Saturday, August 6, 2011

அதிகாலையில் தொலைந்து போகும் காதலர்கள்


என் கருத்த ஆன்மா
உன் பளிங்கான
பால் மனதுடன்
கலந்து
பருகச்சிறந்த
தேநீர் ஆயிற்று.

தனித்தனி நூலாக
கண்டுகளில்
சுற்றிக்கிடந்த
நாம்
இணைந்து
இன்றிரவு ஆடையாய்
பரிணமிக்க இருக்கிறோம்.

கண்ணாடி குவளையில்
ஊற்றப்பட்ட
வோட்காவின் மேல்
மிதந்தலையும்
இரு செவ்வகவடிவ
பனிகட்டிகளாய்
கரைந்து
அமிழ்ந்து
வெளியெங்கும்
நிரம்புகிறது
திவ்ய போதை.

அதிகாலையில்
இந்நகரத்திலிருந்து
தொலைந்து போயிருந்தோம்
நாம்.
யாரும் அறியவில்லை.
நீ எனக்குள்ளும்
நான் உனக்குள்ளும்
ஒளிந்திருந்ததை.

4 comments:

  1. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. aiyayo...rainy day la ippadi kavithai ezhuthi..valiya kedukiringale Sir....(Lol)...
    Very opt for a week end...

    ReplyDelete