Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, June 18, 2010

விஜய் மகேந்திரனின் சில கதைகள் சில பார்வைகள் - குமாரநந்தன்

இருத்தலின் விதிகள்

நகரத்து எழுத்தாளர்களின் புரிந்து கொள்ளாத மனைவியரைப் பற்றிய கதை. இந்த வகைக் கதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து இது தனித்து அனுபவம் என்பது மாதிரி எதுவும் இல்லை. ஒரு சிறுகதையை நாம் படிக்கும்போது அதில் எதிர் பார்க்கும் ஏதோ ஒரு விசயம் இதில் கிடைக்காமல் போய்விட்டதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ராமநேசன் எனது நண்பன்

ராமநேசனின் கேரக்டர் அசடு நாவலின் கணேசன் கேரக்டரை நினைவுபடுத்துகிறது. கதையாளரின் கேரக்டரும் ராமநேசனின் கேரக்டரும் ஒத்து வராமல் அவனை வெறுக்கிறார். பிரிதொரு காலத்தில் அவனைப் புரிந்து கொண்டு அவனுடைய திருமணத்துக்குச் சென்று வர முடிவு செய்கிறார். ஒரு செயலையோ அல்லது ஒரு நபரையோ புரிந்து கொள்ள மற்றவருக்கு குறிப்பிட்ட காலமும் அனுபவங்களும் அவசியமாயிருக்கிறது (என்ன காலத்திலும் என்ன அனுபவத்திலும் ஒரு சிலர் எதையும் புரிந்து கொள்ளாமல் போய்விடுவது வேறு விசயம்) என்பது இந்தக் கதையில் ஓரளவிற்கு வந்திருக்கிறது. ராமநேசன் ஒரு சாமியாரிடம் சீடராக சேருகிறான். ஆனால் அவர் போலி என்பதைத் தெரிந்து கொண்டு அங்கிருந்து திருச்சி வரை ஒரு வெங்காய லாரியில் வந்து அங்கிருந்து மதுரைக்கு நடந்தே வருகிறான். ஆனால் இது அந்த கேரக்டருக்கு ஒத்து வராத செயல். ராமநேசன் யாருடனும் எளிதாக ஒட்டிக் கொள்பவன். யாரையும் எளிதாக தன்வசப்படுத்தி தனக்குப் பிரச்சனை இல்லாமல் செய்து கொள்பவன். நிச்சயமாய் அவன் திருச்சியிலிருந்து மதுரை வரை நடந்து சென்றிருக்க மாட்டான்.



மழை புயல் சின்னம்

கதையின் ஆரம்பமும் அடுத்தடுத்த பத்திகளும் ஆழ்ந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருக்கிறது. ஜெனாலீனாவை முதன் முதலாகக் கோயிலில் சந்திக்கும் போது அவளுடைய உடைக¨ள் இவர் புகழ்கிறார். அவள் இவரைக் காதலிப்பதற்கு பிப்டி பிப்டி வாய்ப்பு இருப்பதாக சொல்லிச் செல்கிறாள். நகரத்துப் பெண்களைப் பற்றியும் நகரத்தாரின் காதல் பற்றிய புரிதல்களையும் இந்த வரிகள் சிறப்பாக உணர்த்தி விடுகின்றன. ஜெனாலீனாவை வாழ்நாள் முழுவதும் என்வசம் இருக்கச் செய்யும் எந்தச் சக்தியும் இப்போது யாரிடமும் இல்லை என்ற வரிகள் நகரத்துப் பெண்களின் மிதக்கும் மனநிலை அல்லது அவர்களின் கட்டற்ற சுதந்திர உணர்வை உணர்த்துகிறது.
அருகாமை ஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்ற வெறித்தனமான எண்ணத்தில் சுழலும் பரதேசிகள் என்ற வரிகளைக் கதாசிரியர் பயன்படுத்துகிறார். சக மனிதர்களைப் பற்றி இப்படி ஒரு பட்டவர்த்தனமான அபிப்ராயம் தேவையா என்று நெருடுகிறது. ஜெனாலீனா என்னிடம் தன்து காதலைத் துண்டித்துக் கொள்வதாகச் சொன்னாள். ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வதுபோல அவளது பேச்சு இருந்தது. காதலை இழக்கும் இடத்திலும் அதைப் பகடியாக்குவது கூட ஒரு நகரத்தின் மனநிலைதான் என்று நினைக்கிறேன். மேல் அதிகாரி போனில் கம் குவிக் என்று மிரட்டுவது கூட வாழ்க்கையின் அழுத்தத்தைத் தெரிவிக்கிறது.


கதையின் கடைசியில் சர்மிளாவின் கேரக்டர் அவசர அவசரமாக உள்ளே வந்தாலும் அவர் வந்துதான் இந்த நிகழ்வை ஒரு கதையாக மாற்றுகிறார். சர்மிளாவும் சாரதியும் காதலர்கள். சாரதியின் முன்னிலையிலேயே இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி பேசுவது சர்மிளாவின் குணமாக இருக்கிறது. இவர் ஜெனாலீனாவைக் காதலிப்பதையும் அவளின் நிராகரிப்பையும் அவளிடம்தான் சொல்கிறார். நட்பு காதல் என்று பிரித்துவைத்துக்கொண்டிருக்கும் எல்லைகளின் அடி ஆழத்தில் இருக்கும் பொய்மைகளை இந்த இடம் மிகப் பூடகமாகப் பேசுகிறது. ஒரு காதல் ஒன்றுமில்லாமல் போவதற்கும் ஒரு நட்பு காமத்தின் அழைப்பிற்கான அடையாளமாக மாறுவதற்கும் பெரிதாக ஒன்றும் நடக்கத் தேவையில்லை. ஒரு மழை பெய்தால் போதும் எல்லாமும் கரைந்து எல்லாமும் மாறிவிடுகிறது. ஒரு நகரத்தின் காதலை இந்தக் கதையின் இன்னொரு தளம் மிக அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்திவிடுகிறது. அந்த வகையில் இது விஜய மகேந்திரனின் சிறப்பான கதைகளில் ஒன்றாகச் சொல்லலாம்.
புயல் வெள்ளத்தினால் சென்னையில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளின் அவலத்தை நேரடி ஒளிபரப்பாக காட்டிக் கொண்டிருந்தனர் விளம்பரங்களுக்கிடையே என்ற வரி மீடியாக்களின் முதலைக் கண்ணீர் அபத்தத்தை எள்ளி நகையாடுகிறது. அதே சமயம் இந்த வரி கோபிகிருஷ்ணனின் கதை வரிகளை மிகக் கூர்மையாக நினைவுபடுத்துகிறது.


காலையில் குளிர் காற்று வீசுகிறது. சித்தாள்கள் வேலைக்குப் போக பஸ்ஸ¤க்குக் காத்திருக்கிறார்கள். நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல்தான் புயல் காற்றும் மழையும் ஆரம்பமாகிறது. ஏழு மணி செய்தியில் வெள்ளம் சூழந்த பகுதிகளைக் காட்டுகிறார்கள். பிறகு இவருடைய ஏரியாவிலும் வெள்ளம் வந்து விடுகிறது. அதையும் உடனடியாக டிவியில் காட்டுகிறார்கள் இதையெல்லாம் சற்று நிதானமாக கால அளவை கொஞ்சம் லாஜிக்காக அவதானித்து எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.


நகரத்துக்கு வெளியே

மழை புயல் சின்னம் நகரத்து இளம் பெண்களின் மனநிலையைப் பேசுகிறதென்றால் நகரத்துக்கு வெளியே இளைஞர்களின் காதல் வஞ்சகத்தைப் பேசுகிறது. சூரியப் பிரகாஷ் பிரியாவின் மனநிலையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவளை நீலநிறச் சுடிதார் அணிந்து வரும்படி வற்புறுத்துகிறான். அவன் கூப்பிட்ட இடத்துக்கு வர அவள் மறுத்து விடுகிறாள். என்ஜாய் பண்ண அலையுறான் என்ற ஸ்டேட்மெண்ட்டில் பெண்கள் விசயம் தெரிந்தேதான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிவிடுகிறார். பிரியா நிராகரித்தவனை அவள் அறையிலேயே தங்கியிருக்கும் பாக்கியலட்சுமி ஏற்றுக் கொள்கிறாள். (அவளுக்கு இந்த விசயம் தெரியாது. அவள் அப்பாவித்தனமாய் ஏமாந்து விடுகிறாள்.) பிரியா பாக்கியலட்சுமியை எச்சரிக்கும் முயற்சியை எடுத்திருக்கலாம். ஆனால் அவள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது.
பிரியா ஏற்கனவே காதலிக்க விருப்பம் தெரிவித்திருந்த விக்னேஷின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். பாக்கியம் கர்ப்பிணி ஆகிவிடுகிறாள். நகரத்துக்கு வெளியே இருக்கும் நர்சிங் கோமில் பாக்கியம் மீண்டும் பழைய பாக்கியமாக ஆக்கப்படுகிறாள். பிரியா அன்று அணிந்து வரவேண்டிய உடை குறித்து விக்னேஷ் போன் செய்து சொல்கிறான். நீல நிறச் சுடிதாரை ஒரு குறியீடாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால் அது முழுமையாக வெளிப்படாமல் இருக்கிறது. இந்தக் கதையும் நகரத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

அடைபடும் காற்று

கடிதங்களின் மூலமாகக் கதை சொல்லும் உத்தியை இந்தக் கதையில் பயன் படுத்துகிறார். முதியவர்கள் நகரில் தனித்திருப்பது. அவர்களின் அசுவாத் தளமான டிரைவ் இன் தியேட்டர் மூடப்பட்டு அங்கே ஒரு ரசாயணத் தொழிற்சாலை வரவிருப்பது. அமெரிக்காவில் வசிக்கும் மகன்கள் நகரத்திலிருக்கும் தங்கள் பெற்றவர்களின் வசிப்பிடங்களை தங்களுடைய வாழ்க்கைக்காக விற்கச் சொல்வது என்று இக்கதை முழுவதும் தற்கால நாகரீக சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிறது. இதை ஒரு கடித உத்தியில் எழுதாமல் வேறுமாதிரியில் எழுதியிருந்தால் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
விஜய் மகேந்திரனின் கதைகளில் நகரத்தின் உறுத்தல் எளிதாக மூச்சுவிட முடியாத இறுக்கம் பற்றித் தீவிரமாகப் பேசுகிறது. தனிப்பட்ட காதல் நட்பு பற்றிய விசயங்களைப் பேசினாலும் அதிலும் நகரம் தவிர்க்க முடியாத பங்காற்றுகிறது. இவரிடம் தென்படும் ஒரு சமூகப் பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது. சிலர் சமூகத்தைப் பாதிக்கிறார்கள். சிலரை சமூகம் பாதிக்கிறது. இவரை சமூகம் எப்படியெல்லாம் பாதித்தது என்பதுதான் கதைகளாக வெளிப்படுகிறது. நிறைய இடங்களில் கோபி கிருஷ்ணனை ஞாபகப்படுத்துகிறார். எடுத்துக் கொள்ளும் கதைகளை முடிந்தவரை மேலோட்டமாகவே சொல்ல முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. எந்தக் கதையிலும் எந்தப் பிரச்சனையும் தீவிரமாகப் பேசப்படுவதில்லை. அலங்காரமான கவித்துவமான வாக்கியங்கள் வெளிப்பாடுகளில் பெரிய நம்பிக்கை இல்லாவராகக் காண்கிறார். இந்த வகையான எழுத்து முறையை இவர் இன்னும் செம்மையாக ஆராய்ந்து
கையாண்டால் அதுவே இவருக்கு மிகப் பெரிய பலமாக அமைய வாய்ப்பிருக்கிறது.



Monday, June 14, 2010

நிலாரசிகனின் டைரிக்குறிப்புகள்



அன்புள்ள நிலாரசிகனுக்கு,

விஜய் மகேந்திரன் எழுதிக்கொள்வது. நலமாக இருக்கிறாயா? உன் புது வேலை எவ்வாறு உள்ளது? உன்னை முன்பு போல புத்தக கடைகளிலோ,இலக்கிய விழாக்களிலோ பார்க்க முடிவதில்லை.வலைப்பூவிலும் குறைவாகத்தான் இப்பொழுதெல்லாம் எழுதுகிறாய். அலுவலகம் உன் நேரங்களை எல்லாம் விழுங்கிக்கொள்கிறது என நினைக்கிறேன்.
“இருள் விலகும் கதைகள்” தொகுப்பைப் படித்துவிட்டு என்னை நேரில் சந்தித்தது பசுமையாக நினைவிருக்கிறது. உனது வலைப்பூவை அதற்கு முன்னர் படித்திருந்ததினால் எனக்கும் நீ அறிமுகமாகி இருந்தாய்!

ஆச்சரியம் என்னவெனில் சென்னையில் கணிணித்துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு இலக்கியம் என்றால் எட்டிக்காய் என நினைத்திருந்தேன். ஆனால் உன்னைப் போல சில நண்பர்கள் அங்கிருந்துகொண்டு தன்னாலான பங்கை ஆற்றி வருகின்றனர்.
சென்னைக்கு வந்து பத்தாண்டுகளாகியும் நீ இயல்பு மாறாமல் கவிதைகள்,கதைகள் என்று எழுதிக்கொண்டிருப்பது குறித்த மகிழ்வை உன்னிடமே சொல்லியிருக்கிறேன். நகரத்தின் பற்சக்கரங்கள் இலக்கிய வாழ்வின் நேரங்களை அகற்றிவிடும் தன்மை கொண்டது.பிழைப்புக்கு மாரடிக்கவே நமது பொழுதுகள் சரியாகிவிடும்.

உனது சிறுகதைத்தொகுப்பான “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” கொடுத்து ஐந்து மாதமாகிறது.இப்போதுதான் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஊர்ப்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற நம்பிக்கைதான்.
எனக்கு தொகுப்பின் முதல்கதையான “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இதன் வடிவமும் என்னைக் கவர்ந்தது. பழைய புத்தகக்கடையில் தேடி எடுக்கும் ஒரு டைரியில் இருந்து கதை ஆரம்பிப்பதாக எழுதி இருப்பது சிறப்பான உத்தி. சிறுமியின் டைரிக்குறிப்புகளை அவளது பாஷையிலே எழுதியிருக்கிறாய்!

இது ஒரு நல்ல சிறுகதைக்கான வித்தை. அது உனக்கு இந்தக் கதையில் கை வந்திருக்கிறது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும்,கடத்தப்பட்டு,விற்கப்பட்டு பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தப்படுவதமான கொடுமைகளை இக்கதையில் தோலுரித்துக்காடி இருக்கிறாய். வட இந்தியாவில் இவை அதிக அளவு நடைபெறுகின்றன.பாலியல் வக்கரம் மனிதர்களிடையே நச்சுக்காற்று போல பரவியிருக்கிறது.

டெல்லியில் ரயிலில் சந்திக்கும் பெண்ணுக்கும்,அவளது டைரியிலும் இதே போல் கதை இருக்க இருவரும் ஒருத்திதானா? என்றவாறு கதையை முடித்திருக்கிறாய். எந்த இடத்திலும் விரசம் இல்லாதவாறு நுட்பமாக எழுதியிருக்கிறாய்.
குழந்தைகள் உலகம் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் கணிசமாக இருக்கின்றன. பால்ய வயதின் நினைவுகளை அசைபோடும் கதைகளும். அவ்வகையில் “வேலியோரபொம்மை மனம்” என்ற கதையும் “ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு “ஏ” பிரிவு” கதையும் என்னைக் கவர்ந்தன.

“வேலியோர பொம்மை மனம்” கதை இலங்கையில் போரால் அநாதைகளாக்கப்படும் சிறுமிகளில் ஒருத்தியைப் பற்றிய உண்மை கலந்த புனைவு எனலாம்.
அப்பா,அம்மாவை வீட்டில் குண்டு விழுந்ததால் இழந்து ஒரே நாளில் அநாதையாகிவிடும் ஜெயா,வேலியோர முகாமில் இருக்கிறாள்.அந்த பிஞ்சு மனத்திற்கு அவள் அப்பா வாங்கிக் கொடுத்த கரடி பொம்மைதான் ஒரே ஆதரவு. அகதிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அவர்களோடு நின்று சாப்பிடுகிறாள். அவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும் இராணுவ வீரர்களில் ஒருவன் இவள்மீது வெறுப்பைக் காண்பிக்கிறான்.பொம்மையை பிடுங்கி வைக்கிறான். இறுதியில் ஜெயாவுக்கு அளிக்கப்படும் இரண்டு ரொட்டித்துண்டுகளை வாங்கியவள்,வீரனுக்கு அவற்றில் ஒன்றைக் கொடுக்க அவன் நெகிழ்ந்து உடல் நடுங்குகிறான். மனித உணர்வுகளை நுட்பமாக பேசியிருக்கிறாய்.

இந்தக்கதையை படித்தபோது சிறுமி ஜெயா எங்கிருக்கிறாள் என தெரிந்தால் என் வீட்டிற்கு அழைத்து வந்து விடலாமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு தத்ரூபமாக அமைந்திருக்கிறது இந்தக்கதை.

சிறுவயதில் நம்முடன் படித்த நண்பர்களை,நாம் இழந்த உறவுகளை,விளையாடிய பொழுதுகளை(உம்.கிளியாந்தட்டு) நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது உனது கதைகள்.
சத்யம் தியேட்டரில் குவாலிட்டு walls வாங்கி சாப்பிடுபவர்களுக்கு “சேமியா ஐஸ்”ஸின் அருமை தெரியுமா? சேமியா ஐஸ் கதையில் வரும் சிறுவன் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடி அவற்றை ஐஸ்காரனிடம் கொடுத்து சேமியா ஐஸ் வாங்கி தின்கிறான்.
அவனது சித்தியால் அடிபடுகிறான். அதன்பிறகு திருந்தினானா என்றால் ஐஸ் வண்டி வரும் சத்தம் கேட்டவுடன் வாங்கிய அடி மறந்துபோய் சித்தியின் புதுச்செருப்பைக் கண்டு சிரிப்பதாக கதையை முடித்திருக்கிறாய்!

அந்த வயதுக்குள்ள சேட்டைகள் அது! “வால்பாண்டி சரித்திரமும்” அப்படி ஒரு சேட்டைக்கார பையனின் கதையே!
தொகுப்பின் கடைசிக்கதையான “மை லிட்டில் ஏலியன் ப்ரண்ட்” எனக்குப்பிடித்திருந்தது.எடுத்த எடுப்பிலேயே இது fantasy கதை என்பதை படிப்பவர்களுக்கு உணர்த்தி விடுகிறாய். இதன் வடிவ ஒழுங்கு,கதை கூறல் முறை,விவரணைகள் எல்லாம் துல்லியமாக அமைந்துள்ள கதை. சாரு நிவேதிதா கூட இக்கதையை படித்ததில் பிடித்ததாக அவரது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
50 வருடங்களுக்கு பிறகு வரும் நூலுக்கு ஒருவன் விமர்சனம் எழுதுவதாய் கதையை அமைத்திருக்கிறாய்.அமெரிக்காவில் fantasy நாவல்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையையும் வெளிவரும் முதல் நாளே முன்பதிவு செய்து எவ்வாறு முண்டியடித்துக்கொண்டு வாங்குகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளாய். முழுக்க புனைவாகவே ஒரு கதையை நகர்த்திச்செல்ல நல்ல கற்பனை வளம் தேவை. அது இருக்கிறது உன்னிடம்.

மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் உனக்குள் இருக்கும் நல்ல சிறுகதையாளனை இனம் காட்டுகிறது.தொகுப்பு பற்றி இருக்கும் விமர்சனங்களையும் நான் உனக்கு சொல்லியாக வேண்டும். உதாரணமாக “வேட்கையின் நிறங்கள்” கதையின் கரு வித்தியாசமானது. ஆனால் ஒரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளும் பெண்களின் மன உலகத்தை இன்னும் அழுத்தமாக நீ சொல்லியிருக்க வேண்டும். இது சொல்லப்பட்ட முறையின் கோளாறுதான். சில கதைகளை ஒன்றரை பக்கங்களில் முடித்திருக்கிறாய்.அப்படி எழுதக்கூடாது என்று வரையறையில்லை. ஆனால் விரிவாக எழுத வேண்டிய கதைப்பரப்பை சுருக்கக்கூடாது. உதாரணமாக ‘தூவல்’ என்ற கதையில் இறுதிப்பகுதிகளில்தான் உண்மையாக கதை துவங்குகிறது.ஆனால் சுருக்கமாக அந்தக்கதை முடிவடைந்துவிடுகிறது.
காதலில் தோற்று மும்பை போகும் அவன் பிழைப்பிற்காக ஈடுபடும் குற்றங்களை கூறுகிறாய். அதன்பிறகு கூலிப்படையில் சேருகிறான். அந்த அனுபவத்தை இன்னும் விரிவாக சொல்லி இருந்தால் கதைக்கு வேறு ஒரு தளம் கிடைத்து இருக்கும்.
முதல் தொகுப்பில் பெரும்பாலானவர்களுக்கு நேரும் பிரச்சினைதான் இது. இதை நீ கண்டுணர்ந்து செம்மைப்படுத்தினால் உனது கதைகளின் விகாசம் கூடும்.
பால்ய வயதில் நீ கண்டுணர்ந்த நண்பர்கள்,குழந்தைகள்,அனுபவங்கள் ஆகியவற்றின் தனிப்பட்ட டைரிக்குறிப்புகளைத்தான் எடுத்து கதையாக்கி இருக்கிறாயோ? என்று நினைப்பதற்கு ஏதுவாகவே தொகுப்பின் பெரும்பாலான கதைகள் இருக்கின்றன. புனைவு கலந்த டைரிக்குறிப்புகள் என்று கூடச் சொல்லலாம். உனக்குள் இருக்கும் படைப்பாளியை விட்டுக்கொடுக்காமல் கடந்த பத்தாண்டுகளாக சென்னை என்னும் பெருநகரத்தில் வசித்து வருகிறாய். கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றியும்,நுகர்வு கலாச்சாரம் மக்களை என்ன மாதிரியான சீரழிவிற்கு கொண்டு செல்கிறது என்பது பற்றியும் என்னிடம் நிறைய விவாதித்து இருக்கிறாய்!

அதைப்பற்றிய கதைகளை எப்போது எழுதப்போகிறாய்? நகரத்தின் மாறிவரும் பண்பாட்டு கூறுகள் பற்றியும் உன்னால் நல்ல கதைகளாக எழுதமுடியும்.
கவிதைகளில் காதலாக கசிந்து உருகும் நீ,ஏன் இன்னும் தீவிரமான காதல்கதைகளை எழுதவில்லை? உன்னுடைய கல்லூரிக்காலங்கள்,தொழிலின் பொருட்டு பார்த்த நகரங்கள்,உனது வெளிநாட்டு அனுபவங்கள் ஆகியவற்றை எல்லாம் உனது புனைவுலகத்திற்குள் எவ்வித மனத்தைகளுமின்றி கொண்டு வர வேண்டும். அப்போது வேறு ஒரு செழுமையான படைப்பாளி எங்களுக்கு கிடைப்பார். இந்தக் கோரிக்கையை மிக உருமையுடன் உன்னிடத்தில் வைக்கிறேன்.
திரிசக்தி பதிப்பகம் முதல் சிறுகதைதொகுப்பு என்று பாராமல் சிறப்பான முறையில் வடிவமைத்து உனது நூலை வெளியிட்டு உள்ளார்கள்.அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்

இணையத்தில் பெற: http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79

விலை: ரூ.70
-விஜய் மகேந்திரன்.

Monday, March 1, 2010

தேவை உடனடி விளம்பரம்

தேவை உடனடி விளம்பரம்


விஜய் மகேந்திரன்


சமீபகாலமாக சில எழுத்தாளர்களிடையே ஒரு விதி தொற்றிக் கொண்டு வருகிறது. மேடைகளில் பேச வேண்டிய தலைப்பை விட்டு, அதற்கு சம்பந்தமில்லாத செய்திகளை பேசுவது பெரும்பாலும் யாரையேனும் தனிப்பட்ட முறையில் தாக்குவது. இதனால் அவர்களுக்கு உடனடி விளம்பரம் கிடைப்பதே காரணமாகும். கொஞ்ச நாள் அவர்கள் பெயரே செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும். அது தொடர்பாக சில சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஜூன் 2009, 28, 27 தேதிகளில் கடவு அமைப்பு நடத்திய கருத்தரங்கு கூட்டம். இதில் கௌதம சித்தார்த்தன் கதைகள் பற்றிய கட்டுரை படிப்பதற்காக பங்கேற்பாளனாக நான் அழைக்கப்பட்டிருந்தேன். இக்கூட்டத்தை ஸ்ரீ ஷங்கர் என்பவர்தான் ஒருங்கிணைத்தார். புத்தகம் வந்து விட்டதா? கட்டுரை எழுதத்தொடங்கிவிட்டீர்களா? என்று போன் செய்து நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தார். இது மற்ற பங்கேற்பாளர்களுக்கும் பொருந்தும் சென்னையில் இருந்து செல்வபுவியரசன், அரவிந்தன் போன்றவர்களும் இதில் கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருந்தனர். சென்னையில் இருந்து மதுரை சென்று வருவதற்கான பயணத்தொகை கொடுப்பர்களா என்ற எந்த தகவலும் இல்லை.

கட்டளைகள் மட்டும் வந்துகொண்டே இருந்தன. மதுரை கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன், ஸ்ரீ ஷங்கர் போன் செய்து கட்டுரை எழுதிமுடித்து விட்டால் எங்களுக்கு முன்னரே அனுப்பி விடுங்கள் என்றார். நீ வராவிட்டாலும் உன் கட்டுரையை வேறு ஆளை வைத்துப் படித்துக்கொள்வோம் என்பதே அதன் அர்த்தம். கவலைப்படாதீர்கள் கட்டயமா வந்துவிடுவேன் என்றேன். கௌதம சித்தார்த்தின் நூல்கள் கூட்டத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போதுதான் கிடைத்தது. அவற்றில் இரண்டு இப்போது அச்சில் இல்லை. ஒரு வாரம் மிகுந்த சிரமத்துடன் பிரயாசைப்பட்டு கதைகளைப் படித்து உள்வாங்கினேன். கூட்டம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாள் தான் கட்டுரையை எழுதி முடிக்க முடிந்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு செல்லும் அவசரத்தில் பிரதி எடுக்க மறந்துவிட்டேன். மதியம் மூன்று மணிக்கு மேல் தான் நான், அரவிந்தன் (ஜே.பி.சாணக்ய கதைகள்), செல்வா.புவியரசன் (காலபைரவன் கதைகள்) கே.என்.செந்தில் போன்றவர்கள் பேச அழைக்கப்பட்டோம். கட்டுரையைப் படிக்க வேண்டாம் சாராம்சத்தை பேசினால் போதுமானது என்று அமைப்பாளர்கள் கூறியதால், அதிலுள்ள விஷயங்களை 20 நிமிடம் பேசிவிட்டு அமர்ந்து விட்டேன். நேரமில்லை எனக் கூறி மற்றவர்களும் குறைந்த நிமிடங்களே பேச அனுமதிக்கப்பட்டனர். பிறகு ஐந்து மணியளவில் சிறுகதைக் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இது நிகழ்ச்சிநிரலில் இல்லை. பிரபஞ்சன், எஸ்.ரா.நாஞ்சில்நாடன், ப.வெங்கடேசன் ஆதவன் தீட்சண்யா, என்று அமர்ந்த கூட்டத்தில் தமிழ் நதியும் திடீரென அழைக்கப்பட்டார். இதற்கு யார் காரணம் எனத் தெரியவில்லை. மற்ற நிகழ்வுகளிலும் பங்கேற்பாளராக தமிழ் நதி பெயர் கிடையாது. பார்வையாளராக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர் தமிழ் நதி. அவரும் தனக்கு கிடைத்த கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பவரைப் போல பேசத்தொடங்கினார். எந்த தமிழ் எழுத்தாளர்களும் ஈழமக்களுக்கு குரல் கொடுத்து எழுதவில்லை என. ஏதோ அவரின் புதிய கண்டுபிடிப்பு போல பேசத் தொடங்கினார். நான் இந்த இடத்தில் கேட்கிறேன். நீங்கள் ஏன் தமிழ் நதி உங்கள் புதிய குறு நாவலில் ஈழமக்களின் பிரச்சினைகளை எழுதாமல் காதல் கதையை எழுதினீர்கள். அது படைப்பாளியின் சுதந்திரம் என்று பதில் சொல்வீர்கள் என்றே நினைக்கிறேன். அதற்கு ஆதவன் எழுந்து பதில் சொல்லிப்போக, கூட்டம் இரண்டாக பிரிந்து சண்டையிடத் துவங்கியது. இலக்கியக் கூட்டத்தில் இரு பிரிவினையை உண்டு பண்ணிய பெருமை தமிழ் நதியையே சாரும்.
அப்புறம் என்ன வழக்கம் போல நாங்கள் இலக்கியம் பற்றிய பேசிய பேச்சுக்கள் காற்றோடு போனது. தமிழ் நதியே அடுத்த சில மாதங்களுக்கு மீடியாவில் ஹீரோயினாக உலா வந்தார். இன்று விகடனில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் போடுகிறார். குமுதத்தில் காபி ஷாப்பிற்கு சென்று வந்ததைப் பற்றி பேட்டி கொடுக்கிறார்.
மறுபடி என் கதைக்கு வருகிறேன். கட்டுரை வாசித்தவர்கள் அனைவரும் அக்கட்டுரைகளின் பிரதிகளை வெவ்வேறு இதழ்களுக்கு கொடுத்துவிட்டார்கள். தன் கதைகளைப் பற்றிய பதிவுகள் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது எனக் கூறி கௌதம சித்தார்த்தன் என்னிடம் கட்டுரை பிரதியை அனுப்பி வைக்குமாறும், அதை உன்னதத்தில் பிரசுரிப்பதகவும் கேட்டார். நான் ஸ்ரீ ஷங்கருக்கு போன் செய்து பிரதி எடுத்து கட்டுரையை அனுப்புமாறு கேட்டேன். கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை நூலாக்கம் செய்யப் போவதாகவும் அதனால் எந்த இதழ்களுக்கும் அனுப்பக் கூடாது எனக் கறாராகப் பேசினார். சித்தார்தனும் கேட்டுப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. நான் தேவேந்திர பூபதியிடம் பேசினேன். ஷங்கரிடம் சொல்லி இரண்டு நாட்களில் அனுப்பி வைப்பதாக கூறினார். இன்று வரை வரவில்லை.

நானும் விட்டுவிட்டேன். அரவிந்தன் சாணக்யாவின் கதைகளைப்பற்றிப் பேசிய கட்டுரை காலச்சுவடில் வந்தது. ரமேஷ்-பிரேம் பற்றிய கட்டுரை மணல் வீட்டில் வந்துள்ளது. கோணங்கி பற்றிய கட்டுரை கல்குதிரை இதழில் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ஷங்கர் இன்று வரை நான் எழுதிய கட்டுரையை முடக்கி வைத்துள்ளார்., இந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்? எனத்தெரியவில்லை.

சொந்தச்செலவில், கூட்டத்திற்கு சென்றும் ஒரு வாரம் உழைத்தும் ஒரு கட்டுரையை உருவாக்கி அது எங்கோ கிடைக்கிறது. எவ்விடத்திலும் கூட்டத்தில் பங்களிக்காத சிலரின் சட்டைப்பைகள் பணத்தினால் நிரம்பி வழிந்தன. அது எவ்வாறு எனவும் தெரியவில்லை.
சு.வேணுகோபால் இது மாதிரி பல கூட்டங்களில் பார்த்துவிட்டேன் என என்னிடம் குறைபட்டுக் கொண்டார்.

எனது புத்தக வெளியீடு நடத்த கூட்டத்திலும் என் புத்தகத்தை பேச வந்தவர், சில வரிகள் பேசிவிட்டு கீழே இறங்கிவிட்டார். நேரத்தின் அவசியம் கருதி. மீதமான அந்த நேரம் தான் புத்தகத்தை கிழித்து வீரவசனம் பேச இன்னொருவருக்கு வழி வகை செய்தது.

பேச வருகிறார்கள் இப்போதெல்லாம் புத்தகத்தைப் பற்றியோ, படைப்பாளி பட்டியோ பேச ஆர்வம் காட்டுவதில்லை. வீண்வம்புதான். காட்ட குஸ்தி தான். சமீபத்தில் தொடர்ந்து எழுதிவரும் வாமு.கோமு. எஸ்.செந்தில்குமார், இசை, இவர்கள் படைப்புகள் பற்றியெல்லாம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரையாவது வெளிவந்துள்ளதா? படைப்புகள், பற்றியும் படைப்பாளர்கள் பற்றியும் விவாதிப்பதை விட்டுவிட்டு எத்தனை காலங்களுக்கு வம்பளந்து கொண்டு திரியப்போகிறார்கள் என்பதே நான் வைக்கும் ஒரே கேள்வி.

Thursday, December 17, 2009

ஷோபாசக்தி



தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். "காண்டாமிருகம்","அபாயம்"(க்ரியா வெளியிட்டவை) போன்ற சிறு நூல்கள் செய்த இலக்கிய மாற்றங்களைக் கூட இப்பெரிய நூல்கள் செய்வதில்லை என்று எழுதியிருக்கிறார்.பெரிய நாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர் ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடுகிறது. இவ்வாறு பெரிய நூல்களில் நான் மலைத்து வாசிப்பதையே நிறுத்தியிருந்த சமயம் அது. அப்போது வாசிக்க கிடைத்த புத்தகம்தான் ஷோபாசக்தியின் "ம்". அவர் ஆணா,பெண்ணா என்பது கூட அப்போது தெரியாது. வாசிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துவிட்டது இவரது எழுத்து சர்வதேச தரம் வாய்ந்தது என்று. ஒரே மூச்சில் ஒரே இரவில் படித்து முடிக்கப்பட்ட 150 பக்க புத்தகம் "ம்". அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்நாவல் பற்றிய காட்சிப்படிமங்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் "வெலிகட சிறை உடைப்பு" பற்றி அவர் எழுதியுள்ள இடங்கள் எந்தப் பேரிலக்கியத்துக்கும் ஒப்பானது. அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விசாரித்தேன்.

அவர் ப்ரான்சில் வசித்துவருகிறார் எப்போதாவதுதான் இந்தியா வருவார் என்றும் கூறினார்கள். அவருக்கு ஒரு கடிதம் மின்னஞ்சல் செய்தேன். எப்பதிலும் இல்லை. பிறகு அவரின் நூல்களான "கொரில்லா","தேசத்துரோகி" போன்றவற்றைப் படித்தேன். "தேசத்துரோகி" சிறுகதைத் தொகுப்பில் "சூச்சுமம்" என்றொரு கதை உள்ளது. அவரது அபூர்வமான பகடிக்கு அக்கதையை சான்றாக கூறலாம். அவரைச் சந்தித்து ஒருநாள் பேச வேண்டும் என்று ஆவல் கூடிக்கொண்டே போனது.

அவருடைய நேர்காணல்களை அவ்வப்போது சிற்றிதழ்களில் படிப்பதுண்டு. போனமாதம் அம்ருதாவில் வந்த நேர்காணல் வரைக்கும் படித்துவிட்டேன். அவரது மேற்சொன்ன மூன்று நூல்களும் தீவிர இலக்கிய வாசகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவை.

அதன்பிறகு "வேலைக்காரிகளின் புத்தகம்" என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது,அதுவும் 150 பக்கம்தான். அதில் பல செறிவுள்ள கட்டுரைகள் இருந்தபோதும் "மதுக்குரல் மன்னன்" என்ற இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவை பற்றிய கட்டுரை,சிறந்த சிறுகதைக்கு ஒப்பானது. இலங்கையில் எண்பதுகளில் இருந்த இளைஞர்களின் மனநிலையின் சாட்சியாக இருந்து இக்கட்டுரையை எழுதியுள்ளார் ஷோபா சக்தி.

அதேபோல இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன விதானகே பற்றிய கட்டுரையும் முக்கியமானது. பிரச்சன விதானேகவுக்கு "செவ்வகம்" சிற்றிதழ் மூலம் சிறப்பிதழ் தயாரித்த எனது நண்பர் விஸ்வாமித்திரன் பெயரையும் கட்டுரையின் அடியில் குறிப்பிட்டிருந்தார்.

சமகால இலக்கியங்களையும்,திரைப்படங்களையும் பிரான்ஸில் இருந்தபடியே நுட்பமாக கவனித்து வருபவர் ஷோபாசக்தி என்ற எண்ணம் எனக்கு வலுப்பட்டது. நானும்,விஸ்வாமித்திரனும் சந்திக்கும் போது அவரைப் பற்றி விவாதிப்போம். ஆனால் திடீரென ஒரு நாள் எதிர்பாராதவாறு சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதை சொல்கிறேன்..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு சென்னையில் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதில்தான் ஷோபா சக்தியின் நூல்களை பதிப்பித்து வருபவரான நீலகண்டனை சந்தித்தேன். அவர் கடை போட்டிருந்தார். “அநிச்சி” மற்றும் “இன்மை” போன்ற சிற்றிதழ்களை வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட சில புத்தகங்கள் இப்போது இல்லை உங்களுக்கு விரைவில் தருகிறேன் என்று கூறினார். பிறகு அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைத்தேன்.அப்புறம் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “கருப்புப்பிரதிகள்” நீலகண்டன் குறித்து இவ்விடத்தில் சொல்ல வேண்டும். கடும் பொருளாதார நெரிக்கடிகளின் நடுவேயும்,தேர்ந்தெடுத்த புத்தகங்களை உரிய நேர்த்தியுடனும் தரத்துடனும் பதிப்பிப்பவர். அதோடு நின்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் அவரே சுமந்து கொண்டு போய் விற்று வருவார். கடுமையான உழைப்பாளி. இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுப்பான “எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு” கருப்புப் பிரதிகள் வெளியீடாக வருவதை அறிந்து நீலகண்டனை தொடர்பு கொண்டேன். புத்தகம் தயாரானவுடன் பிரதி தருவதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பிறகு மதியம் 12 மணியளவில் எனக்கு போன் செய்து தி.நகர் வருகிறேன் என்றார். பிறகு என் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். “எம்.ஜி.ஆர் கொலைவழக்கு” சிறுகதைத் தொகுப்பையும்,அழகிய பெரியவனின் கட்டுரைத்தொகுப்பான “மீள்கோணம்” புத்தகத்தையும் கொடுத்தார்.

ஷோபாசக்தி பற்றி அவரிடம் விசாரித்தேஎன். அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறார் என்றும் வரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு நீலகண்டனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இது அவரின் இயல்பு. இந்த இடைவெளியில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து இரண்டு நாட்களில் முடித்தும் விட்டேன். ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமை” என்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.

அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறது.

அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஆக்குமம்” என்ற கதை.பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.

அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.

“கொரில்லா” நாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.

வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நியூபுக் லேண்டிற்கு வாரம் ஒருமுறை போவது எனது வழக்கம். அவ்வாறு ஒருநாள் மதியம் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு அங்கு சென்றேன். கருப்புப் பிரதிகள் நீலகண்டன் புத்தககடையின் முகப்பில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தேன். ஷோபாசக்தியைப் பற்றி வழக்கம்போல பேச ஆரம்பிக்க,”அதோ இருக்கிறார் ஷோபா சக்தி” என்று அவர் கையை எதிர்புறமாக காண்பிக்க “எங்கே” என்று ஆவலுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாங்கள் நின்றிருந்த ரேக்கிற்கு எதிர்ப்புறம் கீழே அமர்ந்து புத்தகம் தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், சத்தம்கேட்டு என்னை நோக்கி ஓடி வர நான் அவரை நோக்கிப்போக எனது கையை இறுகப்பற்றிக் கொண்டார். நான் மதிக்கும் எழுத்தாளரான நண்பர் ஷோபாசக்தி.

வாழ்வில் நானோ அவரோ மறக்கமுடியாத தருணம் அது. ஏதோ பல ஆண்டுகள் பழக்கப்பட்டவர்கள் போல நாங்கள் பேச ஆரம்பித்தோம்.

எழுதுகிறீர்களா? Blog ஒண்ணு ஆரம்பிங்க” என்று சொன்னார். அதற்குப்பிறகுதான் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணமே எனக்கு ஏற்பட்டது. “பேஸ்புக்” என்ற நண்பர்கள் இணையதளத்துக்கும் அழைப்புக் கொடுத்து கூட்டிப் போனவரும் அவர்தான். புத்தககடைக்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றோம்.அங்கு கிட்டதட்ட அரைமணிநேரம் பேசினோம்.பிறகு அவருடன் நீலகண்டனும் சேர்ந்து கிளம்பிச் சென்றார்.

“உங்களை சந்திச்சதுல சந்தோஷம்,என் நம்பர் தேவைப்பட்டா நீலகண்டன்கிட்ட வாங்கிக்கங்க,நாம வாய்ப்பு இருந்தா பிரான்ஸ் போறதுக்குள்ள மறுபடியும் சந்திப்போம்” என்றபடியே விடைபெற்றார்.

பெரிய கலைஞர்கள் சிலரிடம் மட்டும் இந்த அன்பையும்,அரவணைப்பையும் கண்டிருக்கிறேன்.இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன்ன விதானேகயை ஒருமுறை விஸ்வாமித்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவருடைய திரைப்படங்கள் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. அதன்பின் “இரமத்தியமா” “புரவந்த களுவரே” போன்ற படங்களை பார்த்துவிட்டேன். சரியாக ஒருவருடம் கழித்து பிரச்சன விதானகேயை ஒரு திரைப்படவிழாவில் பார்த்தபோது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அவ்வளவு பெரிய கலைஞரா இவ்வளவு எளிமையுடன் இருக்கிறார் என்று. ஆனால் அவரோ என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டவராக தோளில் கைபோட்டபடி பேச ஆரம்பித்தார். வாழ்வியல் அறமும் முடிவற்ற நேசமும் தோழமையும் உண்மை கலைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது. அத்தகையவர்கள் இருவரை என் வாழ்க்கையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சியே.

ஷோபாசக்தியின் நூல்கள

1.கொரில்லா – நாவல் – அடையாளம் வெளியீடு

2.”ம்” – நாவல் – கருப்புப்பிரதிகள் வெளியீடு

3.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு – சிறுகதைகள் – கறுப்புப்பிரதிகள்

4.வேலைக்காரிகளின் புத்தகம் – கட்டுரைகள் – கறுப்புப்பிரதிகள்

5.தேசத்துரோகி – சிறுகதைகள் – அடையாளம்

5.Gorilla – Randam House Edition – Novel

6. இன்றெமக்கு வேண்டுவது சமாதானமே – பயணி வெளியீடு

7.ஷோபாசக்தி –தோழர் தியாகுவுடன் கலந்துரையாடல் – வடலி வெளியீடு(வெளிவரப்போகிற நூல்)

Wednesday, December 16, 2009

ஷோபாசக்தி

வாழ்வில் நானோ அவரோ மறக்கமுடியாத தருணம் அது. ஏதோ பல ஆண்டுகள் பழக்கப்பட்டவர்கள் போல நாங்கள் பேச ஆரம்பித்தோம்.

எழுதுகிறீர்களா? Blog ஒண்ணு ஆரம்பிங்க” என்று சொன்னார். அதற்குப்பிறகுதான் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணமே எனக்கு ஏற்பட்டது. “பேஸ்புக்” என்ற நண்பர்கள் இணையதளத்துக்கும் அழைப்புக் கொடுத்து கூட்டிப் போனவரும் அவர்தான். புத்தககடைக்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றோம்.அங்கு கிட்டதட்ட அரைமணிநேரம் பேசினோம்.பிறகு அவருடன் நீலகண்டனும் சேர்ந்து கிளம்பிச் சென்றார்.
“உங்களை சந்திச்சதுல சந்தோஷம்,என் நம்பர் தேவைப்பட்டா நீலகண்டன்கிட்ட வாங்கிக்கங்க,நாம வாய்ப்பு இருந்தா பிரான்ஸ் போறதுக்குள்ள மறுபடியும் சந்திப்போம்” என்றபடியே விடைபெற்றார்.
பெரிய கலைஞர்கள் சிலரிடம் மட்டும் இந்த அன்பையும்,அரவணைப்பையும் கண்டிருக்கிறேன்.இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன்ன விதானேகயை ஒருமுறை விஸ்வாமித்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவருடைய திரைப்படங்கள் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. அதன்பின் “இரமத்தியமா” “புரவந்த களுவரே” போன்ற படங்களை பார்த்துவிட்டேன். சரியாக ஒருவருடம் கழித்து பிரச்சன விதானகேயை ஒரு திரைப்படவிழாவில் பார்த்தபோது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அவ்வளவு பெரிய கலைஞரா இவ்வளவு எளிமையுடன் இருக்கிறார் என்று. ஆனால் அவரோ என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டவராக தோளில் கைபோட்டபடி பேச ஆரம்பித்தார். வாழ்வியல் அறமும் முடிவற்ற நேசமும் தோழமையும் உண்மை கலைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது. அத்தகையவர்கள் இருவரை என் வாழ்க்கையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சியே.
ஷோபாசக்தியின் நூல்கள
1.கொரில்லா – நாவல் – அடையாளம் வெளியீடு
2.”ம்” – நாவல் – கருப்புப்பிரதிகள் வெளியீடு
3.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு – சிறுகதைகள் – கறுப்புப்பிரதிகள்
4.வேலைக்காரிகளின் புத்தகம் – கட்டுரைகள் – கறுப்புப்பிரதிகள்
5.தேசத்துரோகி – சிறுகதைகள் – அடையாளம்
5.Gorilla – Randam House Edition – Novel
6. இன்றெமக்கு வேண்டுவது சமாதானமே – பயணி வெளியீடு
7.ஷோபாசக்தி –தோழர் தியாகுவுடன் கலந்துரையாடல் – வடலி வெளியீடு(வெளிவரப்போகிற நூல்)

Wednesday, December 9, 2009

என் எழுத்தாள நண்பர்கள் - பகுதி 2

ஷோபா சக்தி (தொடர்ச்சி)


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு சென்னையில் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதில்தான் ஷோபா சக்தியின் நூல்களை பதிப்பித்து வருபவரான நீலகண்டனை சந்தித்தேன். அவர் கடை போட்டிருந்தார். “அநிச்சிமற்றும்இன்மைபோன்ற சிற்றிதழ்களை வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட சில புத்தகங்கள் இப்போது இல்லை உங்களுக்கு விரைவில் தருகிறேன் என்று கூறினார். பிறகு அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைத்தேன்.அப்புறம் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “கருப்புப்பிரதிகள்நீலகண்டன் குறித்து இவ்விடத்தில் சொல்ல வேண்டும். கடும் பொருளாதார நெரிக்கடிகளின் நடுவேயும்,தேர்ந்தெடுத்த புத்தகங்களை உரிய நேர்த்தியுடனும் தரத்துடனும் பதிப்பிப்பவர். அதோடு நின்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் அவரே சுமந்து கொண்டு போய் விற்று வருவார். கடுமையான உழைப்பாளி. இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுப்பானஎம்.ஜி.ஆர்.கொலை வழக்குகருப்புப் பிரதிகள் வெளியீடாக வருவதை அறிந்து நீலகண்டனை தொடர்பு கொண்டேன். புத்தகம் தயாரானவுடன் பிரதி தருவதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பிறகு மதியம் 12 மணியளவில் எனக்கு போன் செய்து தி.நகர் வருகிறேன் என்றார். பிறகு என் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். “எம்.ஜி.ஆர் கொலைவழக்குசிறுகதைத் தொகுப்பையும்,அழகிய பெரியவனின் கட்டுரைத்தொகுப்பானமீள்கோணம்புத்தகத்தையும் கொடுத்தார்.

ஷோபாசக்தி பற்றி அவரிடம் விசாரித்தேஎன். அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறார் என்றும் வரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு நீலகண்டனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இது அவரின் இயல்பு. இந்த இடைவெளியில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து இரண்டு நாட்களில் முடித்தும் விட்டேன். ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமைஎன்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.

அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறது.

அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானதுஆக்குமம்என்ற கதை.பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.

அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.

கொரில்லாநாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.

வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நியூபுக் லேண்டிற்கு வாரம் ஒருமுறை போவது எனது வழக்கம். அவ்வாறு ஒருநாள் மதியம் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு அங்கு சென்றேன். கருப்புப் பிரதிகள் நீலகண்டன் புத்தககடையின் முகப்பில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தேன். ஷோபாசக்தியைப் பற்றி வழக்கம்போல பேச ஆரம்பிக்க,”அதோ இருக்கிறார் ஷோபா சக்திஎன்று அவர் கையை எதிர்புறமாக காண்பிக்கஎங்கேஎன்று ஆவலுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாங்கள் நின்றிருந்த ரேக்கிற்கு எதிர்ப்புறம் கீழே அமர்ந்து புத்தகம் தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், சத்தம்கேட்டு என்னை நோக்கி ஓடி வர நான் அவரை நோக்கிப்போக எனது கையை இறுகப்பற்றிக் கொண்டார். நான் மதிக்கும் எழுத்தாளரான நண்பர் ஷோபாசக்தி.

(தொடரும்)