Sunday, February 1, 2015

செவ்வி இலக்கிய அமைப்பு

செவ்வி - அறிவிப்பு
------------------------------
 நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து "செவ்வி" என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளோம். "செவ்வி" அமைப்பின் சார்பாக அவ்வளவாக கவனம் பெறாத ஆனால் சிறந்த நூல்களை ஒவ்வொரு மாதமும் அறிமுகம் செய்கிறோம். பெரும்பாலும் இளம் எழுத்தாளர்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு நூல்கள் அல்லது தமிழில் அவ்வளவாக கவனம்பெறாத உலக புனைவு எழுத்தாளர்களை மட்டும் முதன்மைப்படுத்த போகிறோம்.
முதல் கூட்டம் வரும் பிப்ரவரி எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் மேற்கு கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடைபெறும். முதல் கூட்டத்தில் மூன்று நூல்களை பற்றி வாசகர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். மூன்று நூல்களை பற்றி சிறு அறிமுகத்தை இங்கு தருகிறோம்.

நாவல்:- சூர்ய ரத்னாவின் "பரமபதம்" என்ற நாவல் - அறிமுகப்படுத்தி பேசுபவர் விஜய் மகேந்திரன். சிங்கப்பூரின் பப் கலாச்சாரம் பற்றியும் ஆண் பெண் உறவின் நுட்பங்களையும் விவரிக்கிறது இந்த நாவல்

கட்டுரைத்தொகுப்பு:- வெ. நீலகண்டனின் "எமக்குத் தொழில் எழுத்து" - அறிமுகப்படுத்தி கே.என் .சிவராமன். எழுத்தை தொழிலாக கொள்ளாமல் உயிராக நினைக்கும் எழுத்தாளர்களை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

மொழிப்பெயர்ப்பு நாவல்:- ஸ்டீஃபான் ஜ்யேஸ்வேக் Stefan Zweig எழுதிய Royal Game என்ற நாவல் தமிழில் லதா ராமகிருஷ்ணன் மொழிப்பெயர்ப்பில்ராஜ விளையாட்டு என்று வெளிவந்துள்ளது. - அறிமுகப்படுத்தி பேசுபவர் விநாயக முருகன். அரசியல் ,அதிகாரம் நெருக்கடிக்குள்ளாகும்போது ஒரு மனிதன் எப்படி தனிமைச்சிறையில் தனக்கான ஒரு புனைவு உலகை சித்தரித்து கற்பனையில் வாழுகிறான் என்பதையும், புனைவுக்கும், அசலுக்குமான போராட்டங்களையும் நுட்பமாக சித்தரித்து எழுதப்பட்ட ஒரு நவீனத்துவ நாவல்.

செவ்வி இலக்கிய அமைப்பு
இடம் டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் 8/2/2015  ஞாயிறு நேரம் மாலை 4 மணி

அமைப்பை துவக்கி
வாழ்த்துரை
திரு. ரவி சுப்பிரமணியன்,கவிஞர், ஆவணப்பட இயக்குநர்
திரு இந்திரன்,கவிஞர், கலை இலக்கிய விமர்சகர்

அறிமுக உரை
விஜய் மகேந்திரன் -விநாயக முருகன்

விவாதிக்கப்படும் நூல்கள்
பரமபதம் - நாவல் - சூர்ய ரத்னா (தங்கமீன் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் -விஜய் மகேந்திரன்

எமக்குத் தொழில் எழுத்து -கட்டுரைகள் -வெ.நீலகண்டன்(சூரியன் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் - கே.என்.சிவராமன்

ராஜ விளையாட்டு -மொழிப்பெயர்ப்பு நாவல்:- ஸ்டீஃபான் ஜ்யேஸ்வேக்(புதுப்புனல் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் -விநாயக முருகன்

நூல் அறிமுகம் முடிந்தவுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு - மு.வேடியப்பன்