Saturday, May 2, 2020

நகரத்திற்கு வெளியே - விமர்சனம்

எதார்த்தங்களை பதிவு செய்யவும்,
தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒரு படைப்பு வாசிக்கப்படும் போது அது வாசிப்பர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், அந்த தாக்கம் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வில் நடந்து ஏதோ ஒரு நிகழ்வின் நினைவுகளுக்கு நிச்சயம் அழைத்து செல்லப்படுவார்கள்....

ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதே உண்மையான சிறந்த படைப்பாகும்... நகரத்தின்உள்ளே இருந்து கொண்டு
நகரத்தின் வெளியே சமகால மனிதர்களின் இத்தியாதிகளை மிக கச்சிதமாக சொல்லி இருக்கிறார் அண்ணன்...

ஒரு புத்தகம் படிக்க நேரும்போது
அவை நம்மை எந்த வகையில் பாதிக்கிறது என்பதிலேயே படைப்பின் வெற்றி இருக்கிறது...
அவ்வகையில் அண்ணன் விஜய் மகேந்திரன்
படைப்பு ஏக நிகழ்வுகள் என்னை மட்டுமல்ல மிகுதியான மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்தவையாக தான் இருக்கும்...

பெரும்பான்மை மனிதர்கள் தனது வாழ்வின்
இளமைக்காலங்களை
(குறிப்பாக 1990, 2000, 2010களில் ) நகரவாழ்க்கை அனுபவித்தவர்களாக தான் இருப்பார்கள்...
நகர வாழ்வு பெரும்பாலும் எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோருக்கு
நரக வாழ்வாகவே இருந்திருக்கிறது
தனியாக இந்த படைப்பு வாசிக்கும் போது தனிமையில் உங்கள் உதடுகள் மவுனமாக புன்னகைக்க நேரும் அனேகமான இடங்களில் படைப்பாளியின் அனுபவம் அவரது வெற்றியை அநேக வாசிப்பாளர்களிடம் கொண்டு சேர்த்து விடும்....

ஒரு படைப்பாளியின் வெற்றி,
தனது அனுபவத்தை வாசிப்பவரின் அனுபவத்தோடு ஒருங்கினைக்கவும் அந்த ஒரு வினாடியில் வாசகரின் முகத்தில் ஒளிரும் புன்னகை தான்.... அந்த வகையில் அநேக இடங்களில்
புன்முறுவல், வாய்விட்ட சிரிப்பு, சோகம் என பல்வேறு உணர்வுகளை என்னால் தன்னிச்சையாக(அனிச்சையாக ) வெளிப்படுத்த முடிந்தது....

#நகரத்திற்கு_வெளியே....
#விஜய்_மகேந்திரன்
 
வாசிக்க வாய்ப்பளித்த
அண்ணன்
விஜய் மகேந்திரன்
அவர்களுக்கு என நன்றி.... வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐 #லெனின்பழனியாண்டி

No comments:

Post a Comment