Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Sunday, December 12, 2010

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்

டிசம்பர் 13 வெளிவரும் சாரு நிவேதிதாவின் 7 நூல்கள்

வெளியீட்டு அரங்கில் நூல்களின் மொத்த விலை ரூ 500 மட்டும்

தேகம்

நாவல்

ரூ.90

வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்தரவதையின் தொழில் நுட்பம் நுணுக்கமாக தொடர்ந்து மாறுதடைந்து வந்திருக்கிறது. சிதரவதைகள்மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாடுநிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மனச் அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம் அந்த உலகத்தை ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான்.

சரசம் சல்லாபம் சாமியார்

நித்யானந்தர் குறித்து

ரூ.85

மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். நித்யானந்தர் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்த்க நிறுவனமாக மாற்றியிருக்கின்றனர். தங்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் நிழல் நடவடிக்கைகள் எளிய மனிதர்களின் அந்தரங்கத்தை ஆழமாக காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு பிறழ்வுகொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக முன்வைக்கிறார்.

குமுதம் ரிப்போட்டரில் வெளிவந்து பரபரபாக வாசிக்கப்பட்ட தொடர் நூல் வடிவம் பெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சிறுகதைகள்

ரூ.60

சாருநிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களை தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினை கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத்தன்மையை இக்க்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.

கலையும் காமமும்

விவாதங்கள்

ரூ.100

சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிபராயங்களை பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாக சொல்லிக்கொண்டவையிலிருந்தே உருவாக்கபடுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மன நிலைக்கு ஒரு நிரூபணம்

மழையா பெய்கிறது

சர்ச்சைகள்

ரூ.95

சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.

கடவுளும் சைத்தானும்

கட்டுரைகள்

ரூ.60

சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்னுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.

கனவுகளின் நடனம்

சினிமா பார்வைகள்

ரூ.110

இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது.

சாரு நிவேதிதா

(முன்னுரையிலிருந்து)


Wednesday, December 8, 2010

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா


Dear All,


It takes immense pleasure in inviting you to my book release function on 13th December 2010 at காமராஜர் அரங்கம் between 6:00 pm to 10 p.m. Seven new books published by Uyirmmai Publications is being released in the event. The event will be honored by esteemed guests whom includes


Ms. கனிமொழி , MP

மிஷ்கின்

எஸ் . ராமகிருஷ்ணன்

Dr. நல்லி குப்புசாமி செட்டியார்

அ . நடராஜன்

ரவிக்குமார் M.L.A

குஷ்பூ

மனுஷ்ய புத்திரன்

தமிழச்சி

மதன் (கார்டூனிஸ்ட்)


I solicit your gracious presence on the occasion and request you to make it convenient to attend the function and make it a grand success.

I request you to kindly forward the Invitation online to our friends and well wishers.

Charu Nivedita

Address of the Venue :

Kamaraj Arangam

492, Anna Salai

Teynampet

Chennai

சாரு நிவேதிதாதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு

நாள் : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி

இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை

வெளியிடப்படும் நூல்கள் :

1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் - விவாதங்கள்
6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் :

  • கனிமொழி எம்.பி.
  • மிஷ்கின்
  • எஸ். ராமகிருஷ்ணன்
  • நல்லி குப்புசாமி செட்டியார்
  • ஏ. நடராஜன்
  • ரவிக்குமார் எம்.எல்.ஏ.
  • குஷ்பு
  • மனுஷ்யபுத்திரன்
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • மதன் (கார்டூனிஸ்ட்)


Thursday, July 29, 2010

சாருவால் வந்த நற்பலன்கள்


சாருவால் வந்த நற்பலன்கள்

பொதுவாக என் மனைவி எனது எந்த எழுத்துகளையும் படித்ததில்லை.திருமணமான புதிதில் ராமநேசன் எனது நண்பன் கதையை மட்டும் படித்து இருக்கிறாள்.பொதுவாக அவளுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை.அப்புறம் அவள் ஒரு mnc கம்பெனியில் வேலை கிடைத்து சென்றுவிட்டதால் நேரம் கிடைப்பதும் அரிதாகி விட்டது.எனது சம்பாத்தியத்தில் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என அவளுக்கு நன்கு தெரிந்து விட்டது.நானும் மர்மமாக இலக்கியம் ,எழுத்து என்று என்னால் முடிந்த வரை இயங்கி கொண்டு இருக்கிறேன்.இதையெல்லாம் விட்டுவிட்டு ஒழுங்காக சம்பாதிக்கும் வழியை பார்க்குமாறு பலமுறை என்னை எச்சரித்தும் கேட்கவில்லை.

ஒருநாள் அலுவலகத்தில் எப்படியோ கூகுளில் எனது ப்ளோக்கை கண்டுபிடித்து உடன்வேளைபார்க்கும் தோழிகளிடம் காட்டும்போதுதான் சாருவுக்கு நான் எழுதிய பதிலை படித்து விட்டாள். வீடு வந்தவள் என்னை விசாரிக்க தொடங்கினாள்.
உண்மையை சொல்லு சாயங்காலம் நீ வேலைக்கு போறியா இல்லை அவர் சொல்ற மாதிரி உயிர்மை ஆபீஸ் போய் கதை அடிச்சிட்டு இருக்கியா?இது முதல் கேள்வி.இந்த கேள்விக்கு பதில் சொல்லுவதற்குள் நான் அல்லாடிவிட்டேன்.அவர் சும்மா ஜாலிக்கு சொல்றார் என்றேன்.அவர் பெரிய எழுத்தாளர் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்றாள்.
அடுத்த கேள்வி டென் டி மற்றும் பெண்கள் பற்றியது...உனக்கு இன்னும் அந்த ஆசையெல்லாம் இருக்கா,பிச்சு போடுவேன்.
அப்புறம் அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு உன்னையல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் ?எழுதுறத விட்டு தொலைனாலும் கேட்கமட்டேன்னு சொல்ற?.நான் வாய் திறக்கவே முடியவில்லை.....

வீட்டில் இப்படி என்றால் நண்பர் கே.ஜே.அசோக்குமார் புனேயில் இருந்து போன் போட்டு சாயங்காலம் ஆனால் உயிர்ம்மையில் போய் சிரிச்சிட்டு இருக்கிங்கலாமே ? ஏன் என்று கேட்டு துயரபடுதுகிறார்.

ஏதோ துக்கம் விசாரிப்பது போல் சில நண்பர்கள் இதை எல்லாம் பாசிடிவாக எடுத்துகங்க ?என்று ஆறுதல் சொல்கின்றனர்...
இதற்கு நடுவே எனக்கு உண்மையான மன ஆறுதலாக இருந்த நண்பர்கள் இரண்டு பேர்.மாமல்லன் கார்த்தி,ஷங்கர்ராமசுப்ரமணியன்,
இருவரும்தான் தற்சமயம் விடுமுறை நாட்களில் அவர்கள் அறையில் இடம் அளித்து எனது புலம்பல்களை கேட்டு வருகின்றனர்.. அவர்களுக்கு நன்றி....

நண்பர் மாமல்லன் கார்த்தி சமீபமாக எனக்கும் நண்பர்கள் அபிலாஷ்,செல்வ.புவியரசன் எல்லோரையும் அழைத்து நல்ல விருந்து ஒன்றை அளித்தார்...மனம் விட்டு பலநாட்களுக்கு பிறகு பேசினோம்.
அவரது அறை குறித்து இங்கே சொல்ல வேண்டும்.அது ஒரு பின்நவினத்துவ அறை.முன்றாவது மாடியில் பாதி மொட்டைமாடி,பாதிஅறை. பத்துக்கு பதினைந்து இருக்கும் அவ்வறையில் குளிர்சாதன வசதி,மங்கலான விளக்குகள் ,ஸ்லொ ராக் இசை,கணினி வசதி என சூட் ரூம் போல வைத்துள்ளார் மாமல்லன்.நண்பர்களுக்காக தான் வாழ்நாளில் பாதியை அவர் செலவு செய்து இருக்க வேண்டும்.

என்ன சாருவை பற்றி பேச வந்து அவர் போலவே பேச ஆரம்பிக்கிறேன்.....இப்போதைக்கு விடைபெறுகிறேன் அதுதான் நல்லது எனக்கும் உங்களுக்கும்.....