Saturday, June 18, 2016

திறமையுடைய ஒரு எழுத்தாளரை விமர்சன நோக்கின்றி மேலோட்டமாகக் கிண்டல் செய்வது சரியா?

விஜய் மகேந்திரன்


vijay mahein
விஜய் மகேந்திரன்

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் இன்றைய எழுத்து எழுச்சி சாதாரணமான ஒன்றல்ல. அவர் அளவுக்கு இலக்கிய உலகின் புறக்கணிப்பின் அரசியலை ஒருவர் சந்தித்து இருந்ததால் என்றோ இலக்கியமும் வேண்டாம் ! எழுத்தும் வேண்டாம் ! என்று ஓடியிருப்பார்கள். பன்முக அரசியல் தொடங்கி ஊடக அரசியல் வரை விரிவாக விவரிப்பது அவரது எழுத்து. அவருடைய புனைவு திறமைக்கு சமீபத்தில் வெளிவந்துள்ள ” நீல ஊமத்தம்பூ ” தொகுப்பை படித்து பாருங்கள்! குறைந்தது மூன்று கதைகள் உலகத் தரத்தில் உள்ளன. இத்தனை திறமையுடைய எழுத்தாளரை மேலோட்டமாக கிண்டல் செய்யும் போக்கு கவலைக்குரியது. அவரது ”ஆயுத வியாபாரத்தின் அரசியல் ” போன வருடம் வந்த மிகச் சிறந்த அ – புனைவு புத்தகம். நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

ஒரு காலகட்டத்தில் அவரது புத்தகங்களை பதிப்பிக்க சரியான பதிப்பாளர் கிடைக்காமல் அவரே பதிப்பித்து விநியோகம் செய்ய மிகவும் திணறினார். இவரது திறமையை அறிந்த எதிர் வெளியீடு அனுஷ் அந்த குறையை அற்புதமாக போக்கினார். நீங்கள் எழுத மட்டும் செய்யுங்கள்! மற்ற கவலைகள் உங்களுக்கு வேண்டாம் என்றார் . அதன் பிறகு அவரது புத்தகங்கள் அழகான வடிவமைப்பில் வர ஆரம்பித்தன. பரவலாக அனைவருக்கும் கிடைத்தன. சித்தார்த்தனின் எழுத்துக்களை கொண்டாடும் அன்பர்கள் உருவாக ஆரம்பித்தனர். .

அவரது புத்தகங்களை யாரை வைத்தும் அவர் வெளியிட்டுக் கொள்ளட்டடும். அது அவரது உரிமை. அதற்கு ஏன் இத்தனை நபர்கள் பதட்டமடைகிறார்கள் தெரியவில்லை. கிண்டல் செய்து போஸ்ட் போடுகிறார்கள் என தெரியவில்லை.

நான் பேசிய முதல் இலக்கிய கூட்டம் தேவேந்திர பூபதி நடத்திய கடவு அமைப்பின் கூட்டம். கௌதம சித்தார்த்தனின் மூன்று சிறுகதை தொகுப்புகளை மையமாக கொண்டு பேசினேன். அந்த உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சித்தார்த்தன் உங்களுக்கு நன்றாக விமர்சன கட்டுரைகள் எழுத வருகிறது . தொடர்ந்து விமர்சன பகுப்பாய்விலும் ஈடுபடுங்கள் என்றார். அதன் பிறகுதான் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்தேன்.

இப்படி என்னை மட்டுமல்ல சிற்றிதழ் சூழலில் பல இளைஞர்களை வளர்த்துவிட்ட பெருமை அவரையே சாரும். நான் சொல்கிறேன். அவர்கள் சொல்ல மாட்டார்கள். கௌதம சித்தார்த்தன் என்னும் எழுத்தாளர் ஆல மரத்தின் விழுது மாதிரி எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பார். அவரை விட்டு விட்டு தமிழ் தீவிர இலக்கியத்தின் வரலாறை வருங்காலத்தில் பேச முடியாது.

விஜய் மகேந்திரன், பத்திரிகையாளர்; இலக்கிய விமர்சகர்.
முகப்புப்படம்: புதூர் சரவணன்.

No comments:

Post a Comment