
சாரு நிவேதிதாவின் சான்றிதழ்.
''இந்த இட்த்தில் எனக்கு விஜய் மகேந்திரன் என்ற நண்பரின் பெயர் ஞாபகம் வருகிறது. அவருடைய ’நகரத்திற்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. அதில் உள்ள ஒரு கதையைக் கூட இலக்கியம் என்று சொல்ல மாட்டேன். உங்கள் வீட்டுக் குழந்தை ஏதோ ஒன்றைக் கிறுக்கிக் கொண்டு வந்து உங்களிடம் காண்பித்தால் அதை வாங்கி “வான் கோவைச் நீ அவமானப்படுத்தி விட்டாய்” என்று சொல்லி குப்பைக் கூடையிலா போடுவீர்கள்? அந்த மாதிரி சிறுகதைகள் அவை. இது பற்றி விஜய் மகேந்திரனை பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். இந்தக் கிண்டலை மற்றவர்களாக இருந்தால் அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொண்டு என்னைப் பகைவனாக நினைத்துத் தூக்கம் வராமல் அவதிப்பட்டிருப்பார்கள். இருந்தாலும் விஜய் மகேந்திரன் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப வந்து கதவைத் தட்டுகிறார். காரணம் என்ன? அவர் ஒரு டாக்டர். இளைஞர். ஏன் அவர் மாலை நேரங்களில் பெண்களை ஒதுக்கிக் கொண்டு டென்.டி போன்ற ப்ப்களில் ஒதுங்காமல் என்னையும் ஹமீதையும் வந்து பார்க்கிறார்? இலக்கியம் என்ற விஷயத்தின் மீது அவருக்கு இருக்கும் தீராத காதல். அதனால்தான் நானும் ஹமீதும் எவ்வளவு கிண்டல் செய்தாலும் திரும்பத் திரும்ப வந்து நிற்கிறார். என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.''
மேற்கண்ட பத்தி சாரு ப்ளோகில் அவர் என்னை பற்றி எழுதியது .பொதுவா எந்த இலக்கிய அரசியல் மற்றும் அக்கபோர்களில் நான் கலந்து கொள்ள விருப்பம் அற்றவன்.மேற்கண்ட பத்தியை முன்னிட்டு நிறைய நண்பர்கள் நான் சாருவுக்கு பதில் சொல்லி எழுத வேண்டும் என போன் செய்தனர்.கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பதில் சொல்லுவதே வேலையாக போய் விட்டது.
அதற்கான விளக்கத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்..சாரு என்னை நேரடியாக கிண்டல் செய்து ஒருபோதும் பேசியது இல்லை.என் கதைகள் குறித்து ஒருபோதும் அவரிடம் ஒருபோதும் உரையாடியது இல்லை.மாலை வேளைகளில் நான் ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறேன்...மனுஷ்ய புத்திரனை சனி,அல்லது ஞாயிறு தான் சந்திப்பேன்.அவரது வேலைபளு அப்படி.டென் டி பப்ப்களில் ஒதுங்க கூடிய அளவில் எனக்கு வசதி இல்லை.அல்லது ஸ்பான்சர்களும் இல்லை.அன்றாடம் எட்டுமணி நேரம் வேலை பார்த்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை மற்றும் எழுத்து பணிகளை செய்து வருபவன் நான்.
அப்புறம் யாருடைய சான்றிதழ் பெறுவதற்காகவும் நான் எழுதுவது இல்லை.அதே போல் சாரு கடந்த சில வருடங்களாக யாரையும் பாராட்டி எழுதியதும் இல்லை.மனுஷ்யபுத்திரனை நான் ஒரு வாசகனாக இருந்த காலத்தில் இருந்து அறிவேன்...அவர் ஒரு போதும் என் மனம் புண்படுமாறு என் கதைகள் குறித்து எந்த அபிப்ராயமும் சொன்னதில்லை...
சாரு அவர் என்னை கிண்டல் செய்து வந்ததாக குறிப்பிடுகிறார்.எழுத்தை விட்டு விலகி குடும்ப பிரச்சனைகள் சிலவற்றில் அல்லாடி இருந்த போது 2007 இல் எனக்கு போதிய மன தெம்பையும் தைரியத்தையும் அளித்து எழுத சொன்னது மனுஷ்ய புத்திரன்தான்.எனது முதல் தொகுப்பை சிறப்பான முறையில் வெளியிட்டு இன்று நாலு பேர் அறிய காரணமாகவும் இருந்தவரை இப்படி என்னை கிண்டல் செய்தார் என்று குறிப்பிடுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது.அல்லது இதுதான் வேலையா?அவருக்கு ஆயிரம் பணிகள் இருக்கிறது .
புத்தக கண்காட்சியில் எனது புத்தகத்தை ஆர்வத்தோடு இரண்டு இளம்பெண்கள் வாங்கி போனதாக தெரிவித்து ஊக்கம் அளித்தவர் சாரு...தொடர்ந்து எழுதுமாறும் விகடன் போன்ற வெகு ஜன இதழ்களில் கூட பங்களிக்குமாறும் சொன்னார்.இது ஜனவரி 2010 இல்.உண்மை இப்படி இருக்க இதற்கு என்ன பதில் சொல்லுவது.
கடைசியில்
என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.''
இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் எழுதிக்கொண்டு இருக்கிறான்.
என்.எஸ்.மாதவனின் ஹிக்விட்டா போன்ற ஒருகதையை நான் எழுதிவிட்டால் என்னோடைய எழுத்து பயணத்தை நிறுத்திவிட கூடும்...நண்பர்களே இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்....
பின்குறிப்பு
கடந்த சனி கிழமை காலையில் சாரு என்னிடம்தான் போன் செய்து எனது தொகுப்பின் பேரை கேட்டார்.மாலையில் எழுதிவிட்டார்.இரண்டுக்கும் நடுவே அவர் கூர்க் வேறு சென்றுகொண்டு இருந்தார்!!!!