Thursday, February 24, 2011

என் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கு

என் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கு ஒன்றை சாவடி இலக்கிய அமைப்பினர் மதுரையில் 6/3/2011,அன்று நடத்துகின்றனர்.மூத்த படைப்பாளிகளும்,இளைய படைப்பாளிகளும் இதில் பங்கேற்கின்றனர்..என் சிறுகதைகள் படித்த மதுரை நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.விரிவான தகவல்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.

மதுரையில் இருக்கக்கூடிய இலக்கிய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி “சாவடி” என்கிற
புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய தமிழ்ச்சூழலில்
முக்கியமானவர்கள் என்று சொல்லக்கூடிய இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு,
அவர்களின் படைப்புலகம் பற்றிய ...கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அவர்கள் மீது பரவலான
கவனிப்பை உண்டாக்குவதே இவ்வமைப்பின் நோக்கம்.

இதற்கு முன் கே.என்.செந்திலுக்கு முதல் கூட்டம் நடத்தப்பட்டது.இவ்வமைப்பினரால்.அதன் பதிவு மேற்கண்ட சுட்டியில் இணைத்துள்ளேன்.இரண்டாவது கூட்டம் எனக்கு நடக்கிறது.முதலில் தயங்கினேன்.பின் யுவா கிருஷ்ணா சொல்லுவது போல இலக்கியம் பரவலாக்கப்பட வேண்டும் என்று தான் ஒத்துக்கொண்டேன்.

No comments:

Post a Comment