Thursday, March 20, 2014

நரனின் ''ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் ''

நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு சமீபத்தில் நான் வாசித்த தொகுப்புகளில் மிகவும் வித்தியாசமாக உள்ளது .இவரது கவிதைகள் கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரலை மிக வன்மையாக முன் வைக்கிறது . கார்ப்பரேட்களின் சூழ்ச்சியால் கையககப்படுத்தப்படும் நிலங்கள் ,கனிமங்கள், இயற்க்கை வளங்கள் இவற்றுக்கான எதிர் வினையை ஒவ்வொரு கவிதையும் எவ்வித பிரச்சார நெடியுமின்றி முன் நிறுத்துகின்றன .இவரது கவிதைகளுக்கான மொழி எவ்வித சிக்கலும்,சிடுக்குகளும் இல்லாமல் எளிய ,நேர்த்தியான ,உரைநடையின் மிக அருகில் பயணம் செய்வது இந்த தொகுப்பின் வெற்றி. இத்தகைய நல்ல தொகுப்பை நல்ல வடிவமைப்பில் செறிவான ஓவியங்களோடு கொம்பு வெளியீடாக கொண்டு வந்த நண்பர் ,வெயில் பாராட்டிற்கு உரியவர் .இந்ததொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கவிதைகள் ....

1
கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை
அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுத தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென

2

இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன் .
ஜெலட்டின் குச்சி ;கரி மருந்து ; அழுத்த்துவிசை
காதை மூடிக்கொள் .
பலத்த ஓசை பொடி பொடிந்து …………
மூனறாம் நூற்றாண்டு சமண படுக்கையது .
புடைப்பு சிற்பத்தின் கையில் கூம்பு தாமரையை
சுமந்து நிற்க்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் - யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து .
குவாரி லாரிகளில் எற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் ,மார்பும் சமதாளமாக்கப்பட்டு வழவழப்பாக்கப்படும் .
இந்நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன. புடைத்த பிருஷ்டங்கள்.

No comments:

Post a Comment