Showing posts with label மணிரத்னம். Show all posts
Showing posts with label மணிரத்னம். Show all posts

Thursday, May 20, 2010

மணிரத்னத்தின் ராவணன் கதை சுருக்கம் மற்றும் படம் பற்றி




1987 ஆம் ஆண்டு நாயகன் ரிலீஸ் ஆனது.அந்த படம் போஸ்டர் டிசைன் முதல் எடுக்கப்பட்ட முறையிலும் கமலின் நடிப்பையும் வித்யாசப்படுத்தி காட்டிய படம். அந்த படம் வந்த போது ,நான் நன்காம் வகுப்பு மாணவன்.அந்த படத்தில் இருந்து மணிரத்னம் படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவனாகி போனேன்.

ராவணன் படம் பல எதிர்பார்புகளுடன் வெளிவர இருக்கிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியிருக்கும் படம் ராவணா. இந்தி படத்தில் அபிஷேக் பச்சனும், தமிழ் படத்தில் விக்ரமும் நாயகனாக நடித்துள்ளார்கள். நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ப்ரியாமணியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, டிரைலரும் வெளியாகி விட்ட நிலையில் கதை ராமாயணத்தின் தழுவலா, அல்லது வேறு மாதிரியானதா? என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காமல் இருந்தது. இப்போது ஒருவழியாக ராவணா படத்தின் கதை கசியத் தொடங்கியிருக்கிறது. ராவணா படம் ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம் கூறப்பட்டாலும்,

அதை நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் கதை அப்படி வித்தியாசமாக செல்கிறது. கதைப்படி போலீஸ் தேடுகிற குற்றவாளிதான் நாயகன் விக்ரம். அவருக்கு வைக்கப்படும் குறியில் அவரது தங்கை ப்ரியாமணி கொல்லப்படுகிறார். அந்த வெறித்தனமான கொலையை அரங்கேற்றியது போலீஸ் அதிகாரி பிருத்விராஜ். இதனால் கோபம் கொள்ளும் விக்ரம், ப்ருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்குகிறார். அவரிடம் இருந்து தப்பித்து, காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து ஒருவழியாக போலீஸ் கைக்கு கிடைக்கிறார் ஐஸ்வர்யா ராய். மனைவி கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராயை சந்தேகப்படுகிறார். அவனும், நீயும் ஒண்ணா காட்டுக்குள்ள சுத்துனீங்க. நீ சுத்தமா இருக்கியான்னு தெரியணும்... என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யா ராய் எடுக்கும் முடிவுதான் கதையின் இறுதிக்காட்சி. படத்தின் பெரும்பாலான பகுதி காட்டுக்குள்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயமாக இருந்தாலும், இப்போது வெளியாகியிருக்கும் கதையுடன் சேர்த்துப் பார்த்தால், மணிரத்னம் தனது ஸ்டைலில் இருந்து துளிகூட மாறாமல் படம் எடுத்திருப்பது உறுதியாகிறது.

a.r.ரகுமானின் பின்னணி இசை படத்தில் மிரட்டி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.வால்பாறை சுற்றியுள்ள காட்டு பகுதிகளில் படபிடிப்பு நடந்துள்ளது.
பிரபுவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக தமிழில் டப்பிங் பேசி நடித்துள்ளார்.விக்ரம் ஹிந்தி படத்திலும் சொந்த குரலில் பேசி உள்ளார்.தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் விக்ரம் இந்த படத்தை பெரிதாக நம்பி இருக்கிறார்.

படத்தில் மூன்றே பாடல்கள்தான்.உசிரே போகுது பாடல் இப்போதே டீ கடைகள் எங்கும் ஒலிக்க துவங்கி
இருக்கின்றது.ராவணன் வெற்றி பெற மணிரத்னம் மற்றும் அவர் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.