
செந்தமிழ் அறக்கட்டளை,மணப்பாறை --ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்
செந்தமிழ் அறக்கட்டளை,மணப்பாறை
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்
தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர்
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011
செந்தமிழ் அறக்கட்டளை (மணப்பாறை) வழங்கும் இந்த ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன்(வெட்டுப்புலி), வேலு சரவணன்(தங்கராணி),முனைவர். பா.அ. முனுசாமி(இராஜசேகர சரிதம்) ஆகியோரும்,
நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்(கண்ணாடிக்கிணறு),பொன்.இளவேனில்(மணல் சிற்பம்),அ.வெண்ணிலா(இரவு வரைந்த ஓவியம்).பா.சத்தியமோகன்(பெரிய புராணம்-நவீன கவிதையில்) ஆகியோரும்,
சிறுகதைப் பிரிவில் விஜய மகேந்திரன்(நகரத்திற்கு வெளியே),ஜனநேசன்(வாஞ்சை),உயிர்வேலி ஆலா(தொப்பக்கூத்தாடி) ஆகியோரும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 பெறுகிறார்கள்.
விருது வழங்கும் விழா 30-04-2011 மாலை 0600மணிக்கு,ஆளுனர் மாளிகையில் நடைபெறுகிறது.தமிழக ஆளுனர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்.
விழாவில் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப, ம.இராஜேந்திரன் (துணைவேந்தர் தமிழ்பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் இளம்பிறை ஆகியோர் விருதுக்கான நூல்களைத்தேர்வு செய்தனர்.
சீராளன் ஜெயந்தன் தமிழ்மணவாளன் சௌமா.இராஜரெத்தினம்
நிறுவனர் ஒருங்கிணைப்பாளர் நிறுவன அறங்காவலர்
ஜெயந்தன் இலக்கியப்பரிசுப்போட்டி செந்தமிழ் அறக்கட்டளை
வாழ்த்துகள் நண்பரே .
ReplyDeleteசிறுகதை பிரிவில் விருது பெறுவது அறிந்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
ReplyDelete