுக்குள் சிறிதாய் பரவசமடைந்தேன். நான் படிக்க அவனும் படித்தான். இடையிடையே கவிதையைப் பற்றி உணர்ச்சிகள் மோலோங்கப் பேசினான். நானும் அவன் அந்தப் புத்தகத்தில் கொடுத்திருந்த பதில்களில் அவன் சொல்லியிருந்த குட்டிக்கதைகள் பற்றி அவாவினேன். அவனும் சிறு புன்முறுவலுடன் மகிழ்ச்சி நீரோடையில் நனைந்துகொண்டான். மகிழ்ச்சி வெள்ளமென்றாலும் சொல்லமுடியாது. அது அடக்கமான சிரிப்பாக மகிழ்வாகயிருந்தது. அதான் நீரோடையென்று எழுதினேன்.
சேலம் போய்ச் சேரும் நேரம் பற்றி அறிய இருவரும் அதிக ஆவலில் நிரம்பி வழிந்தோம். அருகிலிருந்தவனைக் கேட்டபோது அவனுக்கு சரிவரச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு பயணி பதினொரு மணியெனச் சொன்னார். ஆக இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சேலத்தில் காலெடுத்து வைத்துவிடலாம். இதற்கிடையில் இறங்கியதும் எங்கு தங்குவது யாரைக் கேட்பது என்ற குழப்பமிருந்தது. நல்லவேளை இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும் தக்கை பாபுவின் கைபேசி எண் என்னிடமிருந்தது. கிளம்பும் முன் அவருக்கும் வருவதாகக் கைபேசியில் பேசியிருந்தேன். அவரும் காலை எட்டு மணிக்கு எங்களை அழைப்பதாயும் அப்போது தங்கும் விவரங்கள் கூறுவதாகவும் கூறினார். ஆனால் பாபு எட்டு மணிக்கு அழைக்கத் தவறிவிட்டார் அல்லது மறந்துவிட்டார். அவருக்கும் இதுவொன்றதானா வேலை. அவரை உண்மையில் போற்றிப் புகழவேண்டும். பின்னால் வரும் வரிகளில் அவருக்கான புகழாரங்களை அடுக்கவிருக்கிறேன். பிறகு நானே அவரை அழைத்து தொடர்வண்டியில் இருப்பதாகவும் மொரப்பூர் வந்துவிட்டதாகவும் சொன்னேன். அவரும் நல்லது. இறங்கியதும் பேசுங்கள் என்றார்.
நானும் நண்பனும் கவிதைகளையும் அவருடைய நேர்காணலையும் பேசி பேசிச் சேலத்தை நெருங்கிவிட்டோம். நண்பன் பாதிவரை கவிதைகள் படித்து மண்டை காய்ந்துவிட்டான். சூரியன் ஒரு பக்கம் தொடர்வண்டியின் வழியாய் அவனின் தலையைக் காய்ச்சியதுபோக பற்றாக்குறைக்கு நானும் என் கவிதைகளைக் கொடுத்து காய்ச்சிக்கொண்டிருந்தேன். ஒரு வேக்காடையே தாங்க முடியவில்லை. இரண்டு வேக்காடென்றால் என்னாவானென யோசித்துப்பாருங்கள். முற்றிலும் அவன் மூளையும் முகமும் சோர்ந்து தொங்கிப் போயிருந்த்ததைக் கண்ணுற்றேன். மீதியைச் சேலம் சென்று படிக்காலாமென்று மரியாதையாகக் கவிதைகளைத் திருப்பித் தந்துவிட்டான். நானும் அவனின் கடும்வெட்கையைப் புரிந்துகொண்டு வாங்கி வைத்துக்கொண்டேன்.
சேலம் சந்திப்பை அடைவதற்கான அறிகுறிகள் தென்பட நானும் நண்பனும் இறங்கிச் செல்லத் தயாரானோம். தொடர்வண்டியின் வேகம் மிதமாக மிதமாக சேலத்தின் வாயில்கள் மெல்லத் திறந்தன. ஒரு விசயம் சொல்லத் தவறவிட்டேன். நான் நீள்சதுர பெட்டியினுள்ளிருந்தபோது அதன் கழிவறைக்கு இருமுறை சென்றேன் ஒன்றுக்கிருக்க. ஆனால் நண்பன் அந்தப் பிரக்ஞையே இல்லாதிருந்தான். இவ்வளவுக்கும் இருவரும் மாறி மாறி நெகிழிக் குவளையைக் காலி செய்திருந்தோம். இப்படித்தான் ஒரு சிலபேர் ஒரு நாளக்கு ஒருமுறைதான் உடலின் உப்பு நீரை வெளியேற்றுகிறார்கள். அதற்கும் ஒரு பொறுமை வேண்டும்போலும்.
சேலம் எனக்குப் பழக்கப்பட்ட ஊர்தானென நண்பனிடம் சொல்லிவந்தேன். இதற்குமுன்பு ஜவுளித்துறை சம்பந்தமான தொழில் செய்ததாகச் சொன்னேன். ஆனால் தொடர்வண்டியில் சேலத்திற்கு மிகக் குறைந்த அளவே வந்ததாகக் கூறினேன். ஆனால் இறங்கியதும் ரயில்நிலையத்தில் பழைய பதிவுகளை மனம் சரிபார்க்கத் தொடங்கியது. அவ்விடங்களெல்லாம் மூளையில் பழைய நினைவுகளிலிருந்து மீண்டன. ஒரு கணத்தில் முழுக்க ஞாபகம் வந்துவிட்டது. என்றோ பார்த்த அதே சேலம்தான் என்று நினைத்தவாறு பாவுவை கைபேசியில் அழைத்தேன். பாபுவும் பக்காவாக நான்கு சக்கர உருளியை ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த ஓட்டுநர் முபாரக் எங்களைக் கண்டுபிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு போனார். சேலத்தின் சாலைகள் வெயிலில் வெள்ளை வைரங்களென ஒளிர்ந்தன. ஊர்தியின் சாளரங்களைத் திறந்துவைத்துக்கொண்டு அனல்காற்றை அனுபவித்தபடி போய்க்கொண்டிருந்தோம்.
நிகழ்வுக்கு முதல்நாளே வந்துவிட்டதால் நானும் நண்பனு ஒரு குளிர்ச்சியான திட்டமொன்று வைத்திருந்தோம். அந்தத் திட்டத்தை பாவுவிடம் போனதும் சொல்லிவிட எத்தனித்திருந்தோம். அடுத்தவற்றை நாளை பார்ப்போம் என்று தோன்றிவிட்டது நண்பர்களே... முகமெல்லாம் பிசுபிசுக்க கைகளால் துடைத்தவண்ணமெழுதிக்கொண்டிருக்கிறேன்.
அய்யப்ப மாதவன்: சொற்கப்பல் - தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனம் ஒரு பதிவு

சொற்கப்பல் – தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனக் கூட்டதிற்கு சென்றுவந்தேன். சேலத்தில் நடந்தேறிய ஒரு நாள் நிகழ்வில் பல்வேறு அனுபவங்கள் நாவல் விமர்சனம் படிக்கப்பட்டதின் வழியாகவும் கலந்துகொண்டவர்களின் வழியாகவும் அடையப் பெற்றேன்.
அதிகாலையில் கண்விழித்தேன். விடியலுக்கு சற்று முன்பாக விழித்தலென்பது இதுமாதிரியான பயணங்கள் நிகழும்போதுதான் நடந்தேறுகிறது. அதுவும் அதிகாலை ரயிலுக்கு முன்பதிவு செய்வதின் வழியாகத்தான் இது சாசுவதமாகிறது.
என்கூட அந்நேரத்தில் என் மனைவியும் அவள் திட்டமிட்டபடி விழித்துக்கொண்டாள். அவள் மாங்காடு மாரியம்மனைத் தரிசிப்பதாகத் திட்டம் போட்டிருந்தாள். நான் பல் துலக்க அவள் பல் துலக்க விடியலைப் போல சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தோம். கொட்டை வடிநீரை அந்நேரத்தில் சூடாகப் பருக காலை இன்னும் விருவிருப்பானது.
தேவையானவற்றை அடைத்து ஒரு தோள்பையைத் தயாராக வைத்திருந்தேன். ஆடையுடுத்தி வெளிக்கிளம்பியபோது நண்பன் எனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும் அவ்விடத்தின் அடையாளங்களையும் கூறினான். நானும் கிளம்பிவிட்டதாகவும் இன்னும் ஏறக்குறைய பதினைந்து நிமிடங்களில் அங்கு வந்துவிடுவதாகவும் அவனுக்குப் பதிலளித்தேன்.
மாடிப்படிகளில் இறங்கி வெளியேறியபோது மனைவி மாடியிலிருந்து பிரியா விடை கொடுத்துக்கொண்டிருந்தாள். எனக்கோ விருப்பமான பிரிவாக இருந்தது. எப்பொழுதும் அவளுடன் இருந்து ஒருவித சங்கோஜம் ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து இரு நாட்களுக்கு விடுதலையென நினைத்தபோது மனம் அல்லோல கல்லோலப்பட்டது.
முதுகில் வலியுடன் கொண்டு சென்ற சுமையைத் தோள்களில் தொங்கவிட்டுக்கொண்டேன். இடதுபக்கம் அது என்னை ஒரு பக்கமாகச் சாய்த்து சுமையின் வலியை உணரச் செய்தது. போகின்ற வழிகளில் அன்றைக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்னமே ஓட்டிப்பார்த்துக்கொண்டே சென்றேன். நண்பனும் சொன்னவிடத்தில் நின்றுகொண்டிருந்தான் எழுத்தாளரின் பாவனையுடன் அதாவது ஒரு ஜோல்னா பையுடன். அவனை நான் விசாரிக்க என்னை அவன் விசாரிக்க அப்பொழுதின் தேவைக்கான சொற்றொடர்களை உதிர்த்துக்கொண்டோம்.
அரசாட்சி புரியும் முதல்வனைப் போல சரியான நேரத்திற்கு அரசு பேருந்து வரவில்லை. அரசனே அப்படியிருக்கும்போது அரசு பேருந்து அவ்வாறு திமிர்கொண்டு நடந்துகொள்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ரயில் போய்விடும் பயத்தில் ஒரு மூவுருளியை வாடைக்கு அமர்த்திக்கொண்டு சென்னை ரயில்நிலையத்தை அடைந்தோம். நண்பனிடம் ஒரு தேநீர் அருந்தவேண்டுமென்றும் ஒரு வெண்சுருட்டைப் புகைக்கவேண்டுமென்றும் கூறி இருவரும் ஒரு தேநீரைக் கடையைக் கண்டுபிடித்து பருகினோம். இல்லை இல்லை. அவன் கொட்டை வடிநீரைப் பருகினான். நான் தேநீரைப் பருகினேன். இப்படித்தான் எழுதும்போது நிறைய விசயங்கள் பொய்யாகிவிடுகின்றன. பொய்க்கு இடம்கொடுக்க விரும்பாமல் இந்தக் கட்டுரையை முடிந்தவரை பதிவுசெய்வதென ஊர்ஜிதம் செய்துகொண்டேன்.
அப்புறம் நான் ஒரு வெண்சுருட்டை ரயில்நிலையத்தின் அருகில் வந்து பிடித்தேன் ரயிலை விட்டுவிடக்கூடாதென்ற முன் ஜாக்கிரதை உணர்வில். ஒருவழியாய் நாங்கள் போகும் ரயில் பெயரைச் சுமைதூக்கும் தொழிலாளியிடம் சொல்லி நடைமேடை எண்ணை பதினொன்று என்று அறிந்துகொண்டு அம்மேடையை நோக்கி மனித நெரிசலுக்குள் புகுந்து அடைந்தோம். ரயிலும் பயணிகளின் சுமையுடன் நின்றுகொண்டிருந்தது. ரயிலின் வெற்றுடலுக்குள் இருவரும் ஏறிக்கொண்டோம். ரயிலுக்கு இதயம் தோன்றியது. ஏனெனில் ஏறிய நாங்களிருவரும் கவிஞர்கள் இல்லையா. ரயிலின் வெற்றுடலுக்கு இதயத்தைத் தோற்றுவித்தோம்.
ரயில்பெட்டிகள் சரியான நேரத்திலிருந்து பிசாகமல் தங்களை அசைத்துக்கொண்டு இரைதேடும் பாம்பின் உடலென புறப்பட்டது. நாங்கள் ஒரு மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருப்பதைப்போல இருந்தோம். ஆனாலும் நாங்கள் சென்ற பாம்பின் உடலில் சாளரங்களிருந்தன. அதன் வழியே வெளியுலகின் பரவசத்தோடும் அருகிருக்கும் மனிதர்களின் அரவத்தோடும் சேலம் மாநகரை நோக்கிய எங்கள் பயணம் அவ்வளவு அருமையாய் எவ்வித சஞ்சலங்களுமற்று தொடங்கியிருந்தது.
இந்தக் கட்டுரையை எழுதுகிறபோது இன்றைய மதியம் குறுக்கிட்டுவிட்டது. மீதியை நாளை தொடரலாமென மனம் இயம்பிவிட்டது.
Subscribe to:
Posts (Atom)