Thursday, May 26, 2011

34 வயது பெண்ணின் வலது கை


கை கொடுக்கும் போதுதான் கவனித்தேன்

இரண்டு கீறல் தழும்புகள் அவளது

வலது கையில் இருந்தன,

சமையல் செய்யும் அவசரத்தில் கொதிக்கும்

எண்ணைப் பட்டதால் இருக்கலாம்

அவளது கணவனே சூடு

இழுத்ததாய் இருக்கலாம்

குழந்தைக்கு வைத்த வென்னீர்

கொட்டியிருக்கலாம்.

பஸ்ஸில் படியில் நீட்டிக் கொண்டு இருந்த கம்பி

கிழித்து விட்டுருக்கலாம்.

எப்படி ஆனது என்று என்னால்

அவளிடம் கேட்க முடியவில்லை.

ஆனால் அந்தக் கை மென்மையை

இழந்து சில வருடங்கள் ஆகிறது

என்பதை மட்டும் என்னால்

உணரமுடிந்தது அக்கணத்தில்.

5 comments: