Tuesday, October 12, 2010

மனுஷ்யபுத்திரன் குரலை நம்பும் ஜெயமோகன்

அக்டோபர் மாத உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கும்
'தேனீர் கோப்பையில் பெய்த மழை'
என்ற கட்டுரை தான் இம்மாதம் ஹாட் டாபிக்.வெறும் வாய்க்கு அவல் போட்டால் போல வெல்லத்தை போட்டுள்ளார்.ஜெயமோகன் குறித்த பகடிதான் கட்டுரையின் மையம்.அதனால் என்ன என்பவர்களுக்கு எனக்கு தேவையில்லாத நவீன இலக்கியத்தின் கொள்கை பரப்பு செயலாளர். என்ற பட்டத்தையும் கட்டுரையின் நடுவே கொடுத்துள்ளார்.

விஷயம் இதுதான் அடுத்த நாள் நடக்க போகும் ஷாஜியின் விமர்சன கூட்டத்திற்கு இளையராஜாவின் ரசிகர்கள் சிலர் வந்து கலாட்டா செய்ய போவதாக குறிப்பிட்டார்.அப்புறம் ரிஸ்க் எடுப்பது எல்லாம் மனுஷ்யபுத்திரனுக்கு ரஸ்க் சாப்பிடவது மாதிரி.. சண்டைகோழி விசயத்தில் இருந்து அவர்தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து வருகிறார்.சும்மா என்னை போல நண்பர்கள் சிலருக்கு சொல்லுவார் அவ்வளவுதான்...ஆக்சன் ப்ளாக் எல்லாம் அவர் முடிவுபடித்தான் நடக்கும்....

என்ன வித்தியாசமென்றால் இந்த முறை அந்த விஷயத்தை அறிவித்துள்ளார்.

ஜெயமோகன் தலைமையில் இளையராஜா ரசிகர்கள் ஷாஜியை கேரோ செய்யபோகிறார்கள்...என்றாராம்..எனக்கு அடி விழலாம் எனவே நான் வரமாட்டேன் ...என்று என்னிடம் பதற்றத்துடன் கூறியதாகவும்..ஒருமணி நேரம் கழித்து அவருக்கு வரிசையாக போன்கள் அவர் நினைத்தபடி வந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.அதற்கு முந்தைய நாள் ஷாஜி யும் ஜெயமோகனும் துளசி பார்க் ஹோட்டலில் தங்கி இருந்ததை நான் அறிவேன்.இந்த துளசி பார்க் ஹோட்டல் என் வீட்டுக்கு வெகு அருகில் உள்ளது.. ஜெயமோகன் பிரதாப் பிளாசா,துளசி பார்க் போன்ற ஹோட்டல்களில் தங்கினால் எனக்கு தகவல் வரும்...அதன் வெகு நாளைய கஸ்டமர் நான். ஜெயமோகனோடு நட்புடன் இருந்த காலங்களில் பார்த்து பேசியது உண்டு..இப்போது எந்த தொடர்பும் இல்லை.அவரும் சினிமா சம்பந்தமான நண்பர்களை பார்பதையே விரும்புகிறார்.
.
அதாவது இம்மாதிரியான விசயங்களை என்னிடம் சொன்னால் நான் நண்பர்களுக்கு எல்லாம் பரப்பி விடுவேனாம் ..அதற்குத்தான் இந்த கொள்கை பரப்பு செயலாளர் பட்டம் வேறு..அன்று என்னிடம் மனுஸ் சொன்ன மாதிரியே வேறு பலரிடமும் சொல்லி இருக்கிறார்.என்பதை பின்னால் அறிந்தேன்.இது ஒன்னும் புதிது அல்ல.அதை அவரே பொய் என்றும் அந்த கட்டுரையில் ஒத்து கொள்கிறார்.இப்போது பரப்பிலக்கிய செயலாளர் நவீன இலக்கிய உலகத்தில் யார் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும்...இதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் சிலர் என்னிடம் போன் செய்து கேட்கவே இதை எழுத வேண்டியாகி விட்டது.

தொடர்பில்லாமல் இருக்கும் ஒருவரின் விசயத்தில் நம்மையும் சேர்த்து எழுதினால் என்ன ஆகும்..அவரின் தேவையில்லாத கோபத்திற்கு நம்ம பலியாக வேண்டி வரும். ஜெயமோகனை கேட்கவா வேண்டும்...பத்து வருடம் பின்னால் உருவாகும் எதிரியை இன்றே அழிக்க முயலும் வசிஷ்டர்.சரி அவருக்கு போன் செய்து நடந்ததை கூறி விடலாம் என்று போன் செய்தேன்...

என் பெயரை கேட்டதும் நீங்கள் .ஏன் எனக்கு போன் செய்ய வேண்டும் என்றார்..விஷயத்தை விளக்கும் முன்னர் non sense முதல்ல போனை வைங்க என்றார் கோபத்துடன் [அறசீற்றம் ].

இது போக ஏன் இப்படி எழுதிருக்கிறார் மனுஷ்ய புத்திரன் உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனையா என்று பல போன் கால்கள் .பல யூகங்கள்.
சும்மா ஜாலிக்கு எழுதி இருப்பதாகவும் வேறுமாதிரி எடுத்து கொள்ள வேண்டாமென்றும் மனுஸ் எளிதாக சொல்லிவிட்டார்.
இருவரும் நாளையே இணையலாம். ஜெயமோகன் பேசியதை வைத்து பார்க்கும் போதுஅவர் மனுஷ்ய புத்திரனின் குரலையே நம்புகிறார்.என்பது தெளிவாகிறது.

என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..?.

1 comment:

  1. வேறு என்ன எழுத்தாளர்களை மதிக்காத பதிப்பாளர்கள் காலத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். ஆயிரம் கருத்து வேறுபாடு இருப்பினும் ஜெயமோகனை பற்றிய பகடி மனுஷ்யபுத்திரன் செய்திருப்பது சற்று அதிகம் தான் என நினைக்கிறேன், அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் மனுஷ்யபுத்திரனிற்கு , பழையதை எல்லாம் நினைத்துப் பார்க்க நேரம் இல்லை அவருக்கு,

    ReplyDelete